Breaking News

கொள்ளையடித்த பணத்தை கண்டறிய முடியவில்லை! என்கிறார் பிரதமர்

முன்­னைய ஆட்­சியின்போது கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட பணத்தில் 1000 பில்­லியன் ரூபாவை தற்­போ­தைக்கு இனங்­கண்­டுள்ளோம். இது தொடர்பில் பாரா­ளு­மன்ற ஆலோ­சனை குழு அமைத்து விசா­ரணை செய்­ய­வுள்ளோம். 

குறித்த விசா­ர­ணைகள் முடிந்த பின் எவ­ருக்கு எதி­ராக வேண்­டு­மா­னாலும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வர முடியும். அமைச்­ச­ருக்கு எதி­ரா­கவே பிரே­ரணை தாக்கல் செய்ய வேண்­டி­ய­தில்லை. அதற்கு மாறாக சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்பினர் ஒரு­வ­ருக்கு எதி­ரா­கவும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்­டு­வ­ர­மு­டியும் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

எனவே விசா­ரணை முடிந்த பின்னர் உரிய நப­ருக்கு எதி­ராக உரிய நேரத்தில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை நாங்கள் கொண்டு வருவோம் என்றும் பிர­தமர் குறிப்­பிட்டார்.

மேலும் யுத்­தத்தின் போது மீட்­கப்­பட்ட தங்க நகைகள் தொடர்பில் எனக்கு சிக்கல் ஏற்­பட்­டுள்­ளது. 180 கிலோ­கிராம் நகை­களை அர­சாங்­கத்­திடம் வழங்­கி­ய­தாக இரா­ணுவம் கூறி­யது. எனினும் தற்­போ­தைக்கு அத்­த­கைய தொகை எம்­மிடம் இல்லை. இது குறித்து முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பென்­சே­கா­விடம் கேட்ட போது ,220 கிலோ­கிராம் நகையை மொத்­த­மாக அர­சிடம் கைய­ளித்­த­தாக கூறினார். இந்த விட­யத்தில் அரசு என்ற வகையில் நாம் என்ன செய்­வது? யார் இதற்கு பொறுப்பு கூறு­வது என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

முன்­னைய ஆட்­சியின் போது கொள்­ளை­யிட்ட பணங்­களை மலை­யக மக்­க­ளுக்கு வீட­மைப்­ப­தற்கு செல­விட்­டி­ருந்தால் அங்கு மாளி­கைகள் நிர்­மா­ணித்­தி­ருக்க முடியும் ,வடக்கில் காணி­களை வழங்­கி­ய­ருக்க முடியும். நல்­லாட்சி அரசில் மக்­க­ளுக்­கான உரி­மை­க­ளையும் உடை­மை­க­ளையும் மீளவும் மக்­க­ளுக்கே வழங்­கி­யி­ருப்­ப­தா­கவும் பிர­தமர் குறிப்­பிட்டார்.

மலை­யக அபி­வி­ருத்­திக்­கான ஐந்­தாண்டு திட்­டத்­திற்­கான வரை­வினை நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் கைய­ளிக்கும் நிகழ்வு மலை­யக புதிய கிரா­மங்கள் மற்றும் தோட்ட உட்­கட்­ட­மைப்பு அமைச்சர் பி. திகாம்­பரம் தலை­மையில் கொழும்பு பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே பிர­தமர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் உரை­யாற்­று­கையில்,

மலை­ய­கத்தில் சமூக அபி­வி­ருத்­தியை மைய­மாக கொண்டு அமைச்சர் பி.திகாம்­ப­ரத்­தினால் ஐந்­தாண்டு வேலைத்­திட்டம் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. எனவே இது­வ­ரைக்­கா­லமும் இல்­லாத அள­விற்கு மலை­யகம் முன்­னேற்றம் கண்டு வரு­கின்­றது. தற்­போது மலை­யக தமிழ் மக்­க­ளிடம் பல்­வேறு பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன .இதனை தீர்ப்­ப­தற்கு நாம் திட்­ட­மிட்­டுள்ளோம். இதன்­படி ஐந்­தாண்டில் மலை­யத்தின் கல்வி ,சுகா­தாரம் போன்­ற­வற்றை மேம்­ப­டுத்­த­வுள்ளோம். அதே­போன்று லயன்­களை ஒழித்து வீடு­களை நிர்­மா­ணிப்போம். தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு காணி உறு­தி­யையும் வழங்­குவோம். ஆகவே இதனை முன்­னெ­டுத்து செல்­வ­தற்கு மலை­ய­கத்தில் உள்ள தமி­ழர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைய வேண்டும்.

