அரசை தூக்கிவாரிப் போட்ட மின்துண்டிப்பு கோளாறா? நாசகாரமா?
நாட்டின் பிரதான வளங்களிலும் மனித அன்றாடத் தேவைகளிலும் நீர் மற்றும் மின்சாரம் போன்றவை தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன. ஆரம்ப காலங்களில் மின்சாரத்தில் துணையின்றி இலங்கையில் மக்கள் வாழ்ந்தாலும், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தொன்றாக மின்சாரம் மாறியுள்ளது. சாதாரண தொலைபேசி முதல் விண்வெளிக்கு அனுப்பும் விண்கல செயற்பாடுகள் வரைக்கும் மின்சாரம் இல்லாமல் எதனையும் சாதிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் 2020 ஆம் ஆண்டளவில் 99 சதவீத மின்சார தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்று கூறப்பட்டாலும் இலங்கை தற்போது முகங்கொடுத்துள்ள நிலைமை அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை கேள்விக்குட்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் தலைமையிலான ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இது ஒருபுறமிருந்தாலும் கடந்த ஆறு மாதங்களில் மூன்று தடவைகள் நாடுதழுவிய ரீதியில் மின்விநியோம் தடைப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் மாத்திரம் இரண்டு தடவைகள் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று துண்டிப்புகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய மின் துண்டிப்பாக 13 ஆம் திகதி சம்பவத்தை குறிப்பிடலாம்.
இது ஒருபுறமிருந்தாலும் கடந்த ஆறு மாதங்களில் மூன்று தடவைகள் நாடுதழுவிய ரீதியில் மின்விநியோம் தடைப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முற்பகுதியில் மாத்திரம் இரண்டு தடவைகள் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. குறிப்பாக மூன்று துண்டிப்புகளிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திய மின் துண்டிப்பாக 13 ஆம் திகதி சம்பவத்தை குறிப்பிடலாம்.
இத்தகைய மின்விநியோகத் தடைகளுக்கு பல காரணம் கூறப்பட்டாலும் ஒரு சில காரணங்கள் அனைவரினதும் அவதானத்திற்கும் உள்ளாகியுள்ளன. சமூக வலைத்தளங்களிலும் கூட கூடுதல் அவதானத்திற்கு உள்ளாகியுள்ள காரணமாக அமைந்துள்ளதென லாம். அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை திசைதிருப்பும் வகையில் முன்னெடுக்கப்படும் 'சூழ்ச்சி' என்பதே அந்த காரணமாகும். என்ன காரணமாக இருந்தாலும் இறுதியில அனைத்திலும் 'இருதலைகொள்ளி' என்ற பதத்திற்கு உரியவர்களாக மக்களின் நிலைமை மாறியுள்ளது.
அரசியல் என்ற வட்டாரத்தில் மக்கள் தினமும் வலைக்குள் சிக்குண்ட மீன்போன்று துடிக்கின்றனர். பாராளுமன்றம் முதல் அரச நிர்வாகம் வரை அரசியல் என்பது தற்போதைக்கு பெரும் தொல்லையாக மாறி வருகின்றது. இதன்படி புதிய ஆட்சி மலர்ந்த பிறகு முதற்தடவையாக 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவில் மின்துண்டிப்பு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் திகதி நாடுமுழுவதும் மின்துண்டிக்கப்பட்டது. லக் ஷபான நீர்மின்நிலையத்தில் மின்னல் தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே குறித்த மின்துண்டிப்பதற்கு காரணமாகும் என அரசாங்கம் குறிப்பிட்டது.
இருந்தபோதிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட நாடுதழுவிய மின் துண்டிப்பானது 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட பாரதூரமான மின் துண்டிப்பாக கூறப்பட்டது. சுமார் எட்டு மணித்தியாலம் இலங்கை முழுவதும் இருளில் மூழ்குவது என்பது சாதாரண விடயமாகக் கருதமுடியாது. மூன்றாவது மின்துண்டிப்பு நாட்டு மக்களை மாத்திரம் அவதிக்குட்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் தூக்கி வாரிப் போட்டுள்ளது. அமைச்சர்கள் அதிகாரிகள் என அனைவரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
அரசியல் என்ற வட்டாரத்தில் மக்கள் தினமும் வலைக்குள் சிக்குண்ட மீன்போன்று துடிக்கின்றனர். பாராளுமன்றம் முதல் அரச நிர்வாகம் வரை அரசியல் என்பது தற்போதைக்கு பெரும் தொல்லையாக மாறி வருகின்றது. இதன்படி புதிய ஆட்சி மலர்ந்த பிறகு முதற்தடவையாக 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி நள்ளிரவில் மின்துண்டிப்பு ஏற்பட்டது. அதனைதொடர்ந்து கடந்த மாதம் 25 ஆம் திகதி நாடுமுழுவதும் மின்துண்டிக்கப்பட்டது. லக் ஷபான நீர்மின்நிலையத்தில் மின்னல் தாக்குதலின் காரணமாக ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே குறித்த மின்துண்டிப்பதற்கு காரணமாகும் என அரசாங்கம் குறிப்பிட்டது.
