Breaking News

பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் 21ம் திகதி வரை, விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவி டப்பட்டுள்ளது. 

இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

கடந்த 2005.12.25 திகதி மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில், கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார். 

இந்த கொலை தொடர்பாக கடந்த 09.10.2005 அன்று கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட சந்திரகாந்தன் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.