மலை­யக அபி­வி­ருத்தி

இதே­வேளை மலை­ய­கத்தை முன்­னேற்­று­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை கடந்­தம காலத்தில் ஆரம்­பிக்­கப்­பட்ட போதிலும் 1991 ஆம் ஆண்டு முதல் குறித்த வேலைத்­திட்­டத்­தினை எம்மால் முன்­னெ­டுக்க முடி­யாமல் போனது. இதன்­படி 20 வரு­டங்கள் எந்­த­வொரு அபி­வி­ருத்­தி­யையும் முன்­னெ­டுக்­கப்­ப­டாமல் கிடப்பில் போடப்­பட்­டது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்­த­பின்னர் இது தொடர்பில் தகுந்த நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு எம்மால் முடிந்­துள்­ளது.

மலை­ய­கத்­த­வர்­களின் கஷ்­டங்கள் குறித்த நன்கு அறிந்த பி. திகாம்­ப­ரத்­திற்கு குறித்த பொறுப்­பு­களை வழங்­கி­யுள்ளோம். அவர் தனது கட­மையை சரி­வர நிறை­வேற்­றுவார். மேலும் மலை­ய­கத்தில் கல்வி துறையை மேம்­ப­டுத்­து­வ­தற்கும் திட்­ட­மிட்­டுள்ளோம். நான் கல்வி அமைச்­ச­ராக இருந்­த­போது மலை­ய­கத்தில் தேசிய பாட­சா­லைகள் தொடர்பில் பொறுப்­பா­ள­ராக இருந்து வேலை­களை செய்து முடித்தேன். எனினும் தற்­போது பிர­த­ம­ராக நான் வந்­துள்ள தரு­ணத்தில் விஞ்­ஞான பாட­நெ­றி­யுடன் கூடிய பாட­சா­லை­களை நாம் மேம்­ப­டுத்த திட்­ட­மிட்­டுள்ளோம். இது தொடர்பில் கல்வி அமைச்சு நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ளது. இது மக்­க­ளுக்­குள்ள உரி­மையை வழங்­கு­வ­தற்­கான பிர­தான வேலைத்­திட்­ட­மாகும்.

யுத்­தத்தின் நிறை­வ­டைந்த பின்னர் சமா­தானம் எமது நாட்டு மக்­க­ளுக்கு கிடைக்­க­வில்லை. நாம் இலங்­கையர் என்ற வகையில் வாழ்­வ­தற்கும் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட காயங்­களை ஆற்­று­வ­தற்கும் எம்மால் முடி­யாமல் போனது. அதே­போன்று சமா­தா­னத்­துடன் கூடிய அபி­வி­ருத்­தியை மக்­க­ளுக்கு பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாமல் போனது. விவ­சா­யி­க­ளுக்கு காணி உறுதி இருக்­க­வில்லை. யுத்­தத்தின் கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு காணி­களோ வீடு­களோ பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை. மறு­பு­றத்தில் வீடு­க­ளுக்­கான உரி­மைகள் இல்­லா­த­வர்­க­ளாக மலை­யக மக்கள் உள்­ளனர். இதன்­படி மக்­க­ளுக்­கான உரி­மை­களை மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சி­பீ­ட­மே­றினார். இது புரட்­சி­க­ர­மான மாற்­ற­மாகும்.

முன்­னைய ஆட்­சியின் கொள்­ளைகள்

எனினும் மக்­க­ளு­டைய உரி­மை­க­ளையும் உடை­மை­க­ளையும் முன்­னைய அர­சாங்கம் கொள்­ளை­யிட்­டது. எவற்றை கொள்­ளை­யிட்­டார்கள் என்­பது தொடர்பில் எது­வுமே கண்­ட­றிய முடி­யாமல் உள்­ளது. எதனை கொள்­ளை­யிட்­டார்கள் என்­பது குறித்து தேடி ஆராய்ந்து வரு­கின்றோம். தற்­போ­தைக்கு கொள்­ளை­யிட்ட பணங்­களில் 1000 பில்­லியன் ரூபாவை இனங்­கண்­டுள்ளோம். அத்­துடன் எட்டு விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு பாரிய நிதி செல­வி­டப்­பட்­டுள்­ளது. விமான கொள்­வ­ன­விற்கு 211 பில்­லியன் ரூபாவை செல­விட்­டுள்­ளனர். அது­போன்று இதனை பார்க்­கிலும் எஜின் ஒப்­பந்த்­திற்கு இத­னை­விட 18 மடங்கு செல­வி­டப்­பட்­டுள்­ளது. இந்த பணத்தைக் கொண்டு மலை­யத்தில் மாளி­கைகள் அமைத்­தி­ருக்க முடியும். ஐந்­தாண்டு திட்­டத்தை முழு­மை­யாக முடிப்­ப­தற்கு 100 பில்­லியன் ரூபாவே தேவைப்­ப­டு­கின்­றது.

