மஹிந்த மஹா சங்கத்தினரையும் பிளவுபடுத்த முயற்சித்தார் – பிரதமர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மஹா சங்கத்தினரையும் பிளவுபடுத்த முயற்சித்ததாக பிரதமர் ரணில் குற்றம் சுமத்தியுள்ளார்.
மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்ய முயற்சிக்கவில்லை என, மஹிந்த ராஜபக்ஷ கூறினால், ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவி அது குறித்து விசாரணை நடத்த தயார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு மஹிந்த, மல்வத்து பீடத்தை இரண்டாக பிளவடையச் செய்தார் என்பது அம்பலமாகினால் அவர் குடியுரிமையை இழக்க நேரிடும் என பிரதமர் சுட்டிக்காட்டினார்.
இந்த வகையில் மஹா சங்கத்தினரை பிளவடையச் செய்வதனை தடுக்கும் சரத்துக்கள, புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.