Breaking News

குழப்புகின்றார் மஹிந்த!

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியில் பிள­வுகள் இல்லை. சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் காலத்தில் கட்­சியை குழப்­பிய அதே அணுகு­மு­றையை மஹிந்த ராஜ­பக்ஷ தற்­போதும் முன்னெ­டுத்து வரு­கின்றார். எக்­கா­ரணம் கொண்டும் ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிளவுப­டுத்த இடமளிக்க முடியாது. 

நேற்று முன்­தினம் நடத்­தப்­பட்ட கூட்­டத்­திற்கு நாம் அஞ்­ச­மாட் டோம். அலட்­டிக்­கொள்ளத் தேவை­யில்லை என முன்னாள் ஜனா­தி­ப­தி­ சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார். ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வு­ப­டுத்தும் மஹிந்த ராஜ­பக் ஷவின் நீண்ட நாள் கனவு ஒரு­போதும் பலிக்­காது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மினு­வாங்­கொடை பிர­தே­சத்தில் மின்­நிலை­ய­மொன்­றுக்கு அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரை­யாற்றுகையிலேயே முன்னாள்ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்;

மினு­வாங்­கொடை பிர­தே­சத்தில் வர்த்­தக மத்­தி­ய­ நி­லையம் உள்­ள­மை­யினால் மீதமான மரக்­கறிவகைகள் உள்­ளிட்ட குப்­பை­க­ளினால் மக்­க­ளுக்கு பெரும் சிரமம் ஏற்­ப­டு­கின்­றது. இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டே 1994 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியின் போது சேதன பச­ளையை கொண்டு மின்­சா­ரத்தை உற்­பத்தி செய்யும்

திட்­டத்தை நான் ஆரம்­பித்து வைத்­தி­ருந்தேன். எனினும் இந்த வேலைத்­திட்­டத்­திற்கு பிர­தேச மக்­க­ளினால் பெரும் எதிர்ப்பு வெளி­யி­டப்­பட்­டன. இதன்­கா­ர­ண­மாக இந்த வேலைத்­திட்டம் கைவி­டப்­பட்­டது.

இது தொடர்பில் தவறாக புரிந்­து­ணர்­வுடன் மக்கள் செயற்­ப­டு­வதே இவ்­வா­றான எதிர்ப்­புகள் கிளம்­பு­வ­தற்கு பிர­தான கார­ண­மாகும். இவ்­வா­றான செயற்­பாடு மக்­களின் நல­னுக்­கா­கவே முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஆகையால் குப்­பை­களை சேக­ரித்து மின்­சாரம் உற்­பத்தி செய்­வ­தனால் பல்­வேறு நலன்­களை பெற்­றுக்­கொள்ள முடியும். எனினும் இந்த திட்­டத்தை முறி­ய­டிப்­ப­தற்கு சிலர் சதி திட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இத்­த­கைய சதி­க­ளுக்கு மக்கள் உள்­ளாக கூடாது.

தற்­போது ஊழல் மோச­டிகள் இல்­லாத நாட்டை உரு­வாக்க திட்­ட­மிட்­டுள்ளோம். முன்­னைய ஆட்­சியின் போது அபி­வி­ருத்தி என்ற பேரில் கடன்­களை பெற்று மோசடி செய்­த­மை­யினால் தற்­போது இலங்கை பொரு­ளா­தார ரீதி­யாக பாரிய பின்­ன­டைவை சந்­தி­த்துள்­ளது. ஆனாலும் தற்­போது பொரு­ளா­தாரம் தொடர்பில் பெரும் விமர்­ச­னங்­களை முன்­வைக்­கின்­றனர்.

நல்­லாட்­சியின் கீழ் அனைத்து இனத்­த­வர்­க­ளிடம் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தி நல்ல வள­மான நாட்டை நாம் பெற்­றுக்­கொ­டுப்போம். இதனை மைய­மாக கொண்டே இரண்டு பிர­தான கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்கம் நிறு­வப்­பட்­டுள்­ளது. இருந்­தாலும் தேசிய அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு எதி­ராக சதி திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இதன்­படி ஸ்ரீ சுதந்­திரக் கட்­சியை இரண்­டாக பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு முனை­கின்­றனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் செயற்­பாடு ஆரம்­பத்­தி­லி­ருந்து அவ்­வாறே காணப்­பட்­டது. முன்னாள் பிர­த­மரும் எனது தாயா­ரு­மான சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க கட்சியின் தலை­வி­யாக செயற்­படும் வேளையில் கட்சியை இரண்­டாக பிள­வு­ப­டுத்­து­வ­தற்கு பெரும் முயற்­சி­களை கூட்­டாக முன்­னெ­டுத்­தி­ருந்தார். அது­போ­லவே கட்சி தலை­விக்கு எதி­ராக பல்­வேறு மட்­டத்தில் கூட்­டங்­களை நடத்­தி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் தற்­போ­தைக்கு சுதந்­திரக் கட்­சியில் எந்­த­வொரு பிள­வு­களும் கிடை­யாது. பிள­வு­பட்­டி­ருப்­ப­தாக காண்­பிக்­கின்­றனர். ஆனாலும் முன்­னைய அணு­கு­மு­றை­யையே தற்­போது மஹிந்த ராஜபக்ஷ கையாண்டு வருகின்றார். எனினும் முன்னைய காலங்களில் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் திட்டங்கள் வெற்றியளிக்கவில்லை. அதேபோன்று தற்போது மஹிந்த ராஜபக்ஷவினால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமும் வெற்றியளிக்க போவதில்லை. இதன்படி நேற்று முன் தினம் அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கண்டுகொள்ள வேண்டியதில்லை. இது மஹிந்த ராஜபக்ஷவிற்கு பழகிப்போன செயலாகும். இதனை அலட்டிக்கொள்ள தேவையில்லை என்றார்.