எனினும் முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளினால் கொள்­ளை­யிட்ட பணங்­களை கொண்டு வடக்கு தமிழ் மக்­க­ளுக்கும் ,மலை­யக தமிழ் மக்­க­ளுக்கும், கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கும் வீடு­களை அமைத்து கொடுத்­தி­ருத்­தி­ருந்தால் நாடு முன்­னேற்றம் அடைந்­தி­ருக்கும்.

மக்­களின் பணத்தில் மாட மாளி­கைகள்

அதே­போன்று யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்ட வடக்கு தமிழ் மக்­க­ளுக்கு வீடுகள் இல்லை. ஆனாலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ யாழ்ப்­பா­ணத்தில் தங்­கு­வ­தற்கு மாளிகை அமைத்­தி­ருந்தார். அண்­மையில் நான் கிழக்கின் பாண­ம­விற்கு சென்­றி­ருந்த வேளை,அங்கு மூன்று மாளி­கைகள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. இதன்­படி ஒரு மாளி­கை­களில் மூன்று நீச்சல் தடா­கங்கள், மூன்று மது­பான சாலைகள், மூன்று உடற்­ப­யிற்சி நிலை­யங்கள் அமைக்­கப்­பட்­டி­ருந்­தன. இவை தேவை­யற்ற செல­வீ­னங்­க­ளாகும். 

இருந்­தாலும் மலை­ய­கத்தில் இலட்­சத்­துக்கும் அதி­க­மா­னோ­ருக்கு மல­சல கூடம் இல்லை. யாழ்ப்­பா­ணத்தில் தங்­கு­வ­தற்கு வீடு இல்லை. முன்­னைய ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் கொள்­ளை­யி­டு­வ­தற்கே விசேட வேலைத்­திட்டம் காணப்­பட்­டது. இந்­நி­லையில் மூடி மறைக்­கப்­பட்­டி­ருந்த கடன் தொகை­க­ளுக்­கான செல­வீ­னத்­தையும் தற்­போது நாமே தீர்க்க வேண்­டி­யுள்­ளது. கடன்­களை செலுத்தி கொண்டும் நாம் வீட­மைப்பு திட்­டங்­களை கைவி­ட­வில்லை. மாறாக அபி­வி­ருத்தி பணி­களை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­கின்றோம். எனவே முன்­னைய ஆட்­சியின் போது இடம்­பெற்ற கொள்­ளைகள் தொடர்பில் ஆரா­யு­மாறு பாரா­ளு­மன்­றத்­திற்கு கூறி­யுள்ளேன்.

நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை

இந்­நி­லையில் கொள்­ளை­யிட்­டவர் தொடர்பில் ஆரா­யநாம் முயற்­சிக்­கும்­போது சிலர் அச்­சத்தின் கார­ண­மாக நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரு­வ­தற்கு முனை­கின்­றனர். எவ்­வா­றா­யினும் முன்­னைய ஆட்­சியின் போது கொள்­ளை­யி­டப்­பட்­ட­வைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் ஆராய்ந்து விசா­ர­ணைகள் முடிந்த பின்னர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை­களை எனக்கு எதி­ரா­கவோ அல்­லது அரசின் அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­கவோ கொண்டு வர முடியும். அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­கவே நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வர வேண்­டி­ய­தில்லை. 

சாதா­ரண பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு எதி­ரா­கவும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வர­மு­டியும். இதற்­காக பாரா­ளு­மன்ற ஆலோ­சனை குழு அமைத்து விசா­ரணை செய்த பின்னர் எம்.பி. ஒருவருக்கு எதிராக நம்பிக்கை பிரேரணை கொண்டு வரப்படும். விமானங்கள் கொள்வனவிற்கான செலவிட்டதை மலைய மக்களுக்கு செலவிட்டிருத்திருந்தால் பிரச்சினைகள் பல தீர்ந்திருக்கும்.

வடக்கு மக்களின் தங்கத்தில் ஏற்பட்ட சிக்கல்

அத்துடன் எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. யுத்தத்தின் போது வடக்கு மக்களுக்கு சொந்தமான 180 கிலோ தங்கம் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டதாக இராணுவம் குறிப்பிட்டது. ஆனாலும் இது தொடர்பில் முன்னாள் இராணுவ தளபதி என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவிடம் நான் கேட்ட போது, 220 கிலோகிராம் தங்கத்தை அரசாங்கத்திடம் தான் கையளித்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த தொகை எம்மிடம் இல்லை. எனவே இது தொடர்பில் நாம் என்ன செய்வது? இதற்கு யார் பொறுப்பு கூறுவது?. இதன்மூலமாக வந்த பென்ஸ் கார்களுக்கு யார் பொறுப்பு கூறுவது? எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கத்தினால் மக்களின் உரிமைகளை நாம் மக்களுக்கே பெற்றுக்கொடுப்போம் என்றார்.