Breaking News

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - கம்மன்பில



தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை நாட்டின் பாது­காப்­பிற்கு மிகப்­பெ­ரிய அச்­சு­றுத்தல் என தெரி­விக்கும் மஹிந்த ஆத­ரவு அணி­யினர் இந்த அர­சாங்­கத்தின் மோச­மான செயற்­பா­டு­களை மக்கள் மத்­தியில் கொண்­டு­சென்று நாட்டில் புரட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரி­வித்­தனர். 

அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்பில் மஹிந்த அணி­யி­னரின் நிலைப்­பாடு எவ்­வாறு என ஊடகம் ஒன்றுக்க கருத்து தெரிவித்த அவ்­வ­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் உதய கம்­மன்­பில மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

நல்­லாட்சி என்ற பெயரில் இந்த அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் அனைத்து நட­வ­டிக்­கை­களும் நாட்டின் தேசிய பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்­த­லான வகை­யி­லேயே அமைந்­துள்­ளது. ஜன­வரி மாதம் மைத்­திரி-­ ரணில் அர­சாங்கம் அமைக்­கப்­பட்­டதன் பின்­ன­ணியில் புலம்­பெயர் அமைப்­பு­களும், பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களும் உள்­ள­தென்­பது தெளி­வாகத் தெரிந்­தது. 

அதேபோல் பொதுத்­தேர்தல் நடை­பெற்ற சூழ­லிலும் முழு­மை­யாக சர்­வ­தேச தலை­யீ­டுகள் இருந்­தன. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் புலம்­பெயர் அமைப்­பு­களின் பின்­னணி பல­மாக உள்­ளது.

அதேபோல் இந்த அர­சாங்­கத்தை தொடர்ந்தும் தக்­க­வைத்­துக்­கொள்ள புலம்­பெயர் அமைப்­பு­களை திருப்­திப்­ப­டுத்தும் நோக்­கத்தில் இலங்­கையில் புலம்­பெயர் அமைப்­பு­களின் மாநாட்­டையும் நடத்த இந்த அர­சாங்கம் முயற்­சித்து வரு­கின்­றது. அவ்­வாறு இலங்­கையில் புலம்­பெயர் அமைப்­பு­களின் மாநாடு நடத்­தவும் அவர்­களின் நிகழ்ச்­சி­நி­ரலை நடை­மு­றைப்­ப­டுத்­தவும் அவர்­க­ளுக்­கான முழு நிதியும் சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­பு­களின் மூல­மா­கவும் புலம்­பெயர் புலி அமைப்­புகள் மூல­மா­க­வுமே கிடைக்­கின்­றன.

அவ்­வாறு இருக்­கையில் இப்­போது தடுப்­புக்­கா­வலில் உள்ள விடு­த­லைப்­பு­லிகள் அனை­வ­ரையும் விடு­விக்க அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது என்றார்.