படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவு தினம் அனுஷ்டிப்பு!
யாழ்.குடாநாட்டில் ஊடகப் பணியின் போது துணை ஆயுத குழுக்களினால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 15வது ஆண்டு நினைவு நாள் யாழ்.ஊடக அமையத்தில் நினைவு கூறப்பட்டது.
நேற்று மாலை 5 மணியளவில் யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் நிமலராஜனுடன் பணியாற்றிய சக ஊடகவியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஊடகவியலாளர் நிமலராஜன் நினைவுரையினை மூத்த ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நிகழ்த்தினார்.








