Breaking News

புலி வேட்டையின் உண்மை நோக்கத்தினை கூறினார் பாதுகாப்பு செயலாளர்



முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிராந்தியத் தளபதிகள் சிலர் கைது செய்யப்பட்டமை யாழில் தற்கொலை அங்கிகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காகவே என, பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பிபிசி ஊடகத்திற்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்கள் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.