Breaking News

எமக்கு பொலிஸ் அதி­கா­ரத்தை தாருங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்தி காட்டுகிறோம்!

வடக்­கி­லுள்ள இரா­ணு­வத்­தி­னரை அகற்­றி­விட்டு பொலிஸ் அதி­கா­ரங்­களை எம்­மிடம் கையளித்தால் யாழ்.குடா­நாட்டில் தற்பொ­ழுது இடம்­பெற்­று­வ­ரு­கின்ற வன்­மு­றை­களை உட­ன­டி­யாக முடி­வுக்­குக்­கொண்­டு­வ­ருவோம் என வட­மா­கா­ண­ச­பையின் முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாகக் கீழே தரப்­ப­டு­கி­றது.

கேள்வி: தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு சமஷ்டி முறை­யி­லான தீர்வு காணப்­ப­ட­வேண்­டு­மென வட­மா­கா­ண­ச­பையில் தீர்­மா னம் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆனால் ஜனா­தி­பதி யார் வேண்­டு­மென்­றாலும் அவர்­க­ளது கருத்­துக்­களை தெரி­விக்­க­லா­மென கூறி­யுள்ளார். இந்­நி­லையில் இப்­பி­ரே­ர­ணையை நிறை­வேற்­றி­யது பய­னு­டை­ய­தாக அமை­யுமா?

பதில்: முதலில் நாங்கள் வட­மா­கா­ண­சபை என்ற முறையில் மூன்று குழுக்­க­ளாகப் பிரிந்து தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான சமஷ்டி முறை­யி­லான தீர்வு தொடர்பில் கருத்­துக்­க­ளையும் முன்­மொ­ழி­வு­க­ளையும் பெற்­றுக்­கொண்டோம். பின்னர் இந்த முன்­மொ­ழி­வு­க­ளையும் கருத்­துக்­களும் வட­மா­கா­ண­ச­பை­யி­னூ­டாக வர­வேண்டும் என்­ப­தற்­கா­கவே நாங்­கள் இதை பிரே­ரணை என்ற வடிவில் கொண்­டு­வந்தோம்.

எங்­க­ளு­டைய முன்­மொ­ழி­வு­க­ளுக்கு வலு வைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­கா­கவே நாங்கள் இதனைப் பிரே­ர­ணை­யாக நிறை­வேற்­றி­யி­ருந் தோம். ஆனால் ஜனா­தி­பதி யார் வேண்­டு­மென்­றாலும் அவர்­க­ளது கருத்­துக்­களை தெரி­விக்­க­லா­மென கூறிய அடிப்­ப­டைக்கும் இதற்கும் தொடர்­பில்லை.

வட­மா­கா­ணத்தின் பொது­மக்கள், சிவில் சமூ­கங்கள், பாரா­ளு­மன்ற அங்­கத்­தினர், அர­சி­யல்­வா­திகள் என எல்­லோரும் சமஷ்டி முறை­யி­லான ஆட்­சி­யி­னையே விரும்­பு­கி­றார்கள். ஆகவே, தமிழ் மக்­க­ளு­டைய ஏகோ­பித்த கருத்­துக்­க­ளையும் எண்­ணங்­க­ளையும் எடுத்­துக்­கூ­ற­வேண்­டிய கடப்­பாடு எங்­க­ளுக்கு இருக்­கி­றது. ஆகவே நாங்கள் அவற்றை எடுத்துக் கூறி­யுள்ளோம்.

எங்­க­ளு­டைய இத்­தீர்­மா­னத்தை நிறை­வேற்­று­வார்­களா? தட்­டிக்­க­ழிப்­பார்­களா? என எங்­களால் தற்­பொ­ழுது உறு­தி­யா­கக்­கூற முடி­யாது. ஆனாலும் நாங்கள் எங்­க­ளு­டைய கட­மை­களைச் சரி­யாக செய்­ய­வேண்டும்.

