Breaking News

யாழ் ஆனைக்கோட்டையில் 3இளைஞர்கள் தாக்கப்பட்டனர்(படங்கள்)


இன்று மாலை ஆனைக்கோட்டைப்பகுதியில்
இனந்தெரியாதவர்களினால்  3 இளைஞர்களை இரும்புக்கம்பியால் தாக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்காகிய மூன்று இளைஞர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தமிழ் கிங்டொத்திற்கு  கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ். ஆணைக்கோட்டைச் சந்தியில் இரவு 8 மணியளவில் வெள்ளை ஹயஸ் வானில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்களை துரத்திக் கொண்டு சென்று இளைஞர்கள் மீதே இலக்கதகடு அற்ற வாகனத்தில் வந்த சிலர் சிங்களத்தில் ஏதேதோ பேசியபடி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் ஆணைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சங்கரராஜா சந்திரசேகரன் மற்றும் காக்கைதீவு பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் செல்வம் உட்பட அமரசிங்கம் ஞானவேல் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு துரத்திக்கொண்டு சென்ற போது, 3 இளைஞர்களை மடக்கிப் பிடித்து அவர்களை முழந்தாலிட்டு இருக்க வைத்துவிட்டு, அவர்களின் மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியின் மீது இரும்புக் கம்பியால் குற்றி உடைக்க முற்பட்டதுடன், அதே இரும்புக் கம்பியாலும், பொல்லுகளினாலும் தாக்கியுள்ளனர்.





முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்