Breaking News

ஜூன் மாதம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் ஜூன் மாதம் நடை­பெறும். தேர்­த­லுக்­கான தொகுதி நிர்­ணய பணிகள் எதிர்­வரும் ஏப்ரல் மாதத்தில் முடி­வ­டை­யு­மென மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­தபா தெரி­வித்தார்.

விருப்­பு­வாக்கு முறைமை முழு­மை­யாக ஒழிக்­கப்­பட்டு புதிய தேர்தல் முறை­மை­யி­லேயே 2016 ஆம் ஆண்­டுக்­கான உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் நடத்­தப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,

எதிர்­வரும் ஏப்ரல் மாதத்­தினுள் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான எல்லை நிர்­ணய பணி­களை முழு­மை­யாக முடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம். அதேபோல் எதிர்­வரும் ஜூன் மாத­ம­ளவில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தவும் அர­சாங்கம் தயா­ரா­கவே உள்­ளது. அதற்­கான சகல சலு­கை­க­ளையும் ஜனா­தி­பதி எமக்கு வழங்­கி­யுள்­ள­துடன் விரைவில் இந்த பணி­களை முடிக்­கு­மாறும் வலி­யு­றுத்­தி­யுள்ளார். அதேபோல் மாவட்ட ரீதி­யிலும் எல்லை நிர்­ணய பணி­களை மேற்­கொண்டு செல்­கிறோம். இது தொடர்பில் அனைத்து கட்­சி­க­ளும் மேன் முறை­யீ­டு­களை முன்­வைத்­துள்­ளன.

நாம் பழைய முறை­மை­யி­லேயே இந்த தேர்­தலை நட­த்த­வுள்­ள­காக சிலர் கூறு­கின்­றனர். ஆனால், பழைய முறை­மையில் ஒரு போதும் தேர்­தலை நடத்த நாம் தயா­ராக இல்லை. பழைய முறை­மையில் தேர்­தலை நடத்தி கடந்த காலத்தில் நாட்டில் ஏற்­பட்ட குழப்­பங்கள் அனை­வ­ருக்­குமே தெரியும். அர­சியல் ரீதி­யிலும், பொது­மக்­களை பாதிக்கும் வகை­யிலும் பல சிக்­கல்கள் ஏற்­பட்­டன. எனவே, ஜனா­தி­ப­தியும், பிர­த­மரும் வாக்­கு­றுதி வழங்­கி­ய­மைக்கு அமைய புதிய முறை­மையில் தேர்­தலை நடத்­து­வதே எமது நோக்­க­மாகும்.

மேலும் இம்­மு­றையில் இருந்து தேர்­தலில் பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்க கூடிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­கிறோம். இலங்­கையை பொறுத்த வரையில் 52வீதம் பெண்­களின் ஆதிக்கம் இருந்­தாலும் பாரா­ளு­மன்­றத்தில் 2 வீத­மேனும் பெண்­களின் ஆதிக்கம் இல்லை என்­பதே உண்­மை­யாகும். பெண்­களே பெண் உறுப்­பி­னர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பது மிகவும் குறை­வா­னது. அதேபோல் அர­சி­யலில் ஏனைய நாடு­களில் பெண்­களின் அர­சியல் ஆதிக்கம் அதி­க­ரித்­து­வரும் அதே வேளையில் இலங்­கையில் மாறா­கவே நடக்­கின்­றது.

எனவே,வரும் தேர்­தலில் இருந்து பெண்­களின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்கும் வகை­யிலும் தேசியப் பட்­டி­யலில் பெண்­களை உள்­வாங்­குதல் தொடர்­பிலும் அக்­கறை செலுத்­தப்­படும்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நாம் பிற்­போ­டு­வ­தாக கூறு­கின்­றனர். ஆனால் இந்த குற்­றச்­சாட்டை நாம் ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்டோம். அதேபோல் ஜனா­தி­ப­தியோ அல்­லது பிர­த­மரோ இந்த விட­யத்தில் பொறுப்பு கூறவும் முடி­யாது. ஏனெனில் கடந்த 2012ஆம் ஆண்டு தயா­ரிக்­கப்­பட்ட அறிக்கை எமது கைக­ளுக்கு 2015ஆம் ஆண்டே கிடைத்­தது. அந்த அறிக்கை தொடர்பில் நாம் திருப்­தி­கொள்­ள­வில்லை. எல்லா கட்­சி­க­ளுக்கும் சார்­பாக அமையும் வகையில் அந்த அறிக்கை இருக்­க­வில்லை.

எனவே தான், அனைத்து கட்­சி­க­ளையும் பலப்­ப­டுத்தும் வகையில் புதிய திருத்­தங்­களை கொண்­டு­வந்தும், எல்லை நிர்­ணயம் தொடர்­பிலும் மீண்டும் அறிக்கை தயா­ரிக்­க­வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இதுவே தாம­த­மா­வ­தற்கு கார­ண­மா­கவும் அமைந்­தது.

அதேபோல், புதிய தேர்தல் முறைமை என்­ன­வென்­பது தொடர்பில் அதி­க­ள­வானோர் தெளி­வில்­லாது உள்ளனர். அதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே சகல பகுதிகளிலும் மக்களை தெளிவுபடுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வுள்ளோம். அத்தோடு சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளை பாதுகாக்கும் வகையிலும் அனைத்து மக்களும் தமது பிரதிநிதி களை தெரிவுசெய்யும் வகையிலும் நடவடிக் கைகளை மேற்கொள்வோம் என்றார்.