குசல் பெரே­ராவின் புத்­தக வெளி­யீட்­டின்­போது பலர் "நீங்கள் ஏன் சமஷ்­டியை முன்­மொ­ழி­கி­றீர்கள்" என என்­னிடம் கேட்­ட னர். அதற்கு நான் "இலங்­கையில் அர­சி யல் வாதிகள் பல வரு­டங்­க­ளாக சமஷ்­டி­யென்றால் பிரி­வினை என்று அர­சியல் செய்­த­மை­யா­லேயே சிங்­கள மக்கள் சமஷ்­டி­யைக்­கண்டு பயப்­ப­டு­வ­தற்குக் கார­ண­மாகும் அத்­துடன் சமஷ்டி என்­பது பிரி­வினை அல்ல பிரிந்­தி­ருப்­ப­வர்­களை ஒன்­றி­ணைப்­பதே சமஷ்­டியின் அடிப்­படை.” என அவர்­க­ளுக்கு எடுத்துக் கூறினேன்.

ஆனால், தற்­பொ­ழுதும் கூட ஒரு சமஷ்டி முறை இருக்­கி­றது. அதா­வது 1987 இல் ஒன்­பது மாகா­ணங்­க­ளுக்கும் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­ட­போதே சமஷ்டி ஓர­ள­வுக்கு இலங்­கையில் வந்­துள்­ளது எனக்­கூ­ற லாம். ஆனால் அந்த முறையில் இருக்­கின்ற ஒரு பிரச்­சினை என்­ன­வென்றால் எங்­க­ளு­டைய அர­சியல் யாப்­பா­னது தற்­பொ­ழுது ஒற்­றை­யாட்­சியின் அடிப்­ப­டையில் அமைந்­துள்­ளது. இந்த ஒற்­றை­யாட்சி அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் மூல­மாக மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரங்­களை மீளப்­பெற்­றுக்­கொள்­வ­தற்கு அர­சாங்­கத்­துக்கு அதி­காரம் உண்டு. ஆனால் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அர­சி­ய­ல­மைப்பு என்றால் அவ்­வாறு மத்­திய அர­சாங்கம் வழங்­கிய அதி­கா­ரங்­களை மீளப்­பெற்­றுக்­கொள்ள வேண்­டு­மானால் எங்­க­ளுடன் (மாகாண சபை­க­ளுடன்) கலந்­தா­லோ­சித்து அதன் அனு­ம­தி­யு­டனே மீளப்­பெ­ற­வேண்டும். இதுவே ஒற்­றை­யாட்­சிக்கும் சமஷ்­டி­யாட்­சிக்கும் உள்ள வேறு­பா­டாகும்.

இதற்­கான ஒரு உதா­ர­ணத்­தையும் நான் அங்கு எடுத்­துக்­கூ­றினேன். 1987 ஆம் ஆண்டு அர­சாங்க அதிபர், பிர­தேச செய­லாளர், கிராம சேவகர் ஆகிய மூவரும் எங்­க­ளு­டைய (மா காண சபையின்) அதி­கா­ரத்தின் கீழ் இருந்­தார்கள். ஆனால் 1992 இல் அர­சாங்கம் ஒரு சட்­டத்­தைக்­கொண்­டு­வந்து அவர்கள் மூவ­ரை
யும் மத்­தி­ய­ அ­ரசின் கீழ் கொண்­டு­வந்­தது.

தற்­பொ­ழுது வட­மா­கா­ணத்தில் இரண்டு வித­மான அதி­கார மையங்கள் இருக்­கின்­றன. ஆகவே சமஷ்டி முறை­யி­லான ஆட்­சி யின் கீழ் நிர்­வாகம் செய்­வ­தற்கு போது­மான வலு இருக்கும். ஆகவே இந்த உரித்­தினை நாங்கள் ஒற்­றை­யாட்­சியின் கீழ் நாங்கள் இழந்­தி­ருக்­கின்றோம். ஆகவே தான் இந்த சமஷ்­டியின் முக்­கி­யத்­து­வத்தை உணர்ந்து நாங்கள் வட­மா­ண­ச­பையின் மூலம் தீர்­மானம் நிறை­வேற்­றினோம்.

