மீண்டும் அணியில் இணைகிறார் சங்கா
இலங்கை அணியின் இரண்டு தூண்காளாக விளங்கிய மஹேல, சங்கக்கார ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகு இலங்கை அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறது.
இந்நிலையில் இருபதுக்கு 20 உலகக் கிண்ண சுப்பர் – 10 ஆட்டங்கள் தொடங்கியுள்ளன. இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்க்கொள்ளவுள்ளது இலங்கை. இந்நிலையில் இலங்கை அணிக்கு ஆலோசனை வழங்கவும், ஊக்கமளிக்கவும் சங்கக்காரவை அணியுடன் இணைத்துக்கொள்ள முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.