Breaking News

கேள்விக்குள்ளாகும் அரசியல் நேர்மை -சத்திரியன்

"போரில் பங்­கேற்ற படை­யினர் மீது சட்ட
நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படக்கூடாது என்­பதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடாக உள்­ளது. அதனால் தான், போரில் ஈடு­பட்ட கடற்­படைத் தள­ப­தி­களை விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டதை நான் விரும்­ப­வில்லை என்று அவர் வெளிப்­ப­டை­யாக கூறி­ யி­ருக்­கிறார். இதி­லி­ருந்தே, படை­யி­னரை எந்த சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உட்­ப­டுத்தக் கூடாது என்­பதே அவ­ரது மனோ­நி­லை­யாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். "

பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் நடந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிகழ்த்­திய உரை, அவ­ரது அர­சியல் நேர்­மைக்குப் பலத்த சவா­லையும், சர்ச்­சை­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

முன்னாள் பாது­காப்புச் செயலார் கோத்­தா­பாய ராஜ­பக்ஷ மற்றும் முன்னாள் கடற்­படைத் தள­ப­திகள் மூவர் உள்­ளிபாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் நடந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிகழ்த்­திய உரை, அவ­ரது அர­சியல் நேர்­மைக்குப் பலத்த சவா­லையும், சர்ச்­சை­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

முன்னாள் பாது­காப்புச் செயலார் கோத்­தா­பாய ராஜ­பக்ஷ மற்றும் முன்னாள் கடற்­படைத் தள­ப­திகள் மூவர் உள்­ளிட்ட 8 பேர் மீது, அவன்ட் கார்ட் விவ­கா­ரத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டமை தொடர்­பாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்தக் கூட்­டத்தில் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு என்­பன, தன்­னிச்­சை­யாக அர­சியல் நோக்கில் செயற்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

நாட்­டுக்­காக சேவை­யாற்­றிய முன்னாள் கடற்­படைத் தள­ப­திகள் மீது வழக்குத் தொட­ரப்­பட்­டி­ருப்­ப­தாக விசனம் தெரி­வித்­தி­ருந்த ஜனா­தி­பதி, பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்தும் தனக்குத் தெரி­யாமல் இந்த வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­ட­தாக பகி­ரங்­க­மான குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இது­போன்று நடந்து கொண்­டது, கருத்தை வெளி­யிட்­டது இத தான் முதல் தடவை.

ஏற்­க­னவே, கடந்த ஆண்டில் அவர், முன்னாள் இரா­ணுவ மற்றும் கடற்­படைத் தள­ப­திகள் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்ட போது, அதனை பகி­ரங்­க­மா­கவே கண்­டித்­தி­ருந்தார்.

தமக்குத் தெரி­யாமல் படைத் தள­ப­திகள் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­தாக அவர் விச­னத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனால் இப்­போது அவர், முப்­ப­டை­களின் தள­பதி என்ற வகையில் தனக்குத் தெரி­யப்­ப­டுத்­தாமல், முன்னாள் படைத் தள­ப­திகள்,மற்றும் முன்னாள் பாது­காப்புச் செய­ல­ருக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ரப்­பட்­ட­தற்­காக மாத்­திரம் ஜனா­தி­பதி விச­னத்தை தெரி­விக்­க­வில்லை.

போரில் பங்­கேற்ற படை­யினர் மீது சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படக் கூடாது என்­பதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பா­டாக உள்­ளது.

அதனால் தான், போரில் ஈடு­பட்ட கடற்­படைத் தள­ப­தி­களை விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டதை நான் விரும்­ப­வில்லை என்று அவர் வெளிப்­ப­டை­யாக கூறி­யி­ருக்­கிறார். இதி­லி­ருந்தே, படை­யி­னரை எந்த சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உட்­ப­டுத்தக் கூடாது என்­பதே அவ­ரது மனோ­நி­லை­யாக இருக்­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடியும். படை­யி­னரைக் காட்டிக் கொடுக்­கி­றது அர­சாங்கம், புலம்­பெயர் தமி­ழர்­களின் தேவைக்கு ஏற்ப அவர்­களை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு இழுத்துச் சென்று தண்­டிக்க முற்­ப­டு­கி­றது அர­சாங்கம் என்று கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்­த­வர்கள் தொடர்ச்­சி­யாக குற்­றம்­சாட்டி வரு­கின்ற நிலையில் தான், ஜனா­தி­பதி தனது நிலைப்­பாட்டை இப்­போது உறு­தி­யாக வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­துள்ளார்.

