Breaking News

கனவு காணவேண்டாம்! கூட்டமைப்புக்கு ஜேவிபி அறிவுரை

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கிக் கொள்­வதன் மூலம் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளி­னதோ, யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளி­னதோ தொழில் வாய்ப்­பின்­றியி­ருக்கும் தமிழ் இளைஞர், யுவ­தி­க­ளி­னதோ வடக்­கிலே உள்ள விவ­சா­யி­க­ளி­னதோ, மீனவத் தொழி­லா­ளர்­க­ளி­னதோ அல்­லது அவர்­களால் எதிர்­கொள்­ளப்­பட்­டி­ருக்கும் ஒட்­டு­மொத்த பிரச்­சி­னை­க­ளுக்கோ தீர்­வுகள் கிடைத்­து­விடும் என்று எவரும் நினைத்­து­வி­டக்­கூ­டாது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ்­வாறு நினைத்தால் அது அவர்­க­ளது அர­சியல் இலாபம் கரு­தி­ய­தா­கவே அமையும் என்று ஜே.வி.பி. நேற்று சபையில் தெரி­வித்­தது.

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்று வேண்டும் என்­பதில் எம்­மிடம் மாற்றுக் கருத்­தில்லை. பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அனைத்துக் கட்­சி­க­ளையும் உள்­வாங்­கிய பிர­தி­நி­தி­களை இணைத்துக் கொண்டு புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றைத் தயா­ரிப்­பதா அல்­லது அர­சாங்­கமே அர­சி­ய­ல­மைப்பு வரை­பொன்றை தயா­ரித்து சமர்ப்­பிப்­பதா என்­பதை எதிர்­வரும் 26 ஆம் திக­திக்கு முன் அர­சாங்கம் தீர்­மா­னிக்க வேண்டும் என்றும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய சபை தொடர்­பான தீர்­மா­னத்தின் மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜே.வி.பி. தலைவர் அனுர குமார திசா­நா­யக்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அனுர குமார எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்;

எமது நாட்டு அர­சி­ய­ல­மைப்புச் சட்­ட­மா­னது 19 தட­வை­க­ளாக திருத்­தங்­க­ளுக்கு உள்­ளா­கி­யுள்­ளது. இவற்றில் 17 மற்றும் 19 ஆவது திருத்­தங்கள் தவிர்ந்த ஏனைய 17 திருத்­தங்­களும் அவ்­வப்­போது இருந்த ஆட்­சி­யா­ளர்கள் தமது அதி­கா­ரங்­களைத் தக்­க­வைத்துக் கொள்ளும் பொருட்டு கொண்டு வரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்­ட­வை­யா­கவே உள்­ளன. இந்த திருத்­தங்கள் எது­வுமே குறித்து நாம் சிந்­திக்­க­வில்லை. இக்­காலப் பகு­தி­களில் மேற்­படி திருத்­தங்­களை நிறை­வேற்றிக் கொள்­வ­தற்­கென பணம், பதவி போன்ற சலு­கை­களை வழங்­கியே அரங்­கேற்­றப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

நிறை­வேற்று அதி­கா­ரத்தை இல்­லா­தொ­ழிக்க வேண்டும் என்­பதை நாம் ஆரம்பம் முதலே வலி­யு­றுத்தி வரு­கிறோம். அந்த வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு சட்டம் ஒன்று இயற்­றப்­பட வேண்­டி­யது அவ­சியம். இதில் மாற்றுக் கருத்து எம்­மிடம் இல்லை. எனினும் முத­லா­ளித்­துவ அர­சி­ய­ல­மைப்பை ஏற்றுக் கொள்ள முடி­யாது. ஏனைய தரப்­புக்­களின் கைகளைக் கட்டிப் போடு­கின்ற மற்றும் குரல்­களை நசுக்­கு­கின்­ற­தா­கவும் இருக்க முடி­யாது. அனைத்து தரப்­பி­ன­ருக்­கு­மான உரி­மை­க­ளுக்கும் மதிப்­ப­ளிக்­கப்­ப­டுதல் வேண்டும்.

பிர­தமர் முன்­வைத்­துள்ள தீர்­மா­னத்தின் பிர­காரம் பிர­த­ம­ரி­னதும் அவர் சார்ந்த குழு­வி­ன­ரதும் உரி­மைகள் பாது­காக்­கப்­ப­டு­வ­தா­கவே உள்­ளன. இதில் பிர­தமர் தனது அதி­கா­ரத்தைப் பிர­யோ­கித்­தி­ருப்­பது தெளி­வா­கி­றது. அர­சி­ய­ல­மைப்புச் சட்டம் தயா­ரித்­தலின் போது அனைத்து அர­சியல் கட்­சி­க­ளி­னதும் உறுப்­பி­னர்­க­ளதும் கருத்­துக்கள் உள்­வாங்­கப்­ப­டுதல் வேண்டும் என்ற அடிப்­ப­டையைக் கொண்டு செயற்­ப­டுதல் அவ­சி­ய­மாகும்.

அந்த வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தை தயா­ரிக்கும் பட்­சத்தில் அனைத்து கட்­சி­களும் உள்­வாங்­கப்­படும் முறைமை ஒன்­றுக்கு செல்­வதா அல்­லது அர­சாங்­கமே புதிய அர­சி­ய­ல­மைப்பு வரை­யொன்றைத் தயா­ரித்து சமர்ப்­பிப்­பதா என்­பது தொடர்பில் அர­சாங்கம் எதிர்­வரும் 26 ஆம் திக­திக்கு முன்­ப­தாக தீர்­மா­னிக்க வேண்டும்.

மேலும் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை வரை­வ­துடன் எமது பணிகள் நிறை­வுக்கு வர வேண்டும். என்­ப­துடன் சட்ட மூலம் தயா­ரிக்­கப்­ப­டுதல் அமைச்­ச­ரவை அங்­கீ­கா­ரத்தைப் பெறுதல் உயர் நீதி­மன்­றத்­துக்கு பாரப்­ப­டுத்­துதல் அதனை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பித்தல் ஆகிய பணி­களை அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்டும்.

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்கி விடு­வதன் மூலம் வடக்கில் உள்ள தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைத்து விடும் என்று எவரும் நினைக்க முடி­யாது.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட வடக்குத் தமிழ் மக்கள் பாரிய பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுத்துப் கொண்­டி­ருக்­கின்­றனர். அங்கு அவர்கள் நில உரிமை கோர­வில்லை. மாறாக தமக்கு நிலமே கோரு­கின்­றனர். தொழி­லின்றி இளைஞர் யுவ­திகள், பொரு­ளா­தார, வாழ்­வா­தார பிரச்சினைகளில் மீனவத் தொழிலாளர்கள், விவசாயிகள் என துன்பம் அனுபவிக்கின்றனர்.

அந்த மக்களின் மனங்கள் வெல்லப்பட வேண்டும். யாழ். பல்கலை மாணவர்களதும் பாடசாலைகளினதும் பிரச்சனைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

புதிய அரசியல் அமைப்பொன்றை உருவாக்கி விடுவதன் மூலம் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நினைக்குமானால் அது அக்கட்சியினரின் அரசியல் சுயலாபம் கருதியதாகவே இருக்கும் என்றார்.