Breaking News

அரசுக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் -மஹிந்த அணி கோரிக்கை

ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கத்­திற்கு எதி­ராகப் போரா­டு­வ­தற்கு யாரி­டமும் அனு­மதி பெற்றுக்கொள்ள வேண்­டிய அவ­சி­ய மில்லை. எனவே திட்­ட­மிட்­டப்­படி வியாழக்­கி­ழமை நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்டம் இடம்­பெறும். இதற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலைமை தாங்­க­வுள்ளார் என்று கூட்டு எதிர்க் கட்சி தெரி­வித்­துள்­ளது.

இந்­தியா மற்றும் அமெ­ரிக்­காவின் ஆக்­கி­ர­மிப்­பிற்கு தாய் நாட்டில் இட­ம­ளிக்க முடி­யாது. விடு­தலை புலிகள் இருந்த காலத்தை விட தற்­போது தான் மிகவும் ஆபத்­தான நிலை இலங்­கையில் காணப்­ப­டு­கின்­றது. எனவே இந்த போராட்டம் அர­சியல் சார்ந்­த­தல்ல. மாறாக தாய் நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்­கான மற்­று­மொரு போராட்­ட­மாகும். இதில் பேதங்­களை மறந்து அனைத்து இன மக்­களும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூட்டு எதிர்க் கட்சி அழைப்பு விடுத்­துள்­ளது.

ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நேற்று இடம்­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியின் பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன கூறு­கையில் ,

நல்­லாட்சி என்ற போர்­வையில் ஜன­நா­யக விரோத ஆட்­சியை முன்­னெ­டுக்கும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் வேஷம் கலைந்து விட்­டது. பொது மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­திய திட்­டங்கள் ஏமாற்­றத்­தையே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன . ஊட­கங்­க­ளுக்கு சுத­தந்­தி­ர­மாக செயற்­பட முடி­ய­வில்லை. மக்­க­ளுக்கு பொரு­ளா­தார ரீதியில் பல்­வேறு நெருக்­க­டிகள் காணப்­ப­டு­கின்­றன. இந்த நிலையில் அர­சாங்கம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அமைச்­சர்­க­ளுக்கு விஷேட வசதி வாய்ப்­பு­களை பெற்றுக் கொடுப்­ப­தற்கு பிரே­ராணை கொண்டு வர முற்­ப­டு­கின்­றது . இதற்கு கூட்டு எதிர் கட்சி ஒரு போதும் ஆத­ரவு வழங்­காது. சபா­நா­யகர் இந்த விட­யத்தில் உண்­மைக்கு முர­ணான வகையில் செயற்­ப­டு­கின்றார்.

ஆகவே கூட்டு எதிர் கட்­சியின் அரச எதிர்ப்பு போராட்­டத்தில் அனை­வரும் கலந்து கொள்ள வேண்டும். எந்­த­வொரு அர­சியல் சிந்­த­னை­க­ளுக்­குள்ளும் உட்­ப­டாது நாட்டு மக்­களின் உரி­மை­களை பாது­காப்­ப­தற்­காக அனை­வரும் கலந்துக் கொள்ள வேண்டும் என்றார்.

செய்­தி­யாளர் சந்­திப்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டளஸ் அழ­கப்­பெ­ரும குறிப்­பி­டு­கையில்

அர­சாங்­கத்­திற்கு எதி­ரான போராட்­டத்தை வியா­ழக்­கி­ழமை முன்­னெ­டுப்­ப­தற்கு பிர­தா­ன­மாக 5 விட­யங்­களே உள்­ளன. அதா­வது இந்­தி­யா­விற்கு அடி­ப­ணிந்து எட்கா ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­கின்­றமை , விவ­சா­யி­க­ளுக்­கான நிவா­ரண குறைப்பு , ஊடக அடக்­கு­முறை , தேர்­தலை நடத்­தாமை மற்றும் இரா­ணு­வத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற நட­வ­டிக்­கைகள் என்­ப­னவே அரச எதிர்ப்பு பேர­ணிக்கு கார­ணங்­க­ளாகும். இதில் கூட்டு எதிர்க் கட்­சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் 41 பேரில் 39 பேர் உறு­தி­யா­கவே கலந்துக் கொள்­வார்கள். ஏனைய இரு­வரும் அத்­தி­யா­வ­சிய தேவை நிமித்தம் வெளி­நாட்­டிற்கு செல்­கின்­றனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் இடம்­பெ­ற­வுள்ள இந்த எதிர்ப்பு பேர­ணியில் சோம­வன்ச அம­ர­சிங்க உள்­ளிட்ட பல அர­சியல் தலை­வர்கள் , இட­து­சாரி கட்­சிகள் மற்றும் அமைப்­புகள் என பல தரப்­பட்­ட­வர்கள் கலந்து கொள்ள உள்­ளனர். எனவே அனைத்து இன மக்­களும் கட்சி பேதங்­களை மறந்து இதில் கலந்து கொள்ள வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி 1951 ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்ட போது பிர­தான நோக்­க­மாக ஐக்­கிய தேசிய கட்சி எதிர்ப்பே காணப்­பட்­டது. அந்த கொள்­கையை தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கின்றோம் . கூட்டு அர­சாங்­கத்தில் உள்ள சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் ஒரு கட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய கட்­சியை விட்டு வெளி­யேறி விடு­வார்கள் என நினைத்தோம். ஆனால் அவர்கள் வெளி­யே­ற­வில்லை.

இலங்­கைக்கு பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்த கூடிய எட்கா ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­தி­டு­வதில் கூட மௌன­மா­கவே உள்­ளனர். ஆகவே பொறு­மை­கா­கக்க முடி­யாது. போராட்­டத்தை ஆரம்­பிக்க வேண்டும். 9க்கும் மேற்­பட்ட அர­சியல் கட்­சிகள் எம்­முடன் இணைந்­துள்­ளன . வியா­ழக்­கி­ழமை இடம்­பெ­ற­வுள்ள மாபெரும் போராட்டம் ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்­சிக்கு எதி­ரான ஒன்­றாகும். . அதற்கு அணி­தி­ரள யாரி­டமும் அனு­மதி கோர வேண்­டி­ய­தில்லை என்றார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச செய்­தி­யாளர் சந்­திப்பில் குறிப்­பி­டு­கையில்

பொது மக்­க­ளுக்கு 24 மணித்­தி­யாலம் மின்­சா­ரத்தை வழங்க முடி­யாத அர­சாங்­கமே நல்­லாட்சி அரா­சங்­க­மாகும்.

பாரிய நிதி நெருக்­க­டியை நாட்டில் ஏற்­ப­டுத்தி மக்கள் மீது பொரு­ளா­தார நெருக்­க­டி­களை தோற்று வித்துள்ளது. எனவே இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகும். விடுதலை புலிகள் இருந்த காலக்கட்டத்தில் கூட அவ்வாறான நெருக்கடிகள் நாட்டில் காணப்பட வில்லை. இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தேவைக்கு ஏற்ப இலங்கையை தயார்படுத்த இடமளிக்க முடியாது. வியாழக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டம் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முதலாது கட்டமாகும். இதில் அனைத்து இன மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்றார்.