படை­யி­னரை பல­வீ­னப்­ப­டுத்­தவும் மாட்டேன், பல­வீ­னப்­ப­டுத்­தவும் விட­மாட்டேன், அவர்­களைப் பாது­காப்­பதில் உறு­தி­யாக இருப்பேன் என்று அண்­மைய சில நாட்­க­ளாக அவர் கூறி­வ­ரு­வதைக் காண முடி­கி­றது.

கோத்­தா­பய ராஜ­பக்ஷ மற்றும் கடற்­படைத் தள­ப­தி­க­ளுக்கு எதி­ராகத் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு ஆதா­ர­பூர்­வ­மற்­ற­தாக இருந்­தி­ருக்கும் எனக் கருத முடி­யாது. சட்­ட­வ­லு­வற்ற ஒரு வழக்கை தாக்கல் செய்­வ­தற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­காது. அவ்­வா­றி­ருந்தும், ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் காட்­டு­கின்ற அதி­ருப்தி அர­சாங்­கத்­துக்குள் ஏற்­பட்­டுள்ள விரிசல் நிலை­யையும் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கி­றது.

சட்டம் ஒழுங்கு அமைச்சை கையில் வைத்­துள்ள ஐதேக, அர­சியல் பழி­வாங்­கலை செய்யும் நோக்கில் செயற்­ப­டு­வ­தாக ஜனா­தி­ப­தியின் குற்­றச்­சாட்டு அமைந்­தி­ருக்­கி­றது.

எவ்­வா­றா­யினும், அவன்ட் கார்ட் வழக்கில் குற்­றம்­சு­மத்­தப்­பட்­ட­வர்கள் எவரும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளில்லை. அனை­வரும், முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் பத­வியில் இருந்த அரச மற்றும் படை அதி­கா­ரிகள் தான்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன படை அதி­கா­ரி­களைப் பாது­காக்க வேண்டும் என்­பதில் காட்டும் உறு­தியை, சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­னது என்­பதை கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

பாது­காப்பு அமைச்சில் அவர் நிகழ்த்­திய உரையில், சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­னது என்­பதை ஜனா­தி­ப­தியே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். ஆனால் அவரே, போரில் பங்­கெ­டுத்த படை­யி­னரை நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு அழைப்­பதை தான் விரும்­ப­வில்லை என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

அவ்­வா­றாயின், சட்டம் எல்­லோ­ருக்கும் எவ்­வாறு சம­மா­ன­தாக இருக்க முடியும் என்ற கேள்வி எழு­கி­றது.

பிரகீத் எக்­னெ­லி­கொட காணா­மற்­போன வழக்கில், கைது செய்­யப்­பட்ட இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரிகள் தவறு செய்­தி­ருந்தால், பிணையில் விடு­வித்து விட்டு சட்ட நட­வ­டிக்­கையை எடுக்­கு­மாறும், இல்­லா­விடின் அவர்­களை விடு­விக்­கு­மாறும் தான் கேட்டுக் கொண்­ட­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால், தமிழ் அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்தில் இத்­த­கைய கோரிக்கை விடுக்­கப்­பட்ட போதும், அதனை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­னது என்று ஜனா­தி­பதி கரு­து­வது உண்­மை­யானால், தமிழ் அர­சியல் கைதி­க­ளையும், இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளையும் அவர் வெவ்­வேறு கண்­ணோட்­டங்­களில் பார்த்­தி­ருக்க மாட்டார்.

மகிந்த ராஜபக் ஷவும் கூட்டு எதி­ர­ணியும் கொடுக்­கின்ற அழுத்­தங்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் கடு­மை­யா­கவே பாதிக்கத் தொடங்­கி­யுள்­ளது.

அதனால் தான், கூட்டு எதி­ர­ணியின் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து தப்­பித்து ஓட அவர் எத்­த­னிக்­கிறார்.

