Breaking News

பிக்குகளாக மாற்றப்பட்டுள்ள தமிழ் சிறுவர்கள்?



போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவர்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

கண்டக்குளி சமுத்ராசன்ன விகாரையின் தலைமை பிக்குவான பெந்திவெவ தியசேன தேரரால் இந்தச் சிறுவர்கள், ஓராண்டுக்கு முன்னர் பௌத்த பிக்குகளாக மாற்றப்பட்டுள்ளனர்.

துறவிகளாகி ஓராண்டுக்குள் சிங்கள மொழியில் பௌத்த வழிபாடுகளை நடத்துமளவுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ள இந்தச் சிறுவர்களை, எதிர்காலத்தில் தமிழ் மொழியில் பௌத்த போதனைகளை வழங்குவதற்காக தயார்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு தமிழ் சிறுவர்கள் பௌத்த துறவிகளாக மாற்றப்பட்டுள்ளமை தாயகத்தில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vedio