Breaking News

இலங்­கை முஸ்லிம்கள் தொடர்பில் அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும் – றீட்டா



முஸ்­லிம்­ சமூகத்தின் பிரச்­சி­னைகள் தொடர்பில் இலங்­கை அர­சாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட சிறு­பான்மை விவ­கா­ரங்கள் தொடர்பான ஐக்­கிய நாடுகள் சபையின் விசேட அறிக்­கை­­யாளர் ரீட்டா ஐசாக் நதேயா தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்­கான பொருத்­த­மா­னதும் விசே­ட­மா­ன­து­மான பொறி­முறை ஒன்றை உரு­வாக்க முன்­வர வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலங்­கைக்கு 10 நாட்கள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த அவர் தனது விஜ­யத்தின் இறு­தியில் இன்று கொழும்­பி­லுள்ள ஐக்­கிய நாடுகள் அலு­வ­ல­கத்தில் ஊட­க­வி­ய­லாளர் சந்திப்பு ஒன்றை நடாத்­தினார். இதன்­போது ”இலங்கை முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் தொடர்­பான உங்­க­ளது பிர­தான கண்­ட­றி­தல்கள் என்ன?” என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்­பிய கேள்­விக்கு பதில­ளிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்