Breaking News

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டாலும் புலிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள்!



பயங்­க­ர­வாதச் தடைச்­சட்டம் நீக்­கப்­பட்­டாலும் கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள “விடு­தலைப் புலி” உறுப்­பி­னர்கள் விடு­தலை செய்­யப்­பட மாட்­டார்கள் என தெரி­வித்­துள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர, கடந்த காலங்­களில் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் அர­சியல் பழி­வாங்­கல்­க­ளுக்­கா­கவே பயன்­ப­டுத்­தப்­பட்­டது என்றும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக வெளி­வி­வ­கார அமைச்­சர்கள் மங்­கள சம­ர­வீர மேலும் தெரி­விக்­கையில், பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நீக்­கப்­படும். ஆனால் அதற்குப் பதி­லாக சர்­வ­தேச நிய­மங்­க­ளுக்கு அமை­வா­ன­தாக புதிய சட்டம் ஏற்­ப­டுத்­தப்­படும்.

இது தொடர்­பாக சட்­டங்­களைத் தயார்­ப­டுத்­து­வது தொடர்பில் இலங்கைச் சட்ட ஆணைக்­குழு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. அதே­வேளை பயங்­க­ர­வாத தடைச் சட்டம் நீக்­கப்­பட்­டாலும் கடு­மை­யான குற்­றங்­களைப் புரிந்து தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் விடு­தலை செய்­யப்­பட மாட்­டார்கள். கடந்த காலங்­களில் பயங்­க­ர­வாத தடைச் சட்டம் அர­சியல் பழி­வாங்­கல்கள் நட­வ­டிக்­கை­க­ளுக்­கா­கவே பெரு­ம­ளவில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. என தெரிவித்துள்ளார்.