கேள்வி: நீங்கள் வட­மா­கா­ண­ச­பையின் பிரே­ர­ணையை முதலில் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­தீர்கள். இதை எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரிடம் முதலில் கைய­ளித்­தி­ருக்­க­வேண்டும் என சர்ச்சை ஏற்­பட்­டுள்­ளதே?

பதில்: ஆம். அவ்­வாறு சர்ச்சை ஏற்­பட்­டது உண்­மைதான். ஆனால் இவ்­வாறு சர்ச்சை ஏற்­ப­ட­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. ஏனென்றால், மூவ­ரிடம் பிரே­ரணை கைய­ளிப்­பது தொடர்பில் ஏற்­க­னவே வட­மா­கா­ண­ச­பையில் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­டது. சபா­ நா­யகர் 225 பாரா­ளு­மன்ற அங்­கத்­தி­னர்­க­ளையும் உள்­ள­டக்­கிய பாரா­ளு­மன்ற அர­சி­ய­ல­மைப்பின் தலைவர், மேலும் அண்­மையில் 22 பேரைக்­கொண்டு அமைக்­கப்­பட்ட கமிட்­டிக்கும் தலை­வ­ராக உள்ளார். ஆகவே சபா­நா­யகர், பிர­தமர், எதிர்க்­கட்­சித்­த­லைவர் ஆகிய மூவ­ருக்கும் இந்த பிரே­ரணை கைய­ளிக்­கப்­ப­ட­வேண்டும் என முன்­னரே கலந்­தா­லோ­சித்­தி­ருந்தோம்.
அதில் யாருக்கு முதலில் கைய­ளிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் எந்­தப்­பி­ரச்­சி­னை­யுமில்லை. மேலும் ஒழுங்­கு­முறை அடிப்­ப­டை­யிலும் இவ்­வாறே கைய­ளிக்­க­வேண்டும். சென்­ற­முறை நான் இங்கு வந்­தி­ருந்­த­போது என்­னிடம் முன்­மொ­ழி­வுகள் கைவசம் .இருந்­த­தாலும், பிர­த­ம­ருக்கு வெளி­நாட்­டுப்­ப­ய­ணங்கள் இருந்­த­மை­யாலும் நான் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ருடன் சேர்ந்தே பிரே­ர­ணையை முதலில் அவர்­க­ளுக்கு சமர்ப்­பித்தேன்.

கேள்வி: யாழ்.குடா­நாட்டில் வாள்­வெட்­டுக்­க­லா­சாரம் தலை­தூக்­கி­யுள்ள நிலையில் மாகாண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்தால் இந்த வன்­மு­றைகள் ஆரம்­பத்­தி­லேயே முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருக்­குமா? இவ்­வா­றான வாள்­வெட் டுக் கலா­சா­ரங்­களை மட்­டுப்­ப­டுத்த மாகா­ண­சபை எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது?

பதில்: இரா­ணு­வத்தை வெளி­ய­கற்றி பொலிஸ் அதி­கா­ரத்தை மாகா­ண­ச­பைக்கு வழங்­கினால் நாங்கள் கட்­டாயம் இந்த வன்­ மு­றை­களை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு வோம். இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­படை என முப்­ப­டை­களின் பிர­சன்­னமும் வடக்கில் காணப்­ப­டு­வ­தாலும் சிங்­கள பிர­தே­சங்­க­ளி­லி­ருந்து சிங்­கள பொலிஸார் இங்கு பணிக்­க­மர்த்­தப்­பட்­டுள்ள நிலை­யிலும் அதி­காரம் எங்­க­ளு­டைய கையில் இல்லை.

