Breaking News

வெளிவிவகார அமைச்சில் பல பாரிய மாற்றங்கள் ?

புதிய கருத்­தொ­ரு­மை­வாத தேசிய அர­சாங்­கத்தின் கீழ் வெளி­வி­வ­கார அமைச்சில் பாரிய மறு­சீ­ர­மைப்­புக்கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாக தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ரிடம் ஆலோ­சனை நடத்­தி­விட்டு வெளி­வி­வ­கார அமைச்சில் மறு­சீ­ர­மைப்புச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூறி­யுள்­ள­தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கையின் மூலம் வெளி­வி­வ­கார அமைச்சின் சில உயர் பத­வி­களில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அது­மட்­டு­மன்றி அர­சாங்­கத்தின் புதிய பொரு­ளா­தார கொள்­கை­கள் தொடர்பில் வெளி­நா­டு­க­ளி­லுள்ள இலங்கை தூத­ர­கங்கள் பாரிய பங்­க­ளிப்பை செய்ய வேண்டும் என பிர­தமர் கரு­து­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. பிர­த­மரின் ஜப்பான் விஜ­யத்தின் பின்னர் அவர் இந்த முடி­வுக்கு வந்துள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்படி விரைவில் வெளிவிவகார அமைச்சின் பல்வேறு பதவிகளில் மாற்றங்கள் வரலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.