Breaking News

நம்பி ஏமாந்து போறோம் காப்பாத்துங்க அம்மா!



ராஜீவ் கொலை வழக்கில் குற்­ற­வாளி என அறி­விக்­கப்­பட்டு சிறைத்­தண்­டனை அனு­ப­வித்து வரும் பேரறி­வாளன் உள்­ளிட்­டோரின் விடு­த­லைக்கு மத்­திய அரசு மறுப்பு தெரி­வித்­துள்ள நிலையில், இது தொடர்பில் பேர­றி­வா­ளனின் தாயார் அற்­பு­தம்மாள் தெரி­வித்­துள்­ள­தா­வது, ”

இந்தத் தேர்­தலில் வாக்­க­ளிக்க அறிவு வந்­து­டு­வான்னு நம்­பினேன். இப்­படி நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வழக்­கமாப் போச்சு. இப்­பவும் முதல்­வ­ரைத்தான் நம்பி இருக்கோம்.

இந்­த­முறை மத்­திய அரசு மறுக்­கா­துன்னு சொன்­னாங்க. தேர்­தலை எதிர்­கொள்­ற­துக்கு முன்­னால, ‘விடு­தலை செய்வார் முதல்வர் அம்மா’ன்னுதான் சொன்­னாங்க. அதை நம்­பித்தான் இருந்தோம். அவர் பிர­சா­ரத்தைத் தொடங்­கி­னதும் மன­சுக்கு கஷ்­ட­மா­யி­டுச்சு.

வழக்கு நிலு­வையில் இருக்­குன்னு காரணம் காட்­ட­றாங்க. இந்த வழக்கைப் பொறுத்­த­வ­ரை­யிலும், முதல்வர் முன்­னா­டியே இந்தப் பிரச்சி­னையை கையில் எடுத்­த­தால, எப்ப வேணாலும் நட­வ­டிக்கை எடுக்­க­லாம்னு தேர்தல் ஆணை­யகம் சொல்­லி­டுச்சு.

‘தேர்­த­லுக்கும் விடு­த­லைக்கும் சம்­பந்­த­மில்லை. புது அறி­விப்பு மட்­டும்தான் வெளி­யிடக் கூடாது’ன்னு லக்­கானி விளக்கம் கொடுத்தார்.

முதல்வர் அம்மா தயங்­காமல் உடனே நட­வ­டிக்கை எடுக்­கணும். நிலு­வை­யில இருக்­கற வழக்கை மாநில அரசே கவ­னிக்­கணும். போகப் போக அவனும் நோய்க்­கா­ரனா மாறிட்டு இருக்கான். அறிவு அப்பா உடல் நல­மில்­லாம படுத்துக் கிடக்கார். அவர் நம்­பிக்கை இழந்­துட்டார்.

ஒவ்­வொரு முறையும் ஏமா­றும்­போது, இப்­ப­டியே கடைசி வரை­யில ஏமாத்­தி­ரு­வாங்­க­ளான்னு அழு­கிறார். எங்க ரெண்டு பேருக்கும் ஏதா­வது நடந்­துட்ட பிறகு, அறிவை விடு­தலை பண்ணி என்­னப்பா பிர­யோ­சனம்? நாங்க செத்த பிறகு அவனால, இறுதி வாழ்க்கையை நிம்மதியா வாழ முடியுமா? இதை எப்படி வெளிப்படுத்துறதுன்னு தெரியலைப்பா…” என்றவாறு கதறியழுதார்.