மேலும் இங்கு கவ­னிக்­க­வேண்­டிய இன்­னொரு விடயம் என்­ன­வென்றால் இத்­தனை ஆயிரம் இரா­ணுவம், கடற்­படை என்­பன இங்கு குவிக்­கப்­பட்­டி­ருந்தும் கூட இவ்­வா­றான பிரச்­சி­னை­கள் இங்கு நடை­பெ­று­கின்­ற­தென்றால் அங்கு ஏதோ ஒன்று நடக்­கி­றது. ஏதோ இரு இடத்தில் பிரச்­சினை இருப்­ப­துபோல் எமக்குத் தெரி­கின்­றது. அத்­துடன் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கும் பதில் சொல்ல முடி­யாமல் இருக்­கி­றது. ஆகவே வடக்­கி­லுள்ள இரா­ணுவம் முற்­றாக அகற்­றப்­பட்டு பொலிஸ் அதி­கா­ரங்கள் எமக்குக் கிடைத்தால் யாழ்­.கு­டா­நாட்டில் அரங்­கே­றி­வரும் இவ்­வா­றான வன்­முறைச் செயல்­களை கட்­டாயம் தடுத்து நிறுத்­துவோம். அதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை.

அடுத்­தது இவ்­வா­றான குற்­றச்­செ­யல்­களை தடுத்து நிறுத்த நான் சென்ற வரு­டமே பொலி­ஸா­ரையும் பொது­மக்­க­ளையும் குழுக்­க­ளாக அமைத்து ஒவ்­வொரு இடங்­க­ளிலும் குறித்த காலப்­ப­கு­திக்கு ஒரு­முறை அந்­தந்த இடங்­களில் நடை­பெறும் விட­யங்­களை பரி­சீ­லித்து உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான ஒரு கருத்­தா­வணம் ஒன்றை தயா­ரித்தேன். அதற்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜய­சிங்க உடன் தொடர்­பு­கொண்டு அதற்கு ஒப்­புதல் பெற்றுக்கொடுத்தார். மேலும் பொலிஸ் மா அதி­ப­ரி­டமும் நான் அதைக் குறித்­துப்­பே­சி ­யி­ருந்தேன். அதற்கு அவரும் அனு­ம­தி­ய­ளித்­தி­ருந்தார். பின்னர் பிரதிப்பொலிஸ்மா அதிபரின் இட­ம­ாற்­றத்­தை­ய­டுத்து இந்த முயற்சி தாம­தப்­பட்­டது. ஆனாலும் தற்­பொ­ழுது நாங்கள் இந்­தக்­கு­ழுக்­களை அமைக்­க­வுள்ளோம்.

பிர­தேச, மாவட்ட, மாகாண என்ற மூன்று மட்­டங்­களின் அடிப்­ப­டையில் இந்த குழுக்­களை அமைக்­க­வுள்ளோம். அத்­துடன் மாகாண மட்­டத்தில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உயர் நீதி­மன்ற நீதி­பதி, மாகா­ண­சபை உறுப்­பினர், உப செய­லாளர் ஆகி­யோ­ரையும் அழைத்து கூட்­ட­மொன்றை ஏற்­பா­டு­செய்­ய­வுள்ளோம். மாகாண சபை மட்­டத்தில் இடம்­பெறும் இந்­தக்­கூட்­டத்தில் நாங்கள் மாகா­ணத்­தி­லுள்ள குறை­பா­டுகள் அனைத்­தையும் பற்றி கலந்­து­ரை­யா­ட­வுள்ளோம்.

மாவட்ட ரீதி­யிலும் இவ்­வா­றான குழுக்­களை அமைத்து கூட்­டங்­களை நடத்த ஏற்­பாடு செய்­ய­வுள்ளோம். இவ்­வாறு ஐந்து மாவட்­டங்­க­ளிலும் எங்­க­ளு­டைய மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களின் தலை­மை­யிலும் உயர் பத­வி­க­ளி­லுள்ள பொலி­ஸாரின் பங்­க­ளிப்­பு­டனும் இவ்­வா­றான கூட்டம் மேற்­கொள்­ளப்­படும்.
பிர­தேச ரீதியில் பிர­தேச சபை செய­லா­ளர்கள், கிராம சேவ­கர்கள், பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரி­களின் தலை­மையில் கூட் டம் நடத்­தப்­படும். ஆகவே அடி மட்­டத்­தி­லி­ருந்து மேல்­மட்டம் வரையில் நாங்கள் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வுள்ளோம். இதன் முத­லா­வது கூட்டம் எதிர்­வரும் 18 ஆந்­தி­கதி என்­னு­டைய தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது.

