Breaking News

அரசும்,கூட்­ட­மைப்பும் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வை ஏற்­க­னவே தயா­ரித்­து­விட்­டன - தினேஷ்

தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் தொடர்பில் ஏற்­க­னவே அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்ளன. அந்த திட்­டத்தை அவர்கள் விரைவில் வெளி­யி­டலாம். ஆனால் ஜன­நா­யகக் கட்­ட­மைப்­புக்கு அப்­பாற்­பட்டு தீர்வை முன்­வைக்க முயற்­சித்தால் நாங்கள் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம் என்று மஹிந்த அணியின் முக்­கி­யஸ்­தரும் மக்கள் ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன தெரி­வித்தார்.

நாடு பொரு­ளா­தார ரீதியில் பாரிய பாதிப்­புக்­களை சந்­தித்து வரு­கின்­றது. சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் உத­வி­யின்றி அடுத்­து­வரும் சில வரு­டங்­களை கடத்­து­வது மிகவும் கடி­ன­மாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார். நாட்டின் தற்­போ­தைய அர­சியல் நிலை குறித்து விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்­பி­டு­கையில்

தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து அர­சாங்கம் பேசிக்­கொண்­டி­ருக்­கின்­றது. தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வு­காணும் செயற்­பாட்டில் அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் இரு­த­ரப்பு பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தினால் பர­வா­யில்லை. ஆனால் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­ட­மா­னது நாட்டின் ஜன­நா­யகக் கட்­ட­மைப்பை மீறு­வ­தாக இருக்­கக்­கூ­டாது.

இங்கு ஒரு விட­யத்தைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும். அதா­வது கடந்த ஜன­வரி மாதம் நாட்டில் ஏற்­பட்ட ஆட்­சி­மாற்றம் மற்றும் ஆகஸ்ட் மாதம் உரு­வா­கிய புதிய அர­சாங்கம் என்­ப­ன­வற்றில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­க­ளிப்பு மிகவும் முக்­கி­ய­மா­னது.

அந்­த­வ­கையில் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்டம் தொடர்பில் அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஒரு இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருக்கக்கூடும் அவர்கள் விரைவில் அந்த திட்­டத்தை வெளி­யி­டலாம். தற்­போது ஒற்­று­மை­யாக செயற்­படும் அர­சாங்­கமும் கூட்­ட­மைப்பும் தீர்வு விட­யத்தில் இது­வரை இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருக்­காது என்று எண்ண முடி­யாது.

மக்­க­ளுக்கு நன்­மை­ய­ளிக்­காத வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு எதிர்க்­கட்சி ஆத­ர­வ­ளிக்­கின்­றது. மக்கள் வீதிக்கு இறங்கி தமது உரி­மை­களை பெற்­றுக்­கொள்ளும் நிலை உரு­வெ­டுத்­துள்­ளது. இவ்­வா­றான நெருங்­கிய ஒற்­று­மை­யுடன் செயற்­படும் அர­சாங்­கமும் கூட்­ட­மைப்பும் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு விவ­கா­ரத்தில் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­தி­ருக்கும் என்­பதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்­று­மில்லை.

ஆனால் ஜன­நா­யகக் கட்­ட­மைப்­புக்கு அப்­பாற்­பட்டு தீர்வை முன்­வைக்க முயற்­சித்தால் நாங்கள் அதற்கு இட­ம­ளிக்­க­மாட்டோம். தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்­வுத்­திட்­ட­மா­னது அனைத்துக் கட்­சி­க­ளி­னதும் இணக்­கப்­பாட்­டு­டனும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வேண்­டி­ய­தாகும். இந்த விடயம் குறித்த சர்­வ­கட்சி மாநாடும் நடத்­தப்­பட்டு வரு­கின்­றது. ஆனால் சர்­வ­கட்சி மாநாட்டின் அடுத்த அமர்வு இன்னும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

இதே­வேளை நாடு பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்குள் சிக்கித் தவித்து வருகின்றது. அடுத்த சில வருடங்களில் நாட்டின் பொருளாதார நிலைமை கேள்விக்குறியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி அரசாங்கத்தினால் நாட்டை கொண்டு நடத்த முடியாத நிலை உருவாகும். அதனால்தான் தற்போது அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம் முன்வைக்கும் நிபந்தனைகளை இலங்கையில் அமுல்படுத்த முயற்சிக் கின்றது என்றார்.