Breaking News

யாழ் கொலை சம்பவம்! பொலிஸ் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்



யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை கொலை செய்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்ற நீதிபதி சதீஸ்கரன் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும், குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்களை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்குமாறும் கூறினார்.

எனினும் இவர்களை எதிர்வரும் திங்கட் கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி அறிவித்துள்ளார்.