இருந்தபோதிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ஏற்பட்ட நாடுதழுவிய மின் துண்டிப்பானது 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஏற்பட்ட பாரதூரமான மின் துண்டிப்பாக கூறப்பட்டது. சுமார் எட்டு மணித்தியாலம் இலங்கை முழுவதும் இருளில் மூழ்குவது என்பது சாதாரண விடயமாகக் கருதமுடியாது. மூன்றாவது மின்துண்டிப்பு நாட்டு மக்களை மாத்திரம் அவதிக்குட்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் தூக்கி வாரிப் போட்டுள்ளது. அமைச்சர்கள் அதிகாரிகள் என அனைவரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
எட்டு மணிநேர மின்தடை
நாடுபூராகவும் சென்ற ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திடீரென மின்விநியோகம் தடைப்பட்டது. இதனைதொடர்ந்து சில இடங்களில் மாலை 5 மணியளவில் விநியோகம் வழமைக்குத் திரும்பியது. இருப்பினும் பெரும்பாலான இடங்களில் இரவு 7 மணிக்கு வழமைக்கு திரும்பினாலும் மீளவும் நாடு முழுவதிலும் மின் விநியோகம் தடைப்பட்டது. இதனையடுத்து இரவு 9 மணி தொடக்கம் 10.30 மணி வரையில் பெரும்பாலான பிரதேசங்களில் மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியிருந்தது.
மின்சார சபையின் விளக்கம்
இது தொடர்பில் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க அமைச்சின் செயலாளரிடம் வினவிய போது, பியகம பிரதேசத்திலுள்ள உப மின்நிலையத்தில் ஏற்பட்ட மின்மாற்றி வெடித்துச் சிதறியதனால் மின் துண்டிப்பு ஏற்பட்டது. எனினும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு மின்விநியோகத்தில் சிக்கல் நிலைமை ஏற்படும் என்றார்.
ஆகவே இந்த வாரம் முழுவதும் நாட்டின் பல பாகங்களின் மின்விநியோகத்தில் பெரும் பாதிப்புக்கள் ஏற்படும். இதன்படி ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் விநியோகம் தடைப்படும் என்று மின்சார சபை விளக்கம் கூறியுள்ளது. இதன்படி நுரைச்சோலை அனல் மின் நிலையம் ஸ்தம்பிதம் அடைந்தமையினால் மின்விநியோகக் கட்டமைப்பில் 900 மெகா வோட் மின்னிணைப்பு கிடைக்காமல் போவதாக மின்சார சபை கூறுகிறது. இதனால் 400 மெகாவோட் கொண்டு முகாமைத்துவப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது
நீர் விநியோகமும் தடை
இதேவேளை நாடுபூராகவும் மின்விநியோகம் தடைப்பட்டமையினால் பல்வேறு பகுதிகளின் நீர் விநியோகமும் தடைப்பட்டிருந்தது. குறிப்பாக மாத்தறை , கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகள், நுவரெலியா போன்ற இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டது. அத்துடன் மின்விநியோகத்தின் தடைகாரணமாக அம்பத்தலை மற்றும் பியகம நீர்சுத்தகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்படைந்திருந்தன. ஆகையால் குறிப்பிட்ட தினங்களுக்கு நீரை சேமிக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது.
அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகள்
அத்துடன் மின்விநியோகத் தடைகாரணமாக வீதி சமிக்ஞை விளக்குகள் துண்டிக்கப்பட்டமையினால் கொழும்பு , கண்டி உள்ளிட்ட பிரதான நகரங்களில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டது. மேலும் ரயில் சேவைகளும் ஸ்தம்பிதமடைந்த காணப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
இதேவேளை அநுராதபுரம், பொலன்னறுவை, குருணாகல், பதுளை, நுவரெலியா உள்ளிட்ட பல்வேறு இடங்களின் பிரதான வைத்தியசாலைகளில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டமையினால் நோயாளிகளும் பெரும் அசௌகரியங்கள் எதிர்கொண்டனர். வைத்தியசாலைகளின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு, கண்டி மற்றும் காலி உள்ளிட்ட பிரதான நகரங்களில் ஹோட்டல்கல்பெற்றோல் நிலையங்கள் மாலை பொழுதில் மூடப்பட்டமையினால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிட்டது.
