Breaking News

இலங்கையின் தாய் மொழி ’தூசணம்’என்கிறார்: மட்டு.விகாராதிபதி



’தூசணம்’ என்பது இலங்கையின் (மௌவ் பாஷாவ) தாய் மொழி அதை சரியாக தெரியாதவர்கள் பலவாறு பேசுகின்றார்கள் என மட்டக்களப்பு மங்களா ராம விகாரையின் விகாராதிபதி சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மட்டக்களப்பு மங்களா ராம விகாரையின் பௌத்த மத குரு தமிழ் கிராம சேவகர் ஒருவரை அவதூறு வார்த்தையால் திட்டியிருந்தார்.

இது தொடர்பில் அவரிடம் தமிழ் ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இவ்வாறான வார்த்தைகளை சரியாக தெரியாதவர்கள் அது ‘தூசணம்’ என்கின்றனர். ஆனால் இது ஒன்றும் பெரிய வசனம் இல்லை எனவும் இது தொடர்பில் பெரிதாக பேசப்பட தேவையில்லை அவர் குறிப்பிட்டார்.
- வெளிச்சவீடு