4 ஆண்டுகளுக்கு அரசாங்கத்தை யாராலும் அசைக்கவே முடியாது
அரசாங்கம் தற்போது முன்னெடுத்துவரும் ஜனநாயக செயற்பாடுகள் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. இந்த செயற்பாடுகளின் மூலம் அரசியல் தீர்வு ஒன்றை நிரந்தரமாக பெற்றுகொள்ளவும் முடியும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
சிலர் இனவாதத்தை பரப்பி ஆட்சியை கவிழ்க்க முயற்சித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் என்ன சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்த ஆட்சியை அசைக்கக்கூட முடியாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
புதிய அரசியலமைப்பை உருாவக்கும் நோக்கில் பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் ஆலோசனைக் குழுவின் தலைவராக என்னை நியமித்துள்ளனர். கடந்த காலத்தில் மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைகப்பட்டுள்ளது. ஆனால் இறுதியில் அவற்றிற்கு என்ன ஆனது என்பது எவருக்குமே தெரியாது. எவ்வாறிருப்பினும் இம்முறை மனித உரிமைகள் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியாகவேண்டும் என நிலைப்பாட்டில் நம் உள்ளோம்.
அதேபோல் 19ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு மற்றும் சுயாதீன ஆணைக்குழு நியமனம் என்ற விடயங்களை நாம் உறுதிப்படுத்தியுள்ளமையானது எமக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். ஆட்சியில் இருக்கும் ஒரு அதிகாரமிக்க தலைவர் தனது அதிகாரங்களை குறைக்க இணக்கம் தெரிவித்தமையும் அதிகாரங்களை சமப்படுத்தி பாராளுமன்றத்தை பலப்படுத்தியமையுமே நாம் ஜனநாயகத்தை வெற்றிகொண்டதுக்கு சிறந்த சான்றாகும்.
அதேபோல் சர்வதேச மட்டத்தில் எமக்கு இருந்த அழுத்தங்கள், சிக்கல்கள் அனைத்திலும் இருந்து நாம் எம்மை பாதுகாத்துக் கொள்ளவும், சர்வதேச நாடுகளை நாம் நட்பு நாடுகளாக்கிக்கொள்ளவும் இந்த காரணிகளே சாதகமாக அமைந்தன.
ஆட்சிமாற்றம் கூட எமக்கு நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தியது. கடந்த காலத்தில் எம்மீது இருந்த குற்றச்சாட்டுகளை நிவர்த்திசெய்து கொள்ளவும், அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி பயணிக்கவும் நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. அவ்வாறான நிலையில் தற்போது நாம் முன்னெடுத்துவரும் ஜனநாயக செயற்பாடுகள் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவும் நல்லதொரு சந்தர்ப்பமாக அமையும். அதன் மூலம் அரசியல் தீர்வு ஒன்றை நிரந்தரமாக பெற்றுகொள்ளவும் சாத்தியம் உள்ளது.
எமது ஜனநாயக செயற்பாடுகள் அனைத்தையும் விமர்சிக்கவும், தடுக்கவும் ஒரு சிலர் முயற்சித்து வருகின்றனர். இனவாதத்தை பரப்பி ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இவர்கள் என்ன சூழ்ச்சிகளை மேற்கொண்டாலும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இந்த ஆட்சியை அசைக்கக்கூட முடியாது. நாம் இப்போது குறைகளை நிவர்த்திசெய்யவே அதிக காலம் எடுக்கின்றோம். அடுத்ததாக ஜனநாயக செயற்பாடுகளை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
இப்போது இவர்கள் பாராளுமன்றத்திலும், ஊடக சந்திப்புகளிலும் நடந்துகொள்வதைப்போல இனியும் நடந்துகொள்ள முடியாது. இப்போதே மக்களுக்கு இவர்களின் உண்மையான தோற்றம் விளங்கியுள்ளது. மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு பாராளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபடும் இவர்களை அடுத்த தேர்தலில் மக்கள் விரட்டியடிப்பார்கள்.
ஆகவே ஆட்சி முடியும் நிலையில் அடுத்த தேர்தல் வரும் போது இந்த அராஜகக்காரர்கள் ும் நடந்துகொள்வதைப்போல இனியும் நடந்துகொள்ள முடியாது. இப்போதே மக்களுக்கு இவர்களின் உண்மையான தோற்றம் விளங்கியுள்ளது. மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு பாராளுமன்றத்தில் அடிதடியில் ஈடுபடும் இவர்களை அடுத்த தேர்தலில் மக்கள் விரட்டியடிப்பார்கள். ஆகவே ஆட்சி முடியும் நிலையில் அடுத்த தேர்தல் வரும் போது இந்த அராஜகக்காரர்கள் இருக்கமாட்டர்கள் என்றார்.