நாங்கள் இவ்­வா­றான வன்­மு­றைச்­சம்­ப­வங்­களை தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­வாறே உள்ளோம். இதற்கு ஜனா­தி­பதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாத­னை அனுப்பியிருந்தார். ஆகவே பொலி­ஸா­ருக்கும் எங்­க­ளுக்கும் இடையில் தமிழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒரு பால­மாக இருந்து இவ்­வா­றான செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுக்க உத­வி­யாக இருக்­கிறார். அதன் விளை­வா­கவே அண்­மையில் நடை­பெற்ற களவு, வாள்­வெட்டு போன்ற வன்­மு­றைச்­சம்­ப­வங்கள் பொலி­ஸாரின் கட்­டுப்­பாட்­டுக்குள் வரத்­தொ­டங்­கி­விட்­டன.

கேள்வி: இரா­ணு­வத்­தி­னரை முற்­றாக வடக்­கி­லி­ருந்து அகற்­ற­வேண்டும் அல்­லது முகா­முக்குள் முடக்­க­வேண்டும் என்­பதில் நீங்கள் எதில் உறு­தி­யாக இருக்­கின்­றீர்கள்?

பதில்: முடக்­கி­வைப்­பதால் பிரச்­சி­னை­களை முடி­வுக்குக் கொண்­டு­வர முடி­யாது. ஆகவே படை­யி­னரை வடக்­கி­லி­ருந்து முற்­றாக வெளி­ய­கற்­ற­வேண்டும் என்­ப­தி­லேயே மிகவும் உறு­தி­யாக காணப்­ப­டு­கின்றேன். ஏனென் றால் தற்­பொ­ழுதும் படை­யினர் முகா­முக்குள் முடங்­கி­யி­ருப்­ப­தா­கத்தான் கூறு­கின்­றார்கள்.
ஆனால் ஒவ்­வொ­ரு­நாளும் காலையில் ஆறு, ஏழு இரா­ணு­வத்­தினர் சைக்­கிளில் உலா வரு­கின்ற நிலைமை தொடர்­கின்­றது. இதனால் பொது­மக்கள் இன்னும் அச்­சத்தில் ஆழ்ந்­துள்­ளனர். ஆகவே முடக்க வேண்டும் என்­பதில் எனக்கு உடன்­பாடு இல்லை. முற்­றாக அகற்­றப்­ப­ட­வேண்டும் என்­ப­தி­லேயே உறு­தி­யாக இருக்­கின்றேன். என்­னு­டைய மாண­வனும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரவி­ராஜை சுட்­டுக்­கொன்­று­விட்டு சுட்­ட­வர்கள் இரா­ணுவ முகா­முக்­குள்­ளேயே திரும்­பி­விட்­டனர்.

கேள்வி: நினை­வேந்தல் வாரம் இன்னும் சில நாட்­களில் நடை­பெ­ற­வுள்­ளது. ஆகவே இம்­மு­றையும் நினை­வேந்தல் வாரம் அச்­சங்கள், அசம்­பா­விங்கள் இன்றி நடை­பெ­றுமா?

பதில்: சென்ற வருடம் கூட பல பிரச்­சி­னைகள் ஏற்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட நிலையில் நாங்கள் பொலி­ஸா­ரிடம் பேசிக்­கொண்­ட­தற்­கி­ணங்க எப்­பி­ரச்­சி­னை­களும் இல்­லாமல் நினை­வேந்தல் வாரம் இடம்­பெற்­றது. ஆகவே நான் இம்­மு­றையும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் சென்ற முறை நினை­வேந்தல் வாரம் எவ்­வி­த­மான பிரச்­சி­னை­களும் இல்­லாமல் சுமு­க­மாக இடம்­பெற்­றது. ஆகவே இந்­த­மு­றையும் தங்­க­ளது உத­வி­யினை தர வேண்டும் என அவ­ருக்கு கடிதம் அனுப்­பி­விட்டே நான் கொழும்­புக்கு வந்­துள்ளேன். ஆகவே பிரச்­சி­னைகள் ஏற்­படும் என நான் நினைக்­க­வில்லை. மேலும் நான் பொலிஸ் அத்தியட்சகரிடம் இந்த நினை­வேந்தல் வாரம் குறித்து விளக்­கி­யுள்ளேன்.

