Breaking News

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு 15 வரு­டங்­க­ளாக யாப்பு இன்றி கட்­டுக்கோப்­பின்றி செயற்­ப­டு­கின்­றது

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு 15 வரு­டங்­க­ளாக யாப்பு இன்றி கட்­டுக்கோப்­பின்றி செயற்­ப­டு­கின்­றது என வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் தெரி­வித்தார்.

வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ந.சிவ­சக்தி ஆனந்தன் மற்றும் சி.சிவ­மோகன் ஆகி­யோரை கௌர­விக்கும் நிகழ்வு நேற்று முன்­தினம் வைர­வப்­பு­ளி­யங்­கு­ளத்தில் அமைந்­துள்ள முத்­தையா கலா­சார மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்,

பாரா­ளு­மன்ற தேர்­தலில் தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பை வெற்­றி­பெற செய்­த­ மக்­க­ளுக்கு நன்றி. கடந்த 30 வரு­ட­கா­லத்தில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற சொத்­த­ழி­வு­கள், உயி­ர­ழி­வுகள், காணா­மல்­போனோர் விவ­காரம், நீண்ட கால­மாக சிறையில் வாடும் அர­சியல் கைதி­களின் விவ­காரம், மீள்­கு­டி­யேற்றம், இரா­ணுவம் அப­க­ரித்­துள்ள காணி விவ­காரம் போன்­றவை எதிர்வரும் ஐந்து வருட காலத்தில் மிகுந்த சவால்­நி­றைந்த பணி­களாக இருக்கப் போகின்­றன.

ஐக்­கிய தேசிய கட்­சியும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ண­ணியும் இணைந்து ஒரு தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைத்­தி­ருக்­கின்­றார்­கள். ஆகவே இந்த தேசிய அர­சாங்கம் தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சினையை தீர்ப்­ப­தற்­கான ஒரு காத்­தி­ர­மான பணியை முன்­னெ­டுக்கும் என நம்­பு­கின்றேன்.

எமது அன்­றா­டப்­பி­ரச்­சினை­க­ளி­லி­ருந்து நிரந்­தர தீர்வை நிரந்­த­ர­மான அபி­வி­ருத்­தியை காண்­ப­தற்­காக இன்னும் நாங்கள் மிகக் கடி­ன­மாக உழைக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. நாங்கள் ஒன்­று­சேர்ந்து உழைக்­கின்ற போது நாங்கள் அந்த இலக்கை அடைய முடியும்.

இறுதி யுத்­தத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட மனித உரிமை மீறல் தொடர்­பாக ஒரு சர்­வ­தேச விசா­ரணை கோரியே தமிழ் மக்கள் எங்­க­ளுக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தார்­கள். ஆனால் எங்­களில் இருக்­கக்­கூ­டிய ஒரு ­சிலர் கூறு­கி­றார்கள் சர்­வ­தேச விசா­ரணை ஒன்று நடை­பெற்று முடிந்­து­விட்­டது.

மீண்டும் எதற்கு ஒரு சர்­வ­தேச விசா­ரணை என மக்­களை குழப்­பு­கி­றார்கள். எம்மில் சிலர் இப்­ப­டி­யான கருத்துக்­களை தெரி­விப்­பது எமக்கு மன வேத­னை­ய­ளிக்­கி­றது என தெரி­வித்தார்.

தமிழ் மக்­களை கொலை செய்­த­வர்­களே விசா­ரணை செய்தால் எமக்கு நீதி கிடைக்­காது. மஹிந்த ராஜ­பக் ஷ காலத்­திலே ஒரு ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்டு அந்த ஆணைக்­கு­ழுவின் அறிக்­கைகள் எல்லாம் கிடப்­பில் போடப்­பட்­டுள்­ளன. எந்த நீதியும் வழங்­கப்­ப­ட­வில்லை. கடந்த 60 வருட காலத்தில் தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நீதி வழங்­கப்­ப­ட­வில்­லை­யென்­பதை அனு­பவ ரீதி­யாக உணர்ந்­துள்ளோம்.

யுத்தம் முடி­வ­டைந்து ஆறு வரு­டங்கள் கடந்­து­விட்ட நிலையில் பல தாய்­மார்கள் தங்கள் பிள்­ளை­களை கண­வன்­மார்­களை தேடித்­தி­ரி­கி­றார்கள்.

இவர்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும். அதற்கு சர்­வ­தேச விசா­ரணை தேவை என வலி­யு­றுத்­த­வேண்டும்.

தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்­பா­னது பல­மான கட்­சி­யாக மாற்­றம்­பெற பதி­வு­செய்­யப்­பட வேண்டும். அதற்­காக குரல் கொடுக்க வேண்டும். தமிழ்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் தலைமையில் இன்­றைக்கு 15 வரு­டங்கள் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பிற்கு ஒரு யாப்பு இல்லை. எந்தவிதமான பலமான ஒரு கட்டமைப்பும் இல்லை. கூட்டமைப்பின் பேரால் ஒரு கட்சி தன் நலன்சார்ந்து செயற்படுவது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் மனக்கசப்புக்களை ஏற்படுத்தியி ருக்கிறது. ஆகவே தமிழரசுக் கட்சிக்கும் தலைவர் சம்பந்தனுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை பொதுமக்கள் வலியுறுத்த வேண்டும் என குறிப்பிட்டார்.