Breaking News

இன்று இலங்கை வருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர்



கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியன், மூன்று நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு இன்று மாலை கொழும்பு வரவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது, கொழும்பில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும், தமிழ்த் தேசியக் மகூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அமைச்சர் மனோ கணேசனையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ள அவர், அங்கு வட மாகாண முதாலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும், மாகாண ஆளுனர் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், அரசியலமைப்பு திருத்தம், நல்லிணக்கம், மீள்குடியமர்வு ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிகாரிகளையும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்துப் பேசவுள்ளார்.

அத்துடன் கனடாவின் உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்படும், கண்ணிவெடி அகறற்றல் மற்றும் விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்களையும் அவர் நேரில் பார்வையிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஒருவர் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.