Breaking News

வடக்­கிலும் கிழக்­கிலும் என்ன நடக்­கின்­றது? - கேள்வி எழுப்பும் மஹிந்த

தேசிய பாது­காப்பு என்று கூறிக்­கொண்டு வடக்­கிலும் கிழக்­கிலும் என்ன நடக்­கின்­றது? சர்­வ­தே­சத்­தையும் புலம்­பெயர் புலி­க­ளையும் திருப்திப்படுத்தும் நோக்­கத்தில் மீண்டும் நாட்டில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தவே அர­சாங்கம் முயற்­சிக்கி­ன்றது என்­று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

அர­சாங்­கத்தை எதிர்த்து மக்­களை இணைந்­துக்­கொண்டு போரா­ட­வேண்­டிய காலம் வந்­து­விட்­டது எனவும் அவர் குறிப்­பிட்டார். மஹிந்த ஆத­ரவு அணி­யி­னரின் ஏற்­பாட்டில் நேற்று கொழும்பில் நடை­பெற்ற நிகழ்­வொன்றின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

எமது நாட்டை சர்­வ­தேசம் அடக்கி ஆளும் நிலைமை மீண்டும் நாட்டில் ஏற்­பட்­டுள்­ளது. எமது பாது­காப்பு,எமது உரி­மை­களை பலப்­ப­டுத்­தவும், மக்கள் எப்­படி வாழ­வேண்டும் என்­பதை தீர்­மா­னிக்­கவும் நாம் இன்று சர்­வ­தேச நாடு­க­ளிடம் அனு­மதி பெற­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. நாம் கடந்த காலத்தில் நாட்டில் எவ­ரது தலை­யீ­டிற்கும் இட­ம­ளிக்­காது சுயா­தீ­ன­மாக எமது நாட்டை பலப்­ப­டு­தினோம்.

சர்­வ­தேச உத­வி­களும், அவர்­களின் பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களும் இலங்­கையில் மேற்­கொள்­ளப்­பட்­டாலும் பாது­காப்பு விட­யத்தில் எவ­ரது தலை­யீட்­டையும் அனு­ம­திக்­க­வில்லை. ஆனால் இன்று அவ்­வா­றான ஒரு நிலைமை இல்லை. இன்று இலங்­கையின் பாது­காப்பில் மாத்­தி­ரமே அனைத்து நாடு­களும் தலை­யி­டு­கின்­றன.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஒரு வருட காலத்தில் நாட்டில் பொரு­ளா­தாரம் பாரிய வீழ்ச்சி கண்­டுள்­ளது. அரச ஊழி­யர்கள் வீதியில் இறங்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. பாட­சாலை மாண­வர்­களின் சீருடை முதற்­கொண்டு கொள்­ளை­ய­டிப்­பு­களை ஆரம்­பித்­துள்­ளனர். கடந்த ஒரு­வ­ருட கால­மாக நாட்டில் எந்த வீதியும் புன­ர­மைக்­கப்­ப­ட­வில்லை. ஆனால் ஒவ்­வொரு மேடை­க­ளிலும் கூட்­டங்­க­ளிலும் நல்­லாட்சி என தெரி­விக்­கின்­றனர்.

எமது ஆட்­சியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட எந்­த­வொரு அபி­வி­ருத்தி செயற்­பாட்­டையும் இந்த அர­சாங்கம் முன்­னெ­டுக்­க­வில்லை. மக்­களின் வயிறு காய்­கின்­றது, அவற்றை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

ஆனால் இந்த அர­சாங்கம் எமது நாட்டு மக்­களை பற்றி சிந்­திக்­காது புலம்­பெயர் புலி­களின் தேவையை எவ்­வாறு நிறை­வேற்­று­வது என்­பதை பற்றி சிந்­தித்து வரு­கின்­றனர். வடக்கில் இன்று என்ன நடக்­கின்­றது, கிழக்கில் என்ன நடக்­கின்­றது. சர்­வ­தேச மட்­டத்தில் இலங்கை தொடர்பில் எவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன என்ற அனைத்­தையும் அர­சாங்கம் மூடி மறைத்து மக்­களை ஏமாற்­று­கின்­றது. ஆனால் இர­க­சி­ய­மாக புலி­களின் கரங்­களை மீண்டும் பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையை இவர்கள் மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

அர­சியல் கைதி­களின் விடு­தலை செய்­வ­துடன் வடக்கில் பாது­காப்பு பகு­தி­களை நீக்கி இரா­ணு­வத்தை வடக்கில் இருந்து வெளி­யேற்­று­கின்­றனர். பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தை நீக்கி அதன் மூல­மாக மீண்டும் நாட்டில் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். நாட்­டிற்கு எதி­ரான இந்த செயற்­பா­டு­களை கண்­டிக்­கவோ பாரா­ளு­மன்­றத்தில் எதிர்த்து பேசவோ பல­மான எதிர்க்­கட்சி கூட இல்­லாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

அதேபோல் இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையால் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் இன்று எவரும் வாய்­தி­றக்­க­வில்லை. நாம் எமது ஆட்­சியில் மக்­களை பாது­காக்க நட­வ­டிக்கை எடுத்து நாட்டை அபி­வி­ருத்­தியின் பாதையில் கொண்­டு­சென்ற போது இவர்கள் அனை­வரும் எம்மை விமர்­சித்து பொய்­யான குற்­ற­சாட்­டு­களை முன்­வைத்­தனர்.

எமது இரா­ணுவம் மீதான சர்­வ­தேச விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என்று விமர்­சித்­தனர். ஆனால் இன்று நாட்டில் பாது­காப்பு நட­வைக்­கைகள் எவையும் இல்லை. மாறாக புலி­களை விடு­தலை செய்தும் புலம்­பெயர் அமைப்­பு­களை இலங்­கையில் சுதந்­தி­ர­மாக செயற்­பட அனு­ம­தித்தும் சர்­வ­தே­சத்தை திருப்­திப்­ப­டுத்­தி­யு­முள்­ளனர். ஆகவே இப்­போது சர்­வ­தேச குற்­றச்­சாட்­டுகள் எவையும் முன்­வைக்­கப்­ப­டாது.

எனவே இன்று நாட்டை சர்வதேச பொறிமுறைக்குள் கொண்டு சென்று எம்மீதான பொய்யான குற்றசாட்டுகளை உண்மையென நிரூபிக்கும் நடவைக்கை முன்னெடுக்கப்படுகின்றது. ஆகவே இந்த அரசாங்கத்தை எதிர்த்து மக்களை இணைந்துக்கொண்டு போராடவேண்டிய காலம் இப்போது வந்துவிட்டது. வெகு விரைவில் மீண்டும் நல்லாட்சிக்கான மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டையும் மக்களையும் பாதுகாக்கும் தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டும் என்றார்.