Breaking News

பிரபாகரன் எவ்வாறு கொல்லப்பட்டார் பொட்டு அம்மானுக்கு என்ன நடந்தது?

உண்­மையில் பிர­பா­கரன் எவ்­வாறு கொல்­லப்­பட்டார். பொட்டு அம்மான் எங்கே, லசந்த கொலையின் பின்­னணி என்ன இந்த விவ­கா­ரங்­களின் பின்­ன­ணியில் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபா­ய ராஜபக்ஷ உள்­ளாரா, வேறு எவரும் இந்த குற்­றங்­களின் பின்­ன­ணியில் உள்­ள­னரா என்­பது தொடர்பில் உட­ன­டி­யாக உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும் என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது.

விசா­ர­ணை­களை சுயா­தீ­ன­மாக மேற்­கொண்டு அதன் மூலம் உண்­மை­களை கண்­ட­றியும் பட்­சத்தில் மட்­டுமே இவர்­களின் கருத்தின் உண்மை நிலை­மை­களை கண்­ட­றிய முடியும். அதை தவிர்த்து காலத்தை கடத்தி இவ்­வா­றான கருத்­து­களை முன்­வைத்து வந்தால் அதுவே சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கு மிகப்­பெ­ரிய வாய்ப்­பா­கவும் அமையும் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

இறுதி யுத்தம் தொடர்­பிலும் விடு­த­லைப்­பு­லிகள் இயக்­கத்தின் தலை­வர்­களின் இறு­திக்­கட்ட செயற்­பா­டுகள் தொடர்­பிலும் முன்னாள்

இரா­ணுவத் தள­ப­தியும் தற்போ­தைய அமைச்­ச­ரு­மான பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்­து­வரும் கருத்­துகள் தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் கருத்­தினை ஊடகம் ஒன்று வினாவியபோதே கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த சில கால­மா­கவே அமைச்சர் சரத் பொன்­சேகா இறுதி யுத்தம் தொடர்பில் பல மாறு­பட்ட கருத்­து­களை முன்­வைத்து வரு­கின்றார். பாரா­ளு­மன்­றத்­திலும் ஏனைய பொது இடங்­க­ளிலும் ஊடக சந்­திப்­பு­க­ளிலும் அவர் இந்த விட­யங்கள் தொடர்பில் கருத்­து­களை முன்­வைத்து வரு­கின்றார். எவ்­வாறு இருப்­பினும் அவ­ரது இந்த கருத்­துகள் தொடர்பில் உண்மை என்ன, இறுதி யுத்­தத்தில் என்ன நடந்­தது என்ற விவ­கா­ரங்கள் எவையும் எமக்குத் தெரி­யாது. யுத்தம் ஒன்று நடந்­தது, இதில் இரு தரப்­பு­களும் மோதிக்­கொண்­டன. இறு­தியில் பயங்­க­ர­வாத பிடியில் இருந்து இந்த நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் எமது இரா­ணுவம் மீட்­டெ­டுத்­தது என்ற காரணி மட்­டுமே எமக்குத் தெரியும். இந்த யுத்­தத்தை பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா முன்­னெ­டுத்து சென்றார் என்று தெரியும்.

அவ்­வாறு இருக்­கையில் இப்­போது சரத் பொன்­சேகா தெரி­விக்கும் கருத்­துகள் மாறு­பட்ட வகையில் அமைந்­துள்­ளன.லசந்த விக்­கி­ர­ம­துங்க, பொட்டு அம்மான், பிர­பா­கரன் தொடர்பில் இது­வ­ரையில் எவரும் கூறாது கதை­களை இப்­போது சரத் பொன்­சேகா கூறு­வது ஆச்­ச­ரி­ய­மாக உள்­ளது. ஆனால் உண்­மையா என்­பதில் சந்­தேகம் உள்­ளது. அதேபோல் இறுதி யுத்­தத்தின் இறுதி சில நாட்­களில் நடந்­த­தாக கூறப்­படும் தவ­றான செயற்­பா­டுகள் தொடர்­பிலும் ஆராய வேண்­டிய தேவை உள்­ளது.

ஆகவே ஒரு­வ­ருக்கு ஒருவர் குற்றம் சுமத்­திக்­கொண்டு மேடை­களில் கூச்­ச­லி­டு­வதை விடவும் இந்த விட­யங்கள் தொடர்பில் உட­ன­டி­யாக உள்­ளக விசா­ர­ணை­களை ஆரம்­பிக்க வேண்டும். உண்­மையில் பிர­பா­கரன் எவ்­வாறு கொல்­லப்­பட்டார். பொட்டு அம்மான் எங்கே, லசந்த கொலையின் பின்­னணி என்ன. அப்­போ­தைய பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய உண்­மையில் இந்த சம்­ப­வங்­களின் பின்­ன­ணியில் உள்­ளாரா, வேறு எவரும் இந்த குற்­றங்­களின் பின்­ன­ணியில் உள்­ள­னரா என்­பது தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ள வேண்டும்.

விசா­ர­ணை­களை சுயா­தீ­ன­மாக மேற்­கொண்டு அதன் மூலம் உண்­மை­களை கண்­ட­றியும் பட்­சத்தில் மட்­டுமே இவர்­களின் கருத்தின் உண்மை நிலை­மை­களை கண்­ட­றிய முடியும். அதை தவிர்த்து காலத்தை கடத்தி இவ்­வா­றன கருத்­து­களை முன்­வைத்து வந்தால் அதுவே சர்­வ­தேச தரப்­பி­ன­ருக்கு மிகப்­பெ­ரிய வாய்ப்­பா­கவும் அமையும். ஆகவே அர­சாங்கம் இவர்­களின் கருத்­து­களை வேடிக்­கை­பார்த்­துக்­கொண்டு இருக்­காமல் உட­ன­டி­யாக நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும்.

மேலும் கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற எதிரணியின் கூட்டம் நாட்டை பிரிக்கும் ஒரு நடவடிக்கை என நாம் கருத்துகின்றோம்.

இதில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் தொடர்பில் எம்மத்தியில் எந்த கருத்துகளும் இல்லை. ஆனால் இந்த செயற்பாடுகள் உண்மையில் அரசாங்கதிற்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்றார்.