அதா­வது இந்த நினை­வேந்தல் வாரம் என்­பது பிரார்த்­தனை செய்­வ­தற்­கான ஒரு தருணம். ஆகவே மக்கள் எங்­கி­ருந்தும் வந்து தங்கள் பிரார்த்­த­னை­களை ஏறெ­டுக்­க­மு­டியும். அத்­துடன் இறந்­த­வர்­க­ளுக்கு நினை­வஞ்­சலி செலுத்­தியும் பிரார்த்­த­னை­க­ளிலும் ஈடு­ப­டு­வார்கள். அதோடு மக்­க­ளுக்கும் அந்த இடம், நிகழ்­வுகள் குறித்தும் முத­ல­மைச்சர் தலை­மையில் ஒரு சிறு உரை­யொன்று இடம்­பெறும். ஆகவே அசம்­பா­வி­தங்கள் ஏற்­ப­டா­த­வாறு சென்­ற­மு­றை­யைப்போல் இம்­மு­றையும் சுமு­க­மா­கவே நினை­வேந்தல் வாரம் இடம்­பெறும் என நான் எதிர்­பார்க்­கின்றேன்.

கேள்வி: புனர்­வாழ்­வ­மைச்சின் 65,000 வீட்­டுத்­திட்டம் மக்­க­ளுக்கும் சீதோஷ்ண நிலைக்கும் பொருத்­த­மற்­றது என்ற நிலை ப்­பாட்டில் இருக்­கின்­றீர்கள். உங்­க­ளு­டைய இந்த எதிர்ப்பை பிர­தமர், ஜனா­தி­பதி, புனர்­வாழ்வு அமைச்சர் ஆகி­யோ­ரிடம் வெளிப் ­ப­டுத்­தி­னீர்­களா? 65,000 வீட்­டுத்­திட்­டத்­திற்­கான மாற்­றுத்­திட்டம் ஏதேனும் உங்­க­ளிடம் உண்டா?

பதில்: ஆம். வெளிப்­ப­டுத்­தி­யுள்ளேன். மக் கள் வீடு­க­ளைக்­கேட்­கி­றார்கள் என்று புனர்­வாழ்வு அமைச்சு கூறு­கி­றது. ஆம். அது உண்மை. மக்கள் வீடு­க­ளைக்­கோ­ரு­கி­றார் கள் தான். ஆனால் மக்கள் 2.1 மில்­லியன் பெறு­ம­தியில் சூழ­லுக்கு பொருத்­த­மற்ற இவ்­வா­றான வீடு­க­ளைக்­கேட்­க­வில்லை. அத்­து டன் இதற்­கான மாற்­றத்­திட்­ட­மொன்­றையும் நாங்கள் ஆராய்ந்து வரு­கின்றோம். அதா­வது எங்­க­ளு­டைய பொறி­யி­ய­லா­ளர்கள் இந்த 2.1 மில்­லியன் ரூபாவில் திற­மான இரண்டு வீடு­க­ளைக்­கட்­டு­வது தொடர்பில் அறிக்­கை­யொன்றை சமர்ப்­பித்­தி­ருந்­தி­ருக்­கி­றார்கள். ஆகவே நாங்கள் அறிக்­கையை தற்­போது பரி­சீ­லித்து வரு­கிறோம்.

கேள்வி: அமைச்­ச­ர­வைக்­ கூட்­டங்­களில் முத­ல­மைச்­ச­ர் என்ற ரீதியில் உங்களுக்கு அழைப்பு விடுத்தும் நீங்கள் தொடர்ச்­சி­யாக கலந்­து­கொள்­ள­வில்­லையே?

