Breaking News

எங்களின் கதை மட்டும் மாறவில்லை! ஒரு சாட்சியம்

நாட்டில் ஆட்­சிகள் மாறு­கின்­றன காட்­சி­களும் மாறு­கின்­றன. ஆனால் காணாமல் போன­வர்­களின் நிலைப்­பாட்டில் இது­வ­ரைக்கும் எந்­த­வித மாற்­றமும் காண­வில்­லையே என காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஆணைக்­குழு முன் பெண்ணொருவர் கண்­ணீ­ருடன் சாட்சியமளித்தார்.

காணாமல்போனோர் தொடர்­பாக விசா­ரணை செய்யும் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்­குழு நேற்று திங்கள் கிழமை மன்­னாரில் விசா­ர­ணை அமர்வை நடத்தியது. மன்னார் மாவட்ட செய­ல­கத்தின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற விசாரணை அமர்வில் வங்­கா­லையைச் சேர்ந்த உமா­பதி டொரின் பீரிஸ் (வயது 40) என்பவரே மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.

நாங்கள் முல்­லைத்­தீவு வட்­டு­வாகன் பகு­தியில் இருந்­த­போது இரா­னுவம் தங்­க­ளிடம் சரண் அடைந்தால் தப்­பித்துக் கொள்­வீர்கள் என தெரி­விக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 17.05.2009 அன்று எனது கணவர் பர­ரா­ஐ­சிங்கம் உமா­பதி (அந்­நேரம் அவ­ரது வயது 33) ஐம்­பது பேருடன் அருட்­ப­ணி­யாளர் பிரான்­சீஸ்­வுடன் இரா­ணு­வத்­திடம் சரண் அடைந்­தார்கள். இவர்கள் சரண் அடைந்­ததும் இரா­ணு­வத்­தினர் இலங்கை போக்­கு­வ­ரத்து பேரூந்தில் சரண் அடைந்த ஐம்­பது பேரையும் ஏற்றிச் சென்­றனர்.

இவர்கள் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சரண் அடைந்து தற்­பொ­ழுது ஏழு வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­ற­ன்றன நாங்கள் பல இடங்­களில் இது­வி­ட­ய­மாக முறை­யீடு செய்­யப்­பட்டும் இது­வ­ரைக்கும் எங்­க­ளுக்கு இது­வி­ட­ய­மான எந்த முடிவும் கிடைக்கப் பெறாத நிலையே காணப்­ப­டு­கி­றது. 11 ஆயிரம் போரா­ளி­க­ளுக்கு புனர்­வாழ்வு கொடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறும் அரசு ஏன் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சரண் அடைந்த இந்த ஆட்­க­ளைப்­பற்றி மௌனம் காக்­கின்­றது என எங்­க­ளுக்கு தெரி­ய­வில்லை.

இந்த ஐம்­ப­து­பேரில் ஆறு பேர் சம்­பந்­த­மாக நீதி­மன்றில் ஆட்­கொ­ணர்வு வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டு தற்­பொ­ழுது இது­வி­ட­ய­மாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன இந்த வழக்கு விசா­ர­ணை­யொன்றில் இவர்கள் சம்­பந்­த­மான விப­ரங்கள் தன்­னிடம் இருப்­ப­தாக இரா­ணுவத்தின் ஒருவர் மன்றில் தெரி­வித்­ததைத் தொடர்ந்து எதிர்­வரும் மாதம் 19 ஆம் திகதி இது விட­ய­மான அறிக்­கையை மன்றில் சமர்­ப்பிக்­கும்­படி நீதி­பதி கட்­டளை பிறப்­பித்­துள்ளார்.

இது இப்­ப­டி­யி­ருக்க இந்த நாட்டில் ஆட்­சிகள் மாறு­கின்­றன காட்­சி­களும் மாறு­கின்­றன. ஆனால் காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் எந்த மாற்றங்களையும் நாங்கள் காணவில்லை. எனது கனவரின் நிலை என்னவோ என கண்ணீர் சிந்தியவாறு தனது உள்ளக்கிடக்கைகளை ஆணைக்குழு முன் பதிவு செய்தார்.