படை­யி­ன­ருக்கு எதி­ராக தான் எதையும் செய்­யா­ம­லேயே- படை­யினர் மீது எடுக்­கப்­படும் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தன் மீது குற்­றச்­சாட்­டுகள் விழு­கின்­றன என்ற ஆதங்­கத்தை அவர் வெளி­யிட்­டி­ருப்­ப­தற்கு இதுவே காரணம்.

அதற்­கா­கவே அவர் தான் ஒரு­போதும் படை­யி­னரை விட்டுக் கொடுக்­க­மாட்டேன் என்று வலி­யு­றுத்த ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

படை­யி­னரை பகைத்துக் கொண்டு ஆட்­சியை நடத்த முடி­யாது என்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நன்­றா­கவே தெரியும்.

இரா­ணு­வத்­துக்குள், மகிந்த - கோத்­த­பாய சார்பு அணி ஒன்று இருப்­பது போலவே, சரத் பொன்­சேகா சார்பு அணி, ஐதேக சார்பு அணி என்­ப­னவும் இருக்­கின்­றன.

ஆனாலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சார்பு அணி என்று எதுவும் கிடை­யாது.

எனவே, படை­யினர் மத்­தியில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான உணர்­வுகள் மேலிட்டால், தம்மைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்கு அல்­லது அதனைச் சமா­ளித்துக் கொள்­வ­தற்கு இரா­ணு­வத்­துக்குள் யாரும் இருக்­க­மாட்­டார்கள் என்­பது அவ­ருக்குத் தெரியும்.

எனவே தான், படைத்­த­ரப்பைப் பகைத்துக் கொள்­ளாத வகையில் செயற்­பட முனை­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

இந்தக் கட்­டத்தில் தான், பொறுப்­புக்­கூறல் பொறி­முறை ஒன்றை அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னாலும், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி இட­ம­ளிப்­பாரா என்ற சந்­தே­கமும் கேள்­வியும் எழு­கி­றது.

போர்க்­கால மீறல்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில், குற்­ற­மி­ழைத்­த­வர்­களை தண்­டிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற உறு­தி­மொ­ழியை ஜனா­தி­பதி ஒரு­போதும் கொடுக்­க­வில்லை.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூட, பொறுப்­புக்­கூறும் பொறி­முறை தண்­டிப்­பதை நோக்­க­மா­ன­தாக கொண்­டி­ராது என்றும், உண்­மையை வெளிக்­கொண்டு வரு­வ­தையே நோக்­க­மாக கொண்­டி­ருக்கும் என்று தான் கூறி­யி­ருந்தார்.

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மட்டும் தான், குற்­ற­மி­ழைத்­த­வர்கள் பொறுப்­புக்­கூறச் செய்­யப்­ப­டு­வார்கள் என்­பதை கூறி வந்­தி­ருக்­கிறார்.

பொறுப்­புக்­கூறல் பொறி­முறை பற்­றிய நம்­பிக்­கைகள் தேய்ந்து போகத் தொடங்­கி­யுள்ள இப்­போ­தைய நிலையில், படையினரை விட்டுக் கொடுக்க மாட்டேன், அவர்களைப் பாதுகாப்பேன் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதமும், உறுதிமொழியும், பொறுப்புக்கூறலை எதிர்பார்த்திருக்கும் தரப்பினரை நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது.

குறிப்பாக, ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களை பெருத்த ஏமாற்றங்களுக்கு உள்ளாக்கும்.

படையினரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற வாக்குறுதியின் ஊடாக, குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முனைந்தால் அது ஆபத்தானது. குற்றமிழைக்காத படையினரை சட்டத்தின் முன் நிறுத்த யாரும் இப்போது முனைந்ததாகத் தெரியவில்லை.

அவ்வாறான நிலையில், குற்றமிழைத்த படையினரை, அவர்கள் போரில் பங்கெடுத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பாதுகாக்க முற்பட்டால், அது தவறான முன்னுதாரணமாகி விடும்.

அது ஜனாதிபதிக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். அத்தகையதொரு கட்டத்தை நோக்கியதாகவே ஜனாதிபதியினது இப்போதைய நகர்வுகள் அமைந்திருக்கின்றன.ட்ட 8 பேர் மீது, அவன்ட் கார்ட் விவ­கா­ரத்தில் வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டமை தொடர்­பாக, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இந்தக் கூட்­டத்தில் கடு­மை­யான விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார்.

குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, நிதிக்­குற்றப் புல­னாய்வுப் பிரிவு, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு என்­பன, தன்­னிச்­சை­யாக அர­சியல் நோக்கில் செயற்­ப­டு­வ­தாக குற்­றம்­சாட்­டி­யி­ருந்தார்.

நாட்­டுக்­காக சேவை­யாற்­றிய முன்னாள் கடற்­படைத் தள­ப­திகள் மீது வழக்குத் தொட­ரப்­பட்­டி­ருப்­ப­தாக விசனம் தெரி­வித்­தி­ருந்த ஜனா­தி­பதி, பாது­காப்பு அமைச்­ச­ராக இருந்தும் தனக்குத் தெரி­யாமல் இந்த வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­ட­தாக பகி­ரங்­க­மான குற்­றச்­சாட்டை முன்­வைத்­தி­ருந்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இது­போன்று நடந்து கொண்­டது, கருத்தை வெளி­யிட்­டது இத தான் முதல் தடவை.

ஏற்­க­னவே, கடந்த ஆண்டில் அவர், முன்னாள் இரா­ணுவ மற்றும் கடற்­படைத் தள­ப­திகள் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்ட போது, அதனை பகி­ரங்­க­மா­கவே கண்­டித்­தி­ருந்தார்.

தமக்குத் தெரி­யாமல் படைத் தள­ப­திகள் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்­ட­தாக அவர் விச­னத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

ஆனால் இப்­போது அவர், முப்­ப­டை­களின் தள­பதி என்ற வகையில் தனக்குத் தெரி­யப்­ப­டுத்­தாமல், முன்னாள் படைத் தள­ப­திகள்,மற்றும் முன்னாள் பாது­காப்புச் செய­ல­ருக்கு எதி­ராக நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ரப்­பட்­ட­தற்­காக மாத்­திரம் ஜனா­தி­பதி விச­னத்தை தெரி­விக்­க­வில்லை.

போரில் பங்­கேற்ற படை­யினர் மீது சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படக் கூடாது என்­பதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பா­டாக உள்­ளது.

அதனால் தான், போரில் ஈடு­பட்ட கடற்­படைத் தள­ப­தி­களை விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டதை நான் விரும்­ப­வில்லை என்று அவர் வெளிப்­ப­டை­யாக கூறி­யி­ருக்­கிறார். இதி­லி­ருந்தே, படை­யி­னரை எந்த சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உட்­ப­டுத்தக் கூடாது என்­பதே அவ­ரது மனோ­நி­லை­யாக இருக்­கி­றது என்­பதை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடியும். படை­யி­னரைக் காட்டிக் கொடுக்­கி­றது அர­சாங்கம், புலம்­பெயர் தமி­ழர்­களின் தேவைக்கு ஏற்ப அவர்­களை சர்­வ­தேச நீதி­மன்­றத்­துக்கு இழுத்துச் சென்று தண்­டிக்க முற்­ப­டு­கி­றது அர­சாங்கம் என்று கூட்டு எதி­ர­ணியைச் சேர்ந்­த­வர்கள் தொடர்ச்­சி­யாக குற்­றம்­சாட்டி வரு­கின்ற நிலையில் தான், ஜனா­தி­பதி தனது நிலைப்­பாட்டை இப்­போது உறு­தி­யாக வெளிப்­ப­டுத்த ஆரம்­பித்­துள்ளார்.

படை­யி­னரை பல­வீ­னப்­ப­டுத்­தவும் மாட்டேன், பல­வீ­னப்­ப­டுத்­தவும் விட­மாட்டேன், அவர்­களைப் பாது­காப்­பதில் உறு­தி­யாக இருப்பேன் என்று அண்­மைய சில நாட்­க­ளாக அவர் கூறி­வ­ரு­வதைக் காண முடி­கி­றது.

