Breaking News

கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படுகொலை! ஐரோப்பிய பாராளுமன்றம் முன்பாக போராட்டம்!

எம் இனத்தின் மீது தொடர்ச்சியாக கட்டவிழ்த்துப்பட்டிருக்கும் இனப்படு கொலையிலிருந்து எம்மக்களைப் பாதுகாப்பதற்கு பல்வேறுபட்ட அரசியல் போராட்டங்களை நாம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். 

இந்த வகையில் எமது மக்கள் மீது தொடர்ச்சியாக நடாத்தப்படும் படுகொலை தொடர்பாக தீர ஆராய்ந்து அனைத்துலக நீதி மன்றில் விசாரணை நடாத்தி எம் மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுக்க அனைத்துலக சமூகம் உதவ வேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கைகளை முன்வைத்து மீண்டும் ஸ்ராஸ்பூர்க் ஐரோப்பிய பாராளுமன்றம் Allée du Printemps, 67000 Strasbourg

முன்பாக 26.10.2016 புதன் கிழமை பிற்பகல் 15.45 மணித்தொடக்கம் 17.00 மணிவரை கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கின்றோம்.