Breaking News

தெறி வெளியான 2 நாட்களில் 27 கோடி ரூபா வசூலை கடந்தது (காணொளி இணைப்பு)

விஜய் நடிப்பில் வெளி­யான தெறி திரைப்­படம் வெளி­யான முதல் 2 நாட்­களில் 27.97 கோடி இந்­திய ரூபாய்­களை தென்­னிந்­தி­யாவில் வசூ­லித்­துள்­ளது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 14 ஆம் திகதி வெளி­யான தெறி படம் அட்­லீயின் 2 ஆவதும் ஜி.வி.பிர­காஷின் 50 ஆவது படம் என்ற பெருமை­க­ளுடன் வெளி­யா­னது.

தெறி வெளி­யா­ன ­முதல் 2 நாட்­களில் 27.97 கோடி இந்­திய ரூபாய்­களை தென்­னிந்­தி­யாவில் வசூ­லித்து சாதனை படைத்­துள்­ளது. இதில் தமிழ்­நாட்டில் மட்டும் 20.22 கோடி இந்­திய ரூபாய்­களை இப்­படம் வசூல் செய்­தி­ருக்­கி­றது.படத்தின் முதல் பாதி கேர­ளாவில் நகர்­வது, விஜய் மலை­யாளம் பேசி நடித்­தி­ருப்­பது ஆகி­யவை கேர­ளாவில் இப்­ப­டத்­திற்கு பெரும்­ப­லத்தைக் கொடுத்­தி­ருக்­கின்­றன. இதனால் கேர­ளாவில் மட்டும் இப்­படம் 3.75 கோடி இந்­திய ரூபாய்­களை குவித்­தி­ருக்­கி­றது.

இதேபோல் கர்­நா­டகா மாநி­லத்தில் ரூ 2.70 கோடி­களை இப்­படம் வசூல் செய்­துள்­ளது. கேரளா, கர்­நா­டகா மாநி­லங்­களில் வேறு பெரிய நடி­கர்­களின் படங்கள் எதுவும் வெளி­யா­க­வில்லை என்­பதால் விஜய் படத்­திற்கு 2 மாநி­லங்­க­ளிலும் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.

ஒரு­சில பிரச்­சி­னை­களால் இப்­படம் ஒருநாள் தாம­த­மாக ஆந்­திரா, தெலுங்­கானா மாநி­லங்­களில் வெளி­யா­னது. இதில் 85 இலட்சம் இந்திய ரூபாய்களை ஆந்திராவிலும், 45 இலட்ச இந்திய ரூபாய்களை தெலுங்கானாவிழும் இப்படம் வசூல் செய்துள்ளது.

தெறி திரைப்படத்தின் விமர்சனத்தை  கீழ் உள்ள காணொளி மூலம் பார்க்கவும் -