இலங்கை முஸ்லிம்கள் தொடர்பில் அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும் – றீட்டா
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயா தெரிவித்துள்ளார்.
மேலும் அதற்கான பொருத்தமானதும் விசேடமானதுமான பொறிமுறை ஒன்றை உருவாக்க முன்வர வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு 10 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த அவர் தனது விஜயத்தின் இறுதியில் இன்று கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடாத்தினார். இதன்போது ”இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான உங்களது பிரதான கண்டறிதல்கள் என்ன?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்