Breaking News

போராட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் இடமளிக்கக்கூடாது - மாவை கோரிக்கை

மீண்டும் போராட்­டத்தை ஆரம்­பிக்க நல்­லி­ணக்க அர­சாங்கம் இட­ம­ளிக்­கக்­கூ­டாது. நாட்டில் நல்­லி­ணக்க அர­சாங்கம் தொட­ர­வேண்டும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சோ.சேனா­தி­ராஜா தெரி­வித்தார். 

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும், தெல்­லிப்­பழை பல­நோக்கு கூட்­டு­றவுச் சங்க தலை­வரும் நமது ஈழ­நாடு பத்­தி­ரி­கையின் நிர்­வாக முகா­மை­யா­ள­ரு­மான சி.சிவ­ம­க­ரா­சாவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்­னிட்டு சிலை திறப்புவிழாவும் நூல்­வெ­ளி­யீடும் கடந்த சனிக்­கி­ழமை நடை­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

நல்­லி­ணக்க அர­சாங்­க­மா­னது நாட்டில் தொட­ர­வேண்டும் என்றே விரும்­பு­கின்றோம். மாறாக கடந்த ஆட்சி கால-த்தைப் போன்று இன்றும் தொடர இட­ம­ளிக்­க-க்­கூ­டாது. இன்­றைய சூழலில் காணி சுவீ­க­ரிப்பு நடை­பெ­று­கின்­றது. புனர்­வாழ்வு பெற்­ற­வர்கள் மீண்டும் கைதுசெய்­யப்­ப­டு­கின்­றார்கள். இவை நிறுத்­தப்­ப­ட­வேண்டும். குறித்த விட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் விரைவில் பேச­வுள்ளோம்.

இந்த ஆட்சி கடந்த ஆட்­சிபோல் தொடர இட­ம­ளிக்க மாட்டோம். அவ்­வாறு தொட­ரு­மாயின் நாம் மீண்டும் போராட்­டத்­திற்குள் அதா­வது ஜன­நா­யக ரீதி­யாகப் போரா­டுவோம்.

அர­சாங்கம் தற்­போ­தைய நிலை­மையை ஆரா­ய­வேண்டும். அத்­துடன் கிடைத்­துள்ள சர்­வ­தேச சந்­தர்ப்­பத்தை சரி­யாக பயன்­ப­டுத்த வேண்டும். ஐ.நா மனித உரிமை பேர­வையில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை வைத்து தமிழ் மக்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சினை தீர்வு, இரா­ணுவக் குறைப்பு, சொந்த நிலங்­களை மக்­க­ளிடம் ஒப்­ப­டைத்தல், வாழ்­வா­தார உரி­மைகள் போன்ற விட­யங்­களில் அக்­கறை செலுத்தி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

மேலும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அமரர் சி.சிவ­ம­கா­ராசா கூட்­டு­ற­வாளர் மட்­டு­மன்றி அகிம்சை வாதி­யு­மாவார். அத்­துடன் இவர் கூட்­டு­றவு பணி­க­ளுடன் நின்­று­வி­டாது பாரா­ளு­மன்­றத்­திற்கும் சென்று நாட்டின் மக்­க­ளுக்­காக பணி­யாற்­றி­யவர்.

ஒரு இலக்­கோடு, கொள்­கை­யோடு நின்று செய­லாற்­றி­யவர். மக்­களின் தேவை­களை, உரி­மை­களை நிலை நாட்ட பல போராட்­டங்­களை அவர் முன்­னின்று நெறிப்­ப­டுத்­தி­யவர். இறக்கும் தறுவாயிலும் மக்களுக்காக சேவையாற்றிய மனிதனை வன்முறையாளர்கள் சுட்டுக்கொன்றனர். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. இக்கொலையை செய்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.