Breaking News

காணாமல்போனோர் குறித்து ஆராய ஐ.நா.செயற்குழு இலங்கை வருகிறது

யுத்தத்தின்போது காணாமல் போனோர் தொடர்­பாக ஆராயும் நோக்கில் ஐக்­கிய நாடு­களின் காணாமல்போனோர் மற்றும் பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் குறித்த செயற்­குழு அடுத்தவாரம் இலங்­கைக்கு உத்­தி­யோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள­வுள்­ள­தாக வெளிநாட்டு அலு­வல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பில் அமைந்­துள்ள வெளி நாட்டு அலு­வல்கள் அமைச்­சினால் நேற்று
வியா­ழக்­கி­ழமை நடத்தப்பட்ட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அமைச்சின் ஊடக பேச்­சாளர் மஹே­ஷினி கொலன்னே இந்த தகவலை வெளியிட்டார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்

நாட்டில் கடந்­தக்­கா­லங்­களில் இடம்­பெற்ற யுத்த நட­வ­டிக்­கையின் போது நாட­ளா­விய ரீதியில் காணாமல் போனோர், பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்­பி­லான தகவல் திரட்டி அர­சாங்­கத்­திடம் சமர்ப்­பிப்­ப­தற்­கான நட­வ­டிக்கை ஒன்றை மேற்­கொள்­வ­தற்கு ஐக்­கிய நாடு­களை சேர்ந்தகாணாமல் போனோர் மற்றும் பல­வந்­த­மாக காணாமல் ஆக்­கப்­பட்டோர் செயற்­குழு அடுத்த வாரம் இலங்­கைக்கு உத்­தி­யோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொள்­ள­வுள்­ளது.

குறிப்­பிட்ட இந்த செயற்­கு­ழு­வின் பிரதி தலை­வரின் தலை­மை­யி­லான ஐந்து பேரை கொண்ட குழுவே இந்த விஜ­யத்தை இம்­மாதம் ஒன்­பதாம் திகதி முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

இவர்கள் இம்­மாதம் ஒன்­பதாம் திகதி முதல் எதிர்­வரும் 18 ஆம் திகதி வரை இலங்­கையில் தங்­கி­யி­ருந்து யாழ்­பாணம், திரு­கோ­ண­மலை, காலி. உள்­ளிட்ட வடக்­கி­ழக்கு பகு­தி­களில் கடந்­தக்­கா­லங்­களில் காணாமல் போனோர் மற்றும் பல­வந்­த­மாக காணாமல் செய்­யப்­பட்டோர் தொடர்­பி­லான தக­வல்­களை அவர்­களின் உற­வி­னர்­க­ளு­ட­மி­ருந்து திரட்டும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வுள்­ளனர்..

இந்த குழு கொழும்பில் தொடர்ந்து ஜந்து நாட்கள் தங்­கி­யி­ருந்து நாட்டின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், சிவில் அமைப்­புக்கள்,அரச நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள், அர­ச­சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­திகள் என பல்­வேறு தரப்­பி­ன­ருடன் பேச்­சு­வார்த்­தை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வுள்­ளது.

இறு­தியில் இந்த குழு­வினால் நாட­ளா­விய ரீதியில் திரட்­டப்­பட்ட தக­வல்­களின் அடி­ப­டையில் தயா­ரிக்­கப்­பட்ட அறிக்­கையை அர­சுக்கு கைய­ளிக்­க­வுள்­ள­தோடு இந்த விஜ­யத்தின் இறுதி தினம் விசேட ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பொன்­றையும் முன்­னெ­டுக்­க­வுள்­ளது என்றார்.