Breaking News

இலக்கு நிர்ணயித்து மீனவர்களை சிறைப்பிடிக்கும் இலங்கையை இந்தியா எச்சரிக்க வேண்டும்

ஒரு மாதத்­திற்குள் தமி­ழக மீன­வர்கள் 500 பேரை கைது செய்தே ஆக வேண்டும் என்று இலக்கு நிர்­ண­யித்து மீன­வர்­களை சிறைப்­பி­டிக்கும் இலங்­கையை இந்­தியா எச்­ச­ரிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறு­வுனர் ராமதாஸ் தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, இலங்­கையின் மீன்­வ­ளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர இம்­மாதம் குறைந்­தது 500 தமி­ழக மீன­வர்­களை கைது செய்ய வேண்டும் என்று இலங்கை கடற்­ப­டைக்கு ஆணை­யிட்­டுள்ளார். இவ்­வாறு இலக்கு நிர்­ண­யித்து தமி­ழக மீன­வர்­களை கைது செய்ய வேண்டும் எனும் அமைச்­சரின் பேச்சு இந்­திய இறை­யாண்­மைக்கு சவால் விடு­வ­தாக உள்­ளது.

இந்­தி­யா­வுக்கும், இலங்­கைக்கும் இடை­யி­லான கடல் எல்லை மிகவும் குறு­க­லா­னது. அங்கு மீன்­பி­டிப்­ப­தற்­கான பாரம்­ப­ரிய உரிமை தமி­ழக மீன­வர்­க­ளுக்கு உண்டு. அதனை சர்­வ­தேச நீதி­மன்­றங்­களும் அங்­கீ­க­ரித்­துள்­ளன. மேலும் இலங்கை செல்லும் வெளி­யு­றவு செய­லாளர் ஜெய்­சங்கர் சிறையில் தவித்து வரும் 104 இந்திய மீன­வர்­க­ளையும் அவர்­க­ளது பட­கு­க­ளையும் விடு­விப்­பது தொடர்­பாக அந்­நாட்டு ஜனா­தி­பதி மற்றும் பிர­த­ம­ரிடம் பேச்­சு­வார்த்­ததை நடத்த வேண்டும். மேலும் 2003ஆம் ஆண்டு இரு நாடு­களும் இணைந்து வெளி­யிட்ட கூட்டறிக்கை உடனடியாக இரத்து செய்யப்படுவதாக இந்திய அரசு அறிவித்து இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் என்றார்.