Breaking News

சர்­வ­தேச கண்­கா­ணிப்­புடன் விசேட மேல்நீதி­மன்றம்! - பர­ண­கம ஆணைக்­குழு



சர்­வ­தேச கண்­கா­ணிப்­பா­ளர்­களின் பங்­கேற்புடன் சிங்­கள, தமிழ்,முஸ்லிம் நீதி­ப­தி­க­ளைக் கொண்ட விசேட மேல் நீதி­மன்­றத்தை அமைத்து பாதிக்கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என்று அர­சாங்­கத்­துக்கு பரிந்­துரை செய்­துள்­ள­தாக காணாமல் போனோர் குறித்து விசா­ரித்த ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக் ஷ்வல் பர­ண­கம தெரி­வித்தார்.

அத்­துடன் இந்த விட­யத்தில் வெளி­நாட்டு தொழில்­நுட்ப உத­வி­களை பெற்­றுக்­கொள்­ள­வேண்டும். வடக்கு கிழக்கு மற்றும் தென் பகு­தி­க­ளி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற நீதி­ப­தி­களை பெற முடியும். சட்­டமா அதி­பரே வழக்­கு­களை நெறிப்­ப­டுத்­த­வேண்டும் என்றும் ஆணைக்­குழு தனது அறிக்­கையின் ஊடாக பரிந்­துரை செய்­துள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

மேலும் உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­குழு ஒன்றும் நிய­மிக்­கப்­ப­ட­வேண்டும். இத­னூ­டாக குற்றம் செய்­த­வர்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டால் அவர்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறும் மன்­னிப்பு வழங்க முடியும். மேலும் காணாமல் போனோரின் உற­வி­னர்­க­ளுக்கு 5 இலட்சம் ரூபா­வரை வாழ்­வா­தார கொடுப்­ப­ன­வு­களை வழங்­க­வேண்டும் என்றும் காணாமல் போனோர் குறித்த விசா­ரித்த பர­ண­மக ஆணைக்­குழு அர­சாங்­கத்­துக்கு பரிந்­துரை முன்­வைத்­துள்­ள­தாவும் அவர் குறிப்­பிட்டார்.

மெக்ஷ்வல் பர­ண­கம தலை­மை­யி­லான காணாமல் போனோர் குறித்து விசா­ரித்த ஆணைக்­கு­ழு­வா­னது அண்­மையில் தனது அறிக்­கையை அர­சாங்­கத்­துக்கு கைய­ளித்­தது. அந்த அறிக்­கை­யி­லேயே மேற்­கண்ட விட­யங்கள் பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளன.

இது தொடர்பில் காணாமல் போனோர் குறித்த விசா­ரித்த ஆணைக்­கு­ழுவின் தலைவர் மெக்ஷ்வல் பர­ண­கம மேலும் குறிப்­பி­டு­கையில்,

எமது ஆணைக்­கு­ழுவின் செயற்­பா­டு­களை முழு­மை­யாக நிறை­வேற்ற முடி­யாத நிலையில் அர­சாங்­கத்­திற்கு எமது அறிக்­கையை சமர்ப்­பித்­தி­ருக்­கின்றோம். அந்த வகையில் எமது அறிக்­கையில் பல்­வேறு பரிந்­து­ரை­களை முன்­வைத்­தி­ருக்­கின்றோம். அதா­வது மனித உரிமை மீறல்­குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் காணா­மல்­போனோர் தொடர்­பாக இரண்டு முறை­மை­களைப் பயன்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு நீதியை பெற்றுக் கொடுப்­ப­தற்கு நாங்கள் பரிந்­துரை செய்­தி­ருக்­கிறோம்.

அதா­வது முத­லா­வ­தாக விசடே மேல் நீதி­மன்றம் ஒன்று அமைத்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கலாம். இந்­த­நீ­தி­மன்­றத்­திற்கு வடக்கு கிழக்கு தெற்கு பகு­தி­க­ளி­லி­ருந்து சிங்­கள, தமிழ், முஸ்லிம் நீதி­ப­தி­களை நிய­மிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு உள்­ளிட்ட நாட்டில் ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள் அதி­க­ளவில் இருக்­கின்­றனர். எனவே அவர்­களைக் கொண்டு விசேட மேல் நீதி­மன்­றத்தை நிய­மிக்க முடியும்.

இந்த விசேட நீதி­மன்­றத்­திற்கு வெ ளிநாட்டு நீதி­ப­தி­களை எக்­கா­ரணம் கொண்டும் நிய­மிக்கக் கூடாது. ஆனால் வெ ளிநாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்­களை இந்த நீதி­மன்­றத்தின் செயற்­பா­டு­களை பார்­வை­யி­டு­வ­தற்கு அனு­ம­திக்­கலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே வெ ளிநாட்டு கண்­கா­ணிப்­பா­ளர்­க­ளுடன் மேல் நீதி­மன்­றத்தின் விசா­ரணை நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடியும்.

அது­மட்­டு­மன்றி இந்த நீதி­மன்ற செயற்­பாட்­டிற்கு சர்­வ­தேச தொழில்­நுட்ப உத­வி­க­ளையும் பெற்றுக் கொள்ள முடியும். அதில் எந்த தவறும் இல்லை. எனவே வெ ளிநாட்டு கண்­கா­ணிப்பு மற்றும் வெ ளிநாட்டு தொழில் நுட்ப உத­வி­க­ளுடன் விசேட மேல் நீதின்­றத்தை நிய­மிக்க முடியும். அது­மட்­டு­மன்றி நீதி வழங்கும் செயற்­பாட்டில் இரண்டு வழி­களில் முன்­னெ­டுக்க முடியும் என்­பதால் உண்­மையைக் கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வொன்றை நிய­மிக்­கலாம்.

அந்த உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வா­னது யுத்­த­கா­லத்தில் என்ன நடந்­தது என்ற உண்­மையை கண்­ட­றிய முடியும். இத­னூ­டாக குற்­றங்­களை செய்­த­வர்கள் தமது குற்­றங்­களை ஒப்­புக்­கொள்ளும் பட்­சத்தில் அவர்­க­ளுக்கு பொறுப்­புக்­கூறும் வகை­யி­லான மன்­னிப்பை வழங்க முடியும். இதற்­கான ஒரு வரை­ய­றையை அமைத்துக் கொள்­ளலாம்.

அத்துடன் காணாமல்போனோரின் உறவினர்கள் வாழ்வாதாரத்துக்கு உதவும் நோக்கில் 5 இலட்சம் ரூபாவரை உதவிகளை வழங்க வேண்டும். ஒவ்வொரு குடும்பங்களை பொறுத்தவரை இந்த தொகை வித்தியாசமாக அமையலாம். ஆனால் ஒரு இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்டும் 5 இலட்சம் ரூபாவுக்கும் உட்பட்டும் நியாயமான தொகையை இந்த மக்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு நாங்கள் எமது பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு முன்வைத்திருக்கின்றோம்.