Breaking News

கொலை தொடர்பில் அறிக்கை கோரு­கி­றது சர்­வ­தேச பாரா­ளு­மன்ற ஒன்­றியம்

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நட­ராஜா ரவிராஜ், டி.மகேஸ்­வரன்,ஜோசப் பர­ரா­ஜ­சிங்கம், த.மு.தச­நா­யக்க ஆகி­யோரின் கொலைச்­சம்­பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு சர்­வ­தேச பாரா­ளு­மன்ற ஒன்­றியம் இலங்­கையிடம் கோரி­யுள்­ளது.

சர்­வ­தேச பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் 133 ஆவது கூட்­டத்­தொடர் எதிர்­வரும் 16 ஆம் திகதி சுவிட்­சர்­லாந்து ஜெனீவா நகரில் நடை­பெ­வுள்­ளது.அதன்­போதே முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நால்­வ­ரி­னதும் கொலைச்­சம்­பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு சர்­வ­தேச பாரா­ளு­மன்ற ஒன்­றியம் இலங்­கைக்கு அறி­வித்தல் விடுத்­துள்­ளது.

சர்­வ­தேச பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் 133 ஆவது அமர்வில் கலந்­து­கொள்­ள­வுள்ள இலங்கை பாரா­ளு­மன்றக் குழு, குறித்த கொலைச் சம்­ப­வங்கள் தொடர்பில் இர­க­சியப் பொலி­ஸாரின் விசா­ரணைத் தக­ வல்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு அறிக்கை தயா­ரித்­துள்­ள­தாக இலங்கைக் குழுவின் தலைவர் பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால தெரி­வித்தார். சர்­வ­தேச பாரா­ளு­மன்ற ஒன்­றி­யத்தின் 133 அமர்வில் கலந்­து­கொள்­வ­தற்­காக பிர­தி­ய­மைச்சர் அனோமா கமகே, எம்.பிக்­க­ளான சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா, ரஞ்ஜித் அலு­வி­கார, பிமல் ரத்­நா­யக்க ஆகியோர் ஜெனீவா செல்­ல­வுள்­ளனர்.

133 ஆவது கூட்­டத்­தொ­டரில் நடை­பெ­ற­வுள்ள பாரா­ளு­மன்­றங்­களின் இளம் உறுப்­பி­னர்­க­ளுக்­கான அமர்வில் பிமல் ரத்­நா­யக்க எம்.பி.யும் பெண் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான அமர்வில் பிர­தி­ய­மைச்சர் அனோமா கம­கேயும் சாந்தி ஸ்ரீஸ்­கந்­த­ராஜா எம்.பி.யும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். இதே­வேளை மனித உரி­மைகள் தொடர்­பி­லான அமர்வில் ரஞ்ஜித் அலு­வி­கார எம்.பி.கலந்­து­கொள்­ள­வுள்­ள­மையும் குறிப்பிடத்தக்கது.