Breaking News

ஜெய­ல­லி­தாவின் பொய்­மூட்­டை­களை நம்ப மக்கள் தயாராக இல்லை!

பொய்­மூட்­டை­களை அவிழ்த்து விடும் ஜெய­ல­லி­தாவை நம்ப நாட்டு மக்கள் இனியும் தயா­ராக இல்லை” என கரு­ணா­நிதி கூறி­யுள்ளார்.தி.மு.க. தலைவர் கரு­ணா­நிதி வெளி­யிட்ட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார் .அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது-

தேர்தல் பிர­சாரம் செய்ய ஜெய­ல­லிதா தொடங்­கிய நாளி­லி­ருந்து, என்னைப் பற்றி ஏதா­வது குறை சொல்லிப் பேசா­விட்டால் அவ­ருக்கு பேசிய மன நிறைவே இருக்­காது போலும். ஆனால் நம்மைப் பொறுத்­த­வ­ரையில் அவர் எழுப்பும் பிரச்சி­னை­களின் மூலம் நாட்டு மக்­க­ளுக்கு விளக்கம் அளிக்க நல்ல வாய்ப்பு கிடைக்­கி­றது என்ற வகையில் மகிழ்ச்சி தான்.அருப்­புக்­கோட்­டையில் பேசிய ஜெய­ல­லிதா, “கச்­சதீவு தாரை வார்க்­கப்­பட்­ட­தற்கு கரு­ணா­நிதி உடந்தை என்­பதை நான் அழுத்தம் திருத்­த­மாகக் குற்றம் சாட்­டு­கிறேன். அதி­முக ஆட்சி அமைந்­த­வுடன் உச்ச நீதி­மன்­றத்தின் மூலம் கச்ச தீவு மீட்­கப்­பட்டு தமி­ழக மீன­வர்­களின் உரி­மைகள் நிலை­நாட்­டப்­படும்’’ என்று குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

மீண்டும் அதி­முக ஆட்சி அமைந்­த­வுடன் கச்­சதீவு மீட்­கப்­ப­டுமாம்.இது 2016ம் ஆண்டு சுமார் கால் நூற்­றாண்­டுக்கு முன்பு, ஆம் 25 ஆண்­டு­க­ளுக்கு முன்பு, 1991ம் ஆண்டு, 15.-8.-1991 அன்று கோட்­டையில் விடு­தலை நாளை­யொட்டி கொடி­யேற்றி விட்டுப் பேசிய முத­ல­மைச்சர் ஜெய­ல­லிதா, “கச்ச தீவை மீட்டே தீருவேன்” என்று சூளு­ரைத்­தாரே, அதற்குப் பிறகு இவ்­வ­ளவு காலமும் என்ன செய்து கொண்­டி­ருந்தார் ?. கச்­சதீவை ஏன் மீட்­க­வில்லை? தேர்தல் என்­றதும் கச்­சதீவு நினை­வுக்கு வரு­கி­றதோ ? இந்தப் பிரச்­னையில் நான் துரோகம் செய்து விட்­ட­தாக “அம்­மையார்” இது­வரை எத்­தனை முறை அறிக்கை விடுத்­தி­ருக்­கிறார் என்று எண்­ணித்தான் பார்க்க வேண்டும். ஒவ்­வொரு முறையும், கச்சதீவினை நானும், மத்­திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்­ட­தாகப் புகார்­களை அடுக்க தொடங்கி விடுவார்.

கச்­ச­தீவை தாரை வார்க்க தி.மு.க. எந்தக் காலத்­திலும் ஒப்புக் கொள்­ள­வில்லை; தாரை வார்க்க உடன்­ப­டவும் இல்லை என்­பதை எந்த நேரத்­திலும் எந்த இடத்­திலும் நான் அறை கூவல் விட்டுச் சொல்லத் தயார். தி.மு.கழ­கத்தைப் பொறுத்து மாத்­தி­ர­மல்ல தி.மு.க. ஆட்­சியைப் பொறுத்தும் பல நேரங்­களில் கச்ச தீவு பிரச்சி­னையை எழுப்பி, “கச்­சதீவை மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்கத் தவ­றி­யதும் இல்லை.

கச்சதீவிலே மீன­வர்­க­ளுக்கு உள்ள உரிமை பாதிக்­கப்­ப­டு­வதை எடுத்­துக்­காட்டி, அந்தப் பாதிப்பை நிவர்த்­திக்க வேண்­டு­மென்று கேட்கவும் தி.மு.க. அரசு தவ­றி­யதே இல் லை என்­றெல்லாம் நான் பல முறை திரும்பத் திரும்ப விளக்­கிய பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா எழுப்புகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவரிடம் பேசுவ தற்கு வேறு பொருள்இல்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.