Breaking News

ஐ.நா.பிர­தி­நி­தி­களின் வரு­கையின் பின்­னணி மிகவும் மோச­மா­னது - என்­கிறார் மஹிந்த

யுத்­தம்­செய்ய அழைத்­த­போது ஓடி ஒழிந்­த­வர்கள் இன்று நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காட்­டிக்­கொ­டுக்க சர்­வ­தேசம் அழைப்­பு­வி­டுத்­த­வுடன் முன்­வந்து நிற்­கின்­றனர். இலங்­கையை கறை­ப­டிந்த நாடாக மாற்றி சர்­வ­தே­சத்தின் முழு­மை­யான விசா­ர­ணையை ஏற்­ப­டுத்­தவே முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார்.

மனித உரி­மைகள் ஆணை­யாளர் மற்றும் ஐக்­கிய நாடு­களின் பிர­தி­நி­தி­களின் வரு­கையின் பின்­னணி மிகவும் மோச­மா­னது. நாட்டை துண்­டாட திட்டம் தீட்­டப்­ப­டு­கின்­றது எனவும் அவர் குற்றம் சுமத்­தினார்.

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் இன்று இலங்கை வரும் நிலையில் அது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த காலத்தில் இந்த நாட்டில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வர எவரும் முன்­வ­ராத நிலையில் இந்த நாட்டை உண்­மையில் நேசித்த நாம் விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வா­தி­க­ளுடன் ஆயுதப் போராட்டம் செய்ய தயா­ரானோம். இந்த நாட்டில் மூவின மக்­க­ளையும் அமை­தி­யாக வாழ­விட வேண்டும் என்ற எண்ணம் எம்­மத்­தியில் இருந்­தது. அதற்­க­மைய நாம் ஆட்­சி­ய­மைத்து நான்கு ஆண்­டு­க­ளுக்குள் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்தோம்.

அதன் பின்னர் இந்த நாட்டை துரித அபி­வி­ருத்­தியின் பாதையில் கொண்டு சென்றோம். யுத்தம் முடி­வுக்குக் வந்த நாடொன்று மிக குறு­கிய காலத்தில் தனது பொரு­ளா­தார தன்­மை­யிலும், ஐக்­கி­யத்­திலும் முன்­னேற்றம் கண்­ட­தென்றால் அது எமது நாடு மட்­டு­மே­யாகும்.

ஆசி­யாவின் ஆச்­ச­ரியம் மிக்க நாடாக இலங்­கையை மாற்றி நாட்டின் பொரு­ளா­தா­ரத்­திலும், சுற்­றுலா துறை­யிலும் பாரிய மாற்­றத்தை கொண்­டு­வந்தோம். இவ்­வாறு பல வர­லா­று­களை மிகக்­கு­று­கிய காலத்தில் எம்மால் செய்­து­மு­டிக்க முடிந்­தது. ஆனால் அவற்றை எல்லாம் மறந்­த­வர்கள் யுத்த குற்­றச்­சாட்டு பற்­றிய கதை­களை மாத்­தி­ரமே பேசிக்­கொண்­டுள்­ளனர். நாம் பொது­மக்­க­ளுக்கு எதி­ரா­கவோ அல்­லது ஒரு இனத்­த­வரை அழிக்­க­வேண்டும் என்ற எண்­ணத்­திலோ யுத்தம் செய்­ய­வில்லை.இந்த நாட்டை துண்­டாட நினைத்த , நாட்டில் மூவின மக்­க­ளுக்கும் எதி­ராக ஆயுத போராட்டம் நடத்­திய பயங்­க­ர­வா­தி­களை மாத்­தி­ரமே நாம் அழித்தோம்.

அன்று யுத்­தம்­செய்ய அழைத்­த­போது ஓடி ஒளிந்­த­வர்கள் இன்று நாட்­டையும் இரா­ணு­வத்­தையும் காட்­டி­க்கொ­டுக்க சர்­வ­தேசம் அழைப்­புவி­டுத்­த­வுடன் முன்­வந்து நிக்­கின்­றனர். சர்­வ­தே­சத்­திடம் எம்மை காட்­டிக்­கொ­டுத்து இறு­தியில் இந்த நாட்டை துண்­டா­டவே இவர்கள் அனை­வரும் முயற்­சிக்­கின்­றனர்.

அதற்கு இடம்­கொ­டுப்­பதா அல்­லது இந்த நாட்டை காப்­பாற்­றிய எமது இரா­ணுவ வீரர்­களை பாது­காப்­பதா என்­பதை மக்கள் தீர்­மா­னிக்க வேண்டும். அதற்­கான தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்டும். இப்­போது மக்கள் வேடிக்கை பார்க்கும் ஒவ்­வொரு தரு­ணத்­திலும் சர்­வ­தேசம் எம்­மீ­தான ஆக்­கி­ர­மிப்பை பலப்­ப­டுத்தி நாட்டை துண்­டாட ஆரம்­பித்­து­விடும்.

மனித உரி­மைகள் ஆணை­யாளர், ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகளின் வருகையின் பின்னணி மிகவும் மோசமானது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி கொடுத்தது மட்டுமல்லாது அவர்களின் நிகழ்ச்சி நிரலை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் முழுமையான அழுத்தம் கொடுத்து வருகின்றனர். உண்மைகளை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.