Breaking News

அல்–­ஹு­சைனை சந்­திப்­ப­தற்கு அனு­மதி பெற்­றுத்­தா­ருங்­கள் - காணா­மல்­போ­­ன­வர்­களின் உற­வுகள் கோரிக்­கை



யாழ்ப்­பா­ணத்­திற்­கு வருகை தரவுள்­ள ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ளர் செய்ட் அல் ஹுசை­னை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு ஏற்ற ஒழுங்­கு­களை ஏற்­ப­டுத்­தித்­த­ரு­மாறு வட­மா­காண முத­ல­மைச்சரிட­மும் யாழில் அமைந்­துள்ள ஐ.நா.விற்­கான அலு­வ­லக அதி­காரியிட­மும் காணாமல் போன உற­வினர் கோரிக்கை கடிதம் ஒன்றை கைய­ளித்­துள்­ளனர்.

காணா­மல் ­போ­னோரின் உற­வி­னர்கள் யாழ்ப்­பாணம் திரு­மறைக் கலா­மன்ற மண்ட­பத்தில் நேற்­றைய தினம் ஒன்­று­கூடி கலந்­து­ரை­யா­டி­ய­தை­ய­டுத்தே குறித்த கோரிக்கைக் கடி­தங்கள் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

குறித்த கோரிக்கைக் கடிதம் கைய­ளிக்கப்­பட்­டமை தொடர்பில் காணாமல் போன உற­வினர்கள் கருத்துத் தெரி­விக்­கையில்

ஐ.நா.விற்­கான மனித உரிமை ஆணை­யாளர் யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொள்­ளும்­போது நாம் அவரைச் சந்­தித்து அவ­ரிடம் எமக்கு நடந்த இன்­னல்கள், கொடு­மைகள் தொடர்பில் எடுத்­தி­யம்ப உள்ளோம். பல வரு­ட­கா­ல­மாக எமக்கு இடம்­பெற்ற பிரச்­சி­னைக்குத் தீர்­வின்றி அலைக்­க­ழிக்­கப்­பட்டு வரு­கின்றோம். கடந்த அர­சாங்கம் எமது பிரச்­சி­னைக்குத் சரி­யான தீர்வு வழங்­காமல் ஏமாற்­றி­ய­மை­யி­னா­லேயே அவர்­களை தேர்­தலில் வாக்குப் பலத்தால் வீட்­டுக்கு அனுப்பி வைத்தோம்.

இந்­நி­லையில் புதி­தாக வந்த தற்­போ­தைய தேசிய அர­சாங்கம் எமக்­கான தீர்வைப் பெற்றுத் தரு­மென எதிர்­பார்த்­தி­ருக்கிறோம். இந்நிலையில் இது­வரை முறை­யான நட­வ­டிக்கை எதுவும் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­ய­வில்லை.

குறிப்­பாக வட­ப­கு­திக்கு வரும் ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் பொறுப்­பான பொறுப்­பு­க­ளில் இருப்­ப­வர்கள் கூட எமது பிரச்­சி­னைக்கு எந்தத் தீர்வும் வழங்­க­வில்லை. காணாமல் போன உற­வுகள் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என்ற கருத்­தினை யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்த பிர­தமர் முன்­வைத்­தி­ருக்­கிறார். இத்­த­கைய கருத்­துக்கள் எம்மை மேலும் சோகத்­திற்கு ஆளாக்­கி­யுள்­ளன.

எமது உற­வு­களை கண்­டு­பி­டிக்க வலி­யு­றுத்திப் பல்­வேறு போராட்­டங்கள், உண்­ணா­வி­ர­தங்கள், கறுப்­புப்­பட்டிப் போராட்­டங்கள் போன்­ற­வற்றை மேற்­கொண்டும் எந்தப் பயனும் இல்­லை.

என­வேதான் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்யும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரை சந்­தித்துக் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு நடவடிக்கை எடுக்கக்கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள ஐ.நா.அலுவலக அதிகாரியிடம் நேற்று மாலை கோரிக்கைக் கடிதமொன்றை ஒப்படைத்துள்ளோம் என்­ற­னர்.