கோத்­தா­பய ராஜ­பக்ஷ மற்றும் கடற்­படைத் தள­ப­தி­க­ளுக்கு எதி­ராகத் தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு ஆதா­ர­பூர்­வ­மற்­ற­தாக இருந்­தி­ருக்கும் எனக் கருத முடி­யாது. சட்­ட­வ­லு­வற்ற ஒரு வழக்கை தாக்கல் செய்­வ­தற்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்­குழு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­காது. அவ்­வா­றி­ருந்தும், ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் காட்­டு­கின்ற அதி­ருப்தி அர­சாங்­கத்­துக்குள் ஏற்­பட்­டுள்ள விரிசல் நிலை­யையும் எடுத்துக் காட்­டி­யி­ருக்­கி­றது.

சட்டம் ஒழுங்கு அமைச்சை கையில் வைத்­துள்ள ஐதேக, அர­சியல் பழி­வாங்­கலை செய்யும் நோக்கில் செயற்­ப­டு­வ­தாக ஜனா­தி­ப­தியின் குற்­றச்­சாட்டு அமைந்­தி­ருக்­கி­றது.

எவ்­வா­றா­யினும், அவன்ட் கார்ட் வழக்கில் குற்­றம்­சு­மத்­தப்­பட்­ட­வர்கள் எவரும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்­த­வர்­க­ளில்லை. அனை­வரும், முன்­னைய அர­சாங்­கத்தின் காலத்தில் பத­வியில் இருந்த அரச மற்றும் படை அதி­கா­ரிகள் தான்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன படை அதி­கா­ரி­களைப் பாது­காக்க வேண்டும் என்­பதில் காட்டும் உறு­தியை, சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­னது என்­பதை கவ­னத்தில் கொள்­ள­வில்லை.

பாது­காப்பு அமைச்சில் அவர் நிகழ்த்­திய உரையில், சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­னது என்­பதை ஜனா­தி­ப­தியே சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். ஆனால் அவரே, போரில் பங்­கெ­டுத்த படை­யி­னரை நீதி­மன்­றத்தில் விசா­ர­ணைக்கு அழைப்­பதை தான் விரும்­ப­வில்லை என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

அவ்­வா­றாயின், சட்டம் எல்­லோ­ருக்கும் எவ்­வாறு சம­மா­ன­தாக இருக்க முடியும் என்ற கேள்வி எழு­கி­றது.

பிரகீத் எக்­னெ­லி­கொட காணா­மற்­போன வழக்கில், கைது செய்­யப்­பட்ட இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரிகள் தவறு செய்­தி­ருந்தால், பிணையில் விடு­வித்து விட்டு சட்ட நட­வ­டிக்­கையை எடுக்­கு­மாறும், இல்­லா­விடின் அவர்­களை விடு­விக்­கு­மாறும் தான் கேட்டுக் கொண்­ட­தாக ஜனா­தி­பதி கூறி­யி­ருக்­கிறார்.

ஆனால், தமிழ் அர­சியல் கைதிகள் விவ­கா­ரத்தில் இத்­த­கைய கோரிக்கை விடுக்­கப்­பட்ட போதும், அதனை ஜனா­தி­பதி ஏற்­றுக்­கொள்­ள­வில்லை.

சட்டம் அனை­வ­ருக்கும் பொது­வா­னது என்று ஜனா­தி­பதி கரு­து­வது உண்­மை­யானால், தமிழ் அர­சியல் கைதி­க­ளையும், இரா­ணுவப் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளையும் அவர் வெவ்­வேறு கண்­ணோட்­டங்­களில் பார்த்­தி­ருக்க மாட்டார்.

மகிந்த ராஜபக் ஷவும் கூட்டு எதி­ர­ணியும் கொடுக்­கின்ற அழுத்­தங்கள், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் கடு­மை­யா­கவே பாதிக்கத் தொடங்­கி­யுள்­ளது.

அதனால் தான், கூட்டு எதி­ர­ணியின் குற்­றச்­சாட்­டு­களில் இருந்து தப்­பித்து ஓட அவர் எத்­த­னிக்­கிறார்.

படை­யி­ன­ருக்கு எதி­ராக தான் எதையும் செய்­யா­ம­லேயே- படை­யினர் மீது எடுக்­கப்­படும் சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக தன் மீது குற்­றச்­சாட்­டுகள் விழு­கின்­றன என்ற ஆதங்­கத்தை அவர் வெளி­யிட்­டி­ருப்­ப­தற்கு இதுவே காரணம்.

