Breaking News

ஈழத்துக்கான வழிமுறைகளை ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் ஏற்படுத்துகின்றனர்

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் இந்த நாட்டில் நடை­பெறும் அனைத்து சம்­ப­வங்­களும் தனி ஈழம் ஒன்­றுக்­கான அறி­கு­றி­யா­கவே தென்­ப­டு­கின்­றன. அதற்­கான அனைத்து வழி­மு­றை­க­ளையும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்­றனர் என தூய்மையான ஹெல உறு­மய கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான உதய கம்­மன்­பில தெரி­வித்தார்.

உள்­ளக விசா­ரணைப் பொறி­முறை சர்­வ­தேச சதித்­திட்­டத்­துக்கு அமை­யவே முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. இலங்­கைக்கு ஆத­ர­வான நாடு­களை தலை­யிடவிடாது புலம்­பெயர் புலி­களின் தேவையை நிறை­வேற்றும் நோக்­கத்தில் புதிய முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தூய்மையான ஹெல உறு­மய கட்­சி­யினால் நேற்று கொழும்பில் நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

நாட்டில் பிரி­வி­னை­வாதம் தலை­தூக்க இடம் கொடுக்­கப்­போ­வ­தில்லை என அர­சாங்கம் தெரி­விக்­கின்­றது. ஆனால் இந்த அர­சாங்­கமே அதி உச்ச பிரி­வி­னை­வா­தத்­துக்கு முழு­மை­யான உத­வி­களை வழங்கி வரு­கின்­றது. விடு­த­லைப்­பு­லிகள் ஆயுதம் மூல­மாக இந்த நாட்டில் மிகப்­பெ­ரிய பிள­வினை ஏற்­ப­டுத்த முயற்­சித்த வேளையில் அதை எமது இரா­ணு­வமும் எமது அர­சாங்­கமும் முழு­மை­யாக அழித்து நாட்டை காப்­பாற்­றி­யது. எனினும் நாட்டை பிரிக்கும் ஆயுத போராட்டம் முடி­வ­டைந்­தாலும் அர­சியல் நகர்­வுகள் இன்றும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. தனி ஈழம் என்ற கொள்­கையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்­றது.

கடந்த ஜன­வரி மாதம் எட்டாம் திக­தி­யுடன் இந்த நாட்டின் பாது­காப்­புக்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டுள்­ளது. வடக்கில் இருந்து இரா­ணுவம் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளது. பாது­காப்பு வல­யத்தில் உள்ள காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. புலி­களை நியா­யப்­ப­டுத்தும் வேலைத்­திட்டம் ஆரம்­பிக்கப்பட்டுள்ளதுடன் இரா­ணு­வத்தை தண்­டிக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.

அதையும் தாண்டி சம்­பந்தன் எதிர்க்­கட்சி தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஆகவே இவை அனைத்தும் இன்று நாட்­டுக்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது. தனி ஈழம் அமை­வ­தற்­கான அனைத்து அறி­கு­றி­களும் இதன் மூல­மாக தென்­ப­டு­கின்­றன. அதற்­கான அனைத்து வழி­மு­றை­க­ளையும் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்­றனர்.

உள்­ளக விசா­ரணை

மேலும் நாட்டில் ஜன­நா­யகம், நல்­லாட்சி மலர்ந்­துள்­ள­தாக அனை­வரும் நம்­பு­கின்­றனர். ஆனால் அதையும் தாண்­டிய ஆபத்­தொன்று நாட்டை நோக்கி வரு­கின்­றது. அதா­வது இம்­மாத இறு­தியில் இலங்­கைக்கு எதி­ரான ஐக்­கிய நாடுகள் சபையின் விசா­ரணை அறிக்கை வெளி­வ­ர­வுள்­ளது. இந்த நிலையில் இலங்­கையின் உள்­ளக பொறி­மு­றை­க­ளுக்கு அமைய விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தாக அர­சாங்கம் வாக்­கு­றுதி கொடுத்­துள்­ளது. ஆனால் சர்­வ­தேச விசா­ரணை அறிக்­கை­யிலும் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை பலப்­ப­டுத்தக் கோரிய அழுத்­தங்­களே முன்­வைக்­கப்­படும். அது இப்­போது அனை­வ­ருக்கும் தெளி­வாக தெரிந்­துள்­ளது. எனினும் அதனால் நாம் நன்­மை­ய­டையப் போவ­தில்லை.

ஏனெனில் இந்த உள்­ளக விசா­ரணை பொறி­முறை சர்­வ­தேச சதித்­திட்­டத்­துக்கு அமை­யவே முன்­னெ­டுக்கப் பட­வுள்­ளது. அதேபோல் இலங்­கைக்கு ஆத­ர­வான நாடு­களை தலை­யிட விடாது புலம்­பெயர் புலி­களின் தேவையை நிறை­வேற்றும் நோக்­கத்­தி­லேயே இந்த புதிய முயற்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

எமது இரா­ணுவ வீரர்­களை சர்­வ­தேச கூண்டில் நிறுத்தி தண்­டிக்­கவும் விடு­தலைப் புலிகள் பயங்­க­ர­வா­தி­களை நியா­யப்­ப­டு­த­வுமே இந்த அர­சாங்கம் தனது முழு­மை­யான முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. ஆகவே இந்த நாட்டை நேசிக்கும், இரா­ணு­வத்தை நேசிக்கும் சிங்­கள பௌத்த மக்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து நாட்­டுக்கு எதி­ரான சூழ்ச்­சியை தடுக்க போராட வேண்டும். பிரி­வி­னை­வா­தி­களின் முயற்­சி­களை தோற்­க­டிக்க வேண்டும்.

குறுகிய பயணம்.

மேலும் இந்த அரசாங்கதின் பயணம் நெடுஞ்சாலை பயணமாக அமையும் என பிரதமர் தெரிவித்துள்ளார். உண்மை தான் ஆனால் பிரதமர் ரணில் ஒன்றை மறந்துவிட்டார். நெடுஞ்சாலை பயணம் சுகமானது தான் ஆனால் மிகவும் குறுகிய பயணமாக அமைத்துவிடும். அதேபோல் ரணில் விக்கிரமசிங்கவின் பயணமும் மிகவும் விரைவில் முடிவடைந்துவிடும். ஆகவே வெகு விரைவில் மீண்டுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்.