பதில்: ஒரு அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்­துக்கு எனக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தார்கள். உடல் நிலை சரி­யில்­லாத கார­ணத்­தினால் எனக்கு அந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் பங்­கு­பற்ற முடி­ய­வில்லை. பின்னர் சமு­க­ம­ளிக்­க­மு­டி­யாமற் போன­தற்­கான கார­ணத்­தையும் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தேன். ஆனால் அதன் பின்னர் எந்­த­வொரு அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கும் எனக்கு அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை.

கேள்வி : வட­மா­காண சபைக்கு மத்­திய அரசால் வழங்­கப்­ப­டு­கின்ற நிதி முறை­யாக செல­வ­ழிக்­கப்­ப­டாமல். அது மீண்டும் திறை­சே­ரிக்கே செல்­கின்­ற­தென்று கூறப்­ப­டு­கி­றது. இதன் உண்­மைத்­தன்மை என்ன?

பதில்: இது முற்­றிலும் பொய்­யான ஒரு விடயம். சிலர் தங்­க­ளு­டைய குறு­கிய அர­சியல் நோக்­கத்­துக்­காக நாங்கள் மத்­திய அர­சிடம் கிடைக்கும் நிதியை செல­வ­ழிப்­ப­தில்லை எனக்­கூ­று­கி­றார்கள். சென்ற வருடம் கிடைத்த மத்­திய அரசின் நிதியில் நாங்கள் 95 வீதத்­தி­லி­ருந்து 100 வீதத்­துக்கு இடைப்­பட்ட நிதியை செல­வ­ழித்­துள்ளோம்.

மேலும் சில அர­சி­யல்­வா­திகள் எமக்கு அர­சியல் அனு­பவம் இல்லை. முறை­யாக நிர்­வாகம் நடத்த தெரி­ய­வில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார்கள்.

நாங்கள் பணத்தையும் பலத்தையும் முறை யாகவே பயன்படுத்துகின்றோம். அத்துடன் இவ்வாறு குறைகூறும் அரசியல்வாதிகள் எதையும் நினைத்தவுடனேயே உடனடியாக செய்யவேண்டும் . அதுவே அதிகாரத்திறமை என நினைக்கிறார்கள்.

ஆனால், நாங்களோ அவ்வாறு நினைக்க வில்லை. எது மக்களுக்கு நன்மை பயக் கும், எது சட்டரீதியானது, எதை மக்கள் வர வேற்பார்கள், எது தூரநோக்கில் மக்களுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் என்ப வற்றை ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கின் றோம். நாங்கள் தான்தோன்றித்தனதமாக எதை யும் செய்வ தில்லை என்பதை முதலில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பவர் கள் விளங்கிக்கொள்ளவேண்டும்

கேள்வி: வட மாகாண முதலமைச்சு நிதி யத்திற்கு முன்னாள் ஆளுநர் மறுப்புத் தெரிவித்திருந்துள்ளார். முதலமைச்சு நிதி யம் குறித்து தற்போதைய ஆளுநர் ரெஜி னோல்ட் குரேயின் கருத்து என்ன?

பதில்: முதலமைச்சு நிதியம் தொடர்பில் ஆளுனர் ரெஜினோல்ட் குரே எவ்வித மறுப் பையும் தெரிவிக்கவில்லை. தற்போது முதல மைச்சு நிதியத்துக்கான சட்டங்கள் அமைத் தல் மற்றும் அதற்கான மொழி பெயர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றோம். விரைவில் இந்த முதலமைச்சு நிதியம் தொடர்பில் ஆளுநருடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம்.

கேள்வி : அவ்வாறு முதலமைச்சு நிதியம் ஆரம்பிக்கப்பட்டால் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு பெறப்படும் நிதி மத்திய வங்கியின் திறைசேரி மூலமாகவா பெற்றுக்கொள்ளப்பட வேண் டும்?

பதில்: ஆம். தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் நிதி வரவேண்டியது அவசி யம். அத்துடன் இது தொடர்பில் வேறு விமர் சனங்கள் எழக்கூடாதென்பதற்கும் வெளிப் படைத்தன்மைக்காகவும் எங்களுடைய பொறுப்பாளர் சபையில் வெளிவளத் திணை க்களத்தின் அங்கத்தவர் ஒருவரையும் நியமி த்துள்ளோம்.