அதற்­கா­கவே அவர் தான் ஒரு­போதும் படை­யி­னரை விட்டுக் கொடுக்­க­மாட்டேன் என்று வலி­யு­றுத்த ஆரம்­பித்­தி­ருக்­கிறார்.

படை­யி­னரை பகைத்துக் கொண்டு ஆட்­சியை நடத்த முடி­யாது என்­பது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு நன்­றா­கவே தெரியும்.

இரா­ணு­வத்­துக்குள், மகிந்த - கோத்­த­பாய சார்பு அணி ஒன்று இருப்­பது போலவே, சரத் பொன்­சேகா சார்பு அணி, ஐதேக சார்பு அணி என்­ப­னவும் இருக்­கின்­றன.

ஆனாலும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சார்பு அணி என்று எதுவும் கிடை­யாது.

எனவே, படை­யினர் மத்­தியில் அர­சாங்­கத்­துக்கு எதி­ரான உணர்­வுகள் மேலிட்டால், தம்மைக் காப்­பாற்றிக் கொள்­வ­தற்கு அல்­லது அதனைச் சமா­ளித்துக் கொள்­வ­தற்கு இரா­ணு­வத்­துக்குள் யாரும் இருக்­க­மாட்­டார்கள் என்­பது அவ­ருக்குத் தெரியும்.

எனவே தான், படைத்­த­ரப்பைப் பகைத்துக் கொள்­ளாத வகையில் செயற்­பட முனை­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.

இந்தக் கட்­டத்தில் தான், பொறுப்­புக்­கூறல் பொறி­முறை ஒன்றை அர­சாங்கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­னாலும், அதனை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி இட­ம­ளிப்­பாரா என்ற சந்­தே­கமும் கேள்­வியும் எழு­கி­றது.

போர்க்­கால மீறல்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூறும் விட­யத்தில், குற்­ற­மி­ழைத்­த­வர்­களை தண்­டிக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்ற உறு­தி­மொ­ழியை ஜனா­தி­பதி ஒரு­போதும் கொடுக்­க­வில்லை.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூட, பொறுப்­புக்­கூறும் பொறி­முறை தண்­டிப்­பதை நோக்­க­மா­ன­தாக கொண்­டி­ராது என்றும், உண்­மையை வெளிக்­கொண்டு வரு­வ­தையே நோக்­க­மாக கொண்­டி­ருக்கும் என்று தான் கூறி­யி­ருந்தார்.

வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மட்டும் தான், குற்­ற­மி­ழைத்­த­வர்கள் பொறுப்­புக்­கூறச் செய்­யப்­ப­டு­வார்கள் என்­பதை கூறி வந்­தி­ருக்­கிறார்.

பொறுப்­புக்­கூறல் பொறி­முறை பற்­றிய நம்­பிக்­கைகள் தேய்ந்து போகத் தொடங்­கி­யுள்ள இப்­போ­தைய நிலையில், படையினரை விட்டுக் கொடுக்க மாட்டேன், அவர்களைப் பாதுகாப்பேன் என்ற ஜனாதிபதியின் உத்தரவாதமும், உறுதிமொழியும், பொறுப்புக்கூறலை எதிர்பார்த்திருக்கும் தரப்பினரை நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது.

குறிப்பாக, ஜனாதிபதியின் இந்த நிலைப்பாடு தமிழ் மக்களை பெருத்த ஏமாற்றங்களுக்கு உள்ளாக்கும்.

படையினரைக் காட்டிக்கொடுக்க மாட்டேன் என்ற வாக்குறுதியின் ஊடாக, குற்றமிழைத்தவர்களைப் பாதுகாக்க முனைந்தால் அது ஆபத்தானது. குற்றமிழைக்காத படையினரை சட்டத்தின் முன் நிறுத்த யாரும் இப்போது முனைந்ததாகத் தெரியவில்லை.

அவ்வாறான நிலையில், குற்றமிழைத்த படையினரை, அவர்கள் போரில் பங்கெடுத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பாதுகாக்க முற்பட்டால், அது தவறான முன்னுதாரணமாகி விடும்.

அது ஜனாதிபதிக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். அத்தகையதொரு கட்டத்தை நோக்கியதாகவே ஜனாதிபதியினது இப்போதைய நகர்வுகள் அமைந்திருக்கின்றன.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்