2016 இருபது-20 உலகக்கிண்ணம் இந்தியாவில் நடைபெறவுள்ளது
இந்தியாவில் வருகிற 2016ம் ஆண்டு இருபது- 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.
20 ஓவர் உலக கிண்ணப் போட்டிகள், 2016-ஆம் ஆண்டு மார்ச் 11-ல் தொடங்கி ஏப்ரல் 3-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.
நேற்று டுபாயில் ஐசிசி சபைக் கூட்டத்தில் திகதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதே போன்று 2017-ஆம் ஆண்டு சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் இங்கிலாந் தில் ஜூன் 1 முதல் 19-ஆம் திகதி வரை நடை பெறும்.
2019-ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டிகளும் இங்கிலாந்தில் மே 30-ஆம் திகதி முதல் ஜூன் 15-ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