தலைவரின் இராஜினாமா நிராகரிப்பு
நாடுபூராகவும் ஆறுமாதங்களில் இதுவரை மூன்று தடவைகள் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று பாரிய மின்துண்டிப்பு ஏற்பட்டதனை அடுத்து இலங்கை மின்சார சபையின் தலைவர் அநுர விஜயபால தனது பதவியை இராஜினாமாச் செய்யப்போவதாக அறிவித்திருந்ததுடன் திங்களன்று அதற்கான இராஜினாமாக் கடிதத்தை அமைச்சரிடம் கையளித்திருந்தார். இருந்தபோதிலும் குறித்த இராஜினாமா கடிதத்தை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நிராகரித்துள்ளார்.
மின்துண்டிப்பு கோளாறா ? நாசகாரச் செயலா?
பியகம உப மின்நிலையத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் மற்றும் இதற்கு முன்னர் இடம்பெற்ற மின்துண்டிப்புக்கள் ஒருவேளைகளில் நாசகார செயலாக இருக்க கூடும் என சந்தேகின்றனர். கிராமப் பகுதிகளில் மின்துண்டிப்புகளுக்கு சில நேரம் நாசகார செயல் என்ற காரணம் பரவலாக சொல்லப்படுகின்றது. ஆனால் இது பாரிய மின்துண்டிப்பாகும். இது ஒருவேளை தொழில்நுட்பக் காரணமின்றி நாசகார செயலாக இருக்க முடியும். ஆனாலும் அரசாங்கம் கூறியதற்கான இதனை சதி என்று கூறிவிட முடியாது. இது அரசாங்கத்தின் மூடி மறைக்கும் தந்திரமாகவும் இருக்ககூடும். ஆனாலும் பொதுவாக சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பலர் இதனை நாசகார வேலை என்றே கூறியுள்ளனர்.
பொலிஸ் முறைப்பாடும் துரித விசாரணைகளும்
இந்நிலையில் தொடர் மின்துண்டிப்பு நாசகாரமான செயலாக இருக்கும் என்று கருதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய திங்கட்கிழமை சப்புகஸ்கந்த பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸாரும் இதனை நாசகார செயலாக இருக்கலாம் என்றே சந்தேகின்றனர். பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுகாக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை இது தொடர்பில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மேற்படி குறித்த குழுக்களின் அறிக்கைகளை கூட்டு அறிக்கையாக பெறுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன்பின்னர் அறிக்கை ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதியான திங்கட்கிழமை அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, 23 ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது. இதன்போது இது நாசகார செயலா அல்லது தொழில்நுட்பக் கோளறா என்பது நாட்டு மக்களுக்கு தெரியவரும்.
மின்விநியோகத்தினால் ஏற்பட்ட உயிரிழப்பு
இதன்படி இந்த விபரீதத்தினை அடுத்து எரிந்து கொண்டிருந்த விளக்கு விழுந்து மேனியில் மண்னெண்ணெய் சிதறி தீ விபத்துக்குள்ளாகி பாணந்துறை கெசல்வத்த பிரதேசத்தை சேர்ந்த 93 வயதுடைய வயதான பியட்ரஸ் குணதிலக என்ற பெண்ணொருவர் உயிரிந்துள்ளார். அத்துடன் காத்தான்குடி பிரதேசத்தின் வீடொன்றும் முழுமையாக தீயினால் பாதிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.
நிரந்தரத் தீர்வு
இந்நிலையில் தொடர்ந்தும் ஏற்படுகின்ற மின்துண்டிப்புக்கான காரணத்தை கண்டறிந்து நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்காவிடின் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதான இலட்சியமாக கருதப்படும் நவீன தொழில்நுட்ப யுகத்தை இலங்கையில் ஏற்படுத்த முடியாமல் போகும். இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமையுமெனில் சர்வதேச நாடுகளின் உதவியுடன் அதனை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று நுரைச்சோலை அனல் மின்நிலைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சீனா அரசாங்கத்துடன் இணைந்து புதிய ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் மின்சாரத் துறையிலுள்ள குறைபாடுகளை தீர்க்க முடியாவிடின் நிதி கடனுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இலங்கை தேசம், மின்சாரத்தைக் கடனாக பெறவேண்டிய நிலைமை ஏற்படும். அப்படியாயின் நாட்டை எவராலும் முன்னேற்ற முடியாது போகும்.
அதேபோன்று நுரைச்சோலை அனல் மின்நிலைய குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு சீனா அரசாங்கத்துடன் இணைந்து புதிய ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அனைத்து வளங்களையும் கொண்ட இலங்கையில் மின்சாரத் துறையிலுள்ள குறைபாடுகளை தீர்க்க முடியாவிடின் நிதி கடனுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள இலங்கை தேசம், மின்சாரத்தைக் கடனாக பெறவேண்டிய நிலைமை ஏற்படும். அப்படியாயின் நாட்டை எவராலும் முன்னேற்ற முடியாது போகும்.
-எம்.எம்.மின்ஹாஜ்-