Breaking News

ட்ரம்பின் வெற்றி யாருக்கு சாதகம்? -என்.கண்ணன்

அமெ­ரிக்­காவில் கடந்­த­வாரம் நடந்த ஜனா­தி­பதித்
தேர்­தலின் முடிவு உலகம் முழு­வ­தற்கும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

ஹிலாரி கிளின்­டனே வெற்றி பெறுவார் என்று ஆரம்­பத்தில் இருந்து எதிர்­பார்க்­கப்­பட்டு வந்த நம்­பிக்­கை­யையும், கடைசி வரையில் அதையே கூறிக் கொண்­டி­ருந்த பெரும்­பா­லான ஊட­கங்­க­ளி­னது கருத்­துக்­க­ணிப்­பு­க­ளையும் அடித்து நொருக்கிக் கொண்டு வெற்­றியைப் பெற்­றி­ருக்­கிறார் டொனால்ட் ட்ரம்ப்.

தேர்தல் பிர­சா­ரங்­களின் போது, பல­ச­ம­யங்­களில் கோமா­ளித்­த­ன­மான பிர­சா­ரங்­களை மேற்­கொண்டு பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யவர் அவர். ஆனாலும், அவ­ரது தீவி­ர­மான கருத்­துகள்- பெரும்­பான்­மை­யான வெள்­ளை­யின அமெ­ரிக்­கர்­க­ளிடம் எடு­பட்­டி­ருக்­கி­றது.

தொடர்ச்­சி­யாக இரண்டு தட­வைகள் ஜன­நா­யகத் கட்­சி­யிடம் நாட்டின் ஆட்­சியை ஒப்­ப­டைத்­தி­ருந்த அமெ­ரிக்­கர்கள் மீண்டும் தமது கவ­னத்தை குடி­ய­ரசுக் கட்­சியின் பக்கம் திருப்பி விட்­டி­ருக்­கி­றார்கள்.

டொனால்ட் ட்ரம்பின் பிர­சார அணு­கு­மு­றை­களும் அவ­ரது கொள்­கை­களும், அமெ­ரிக்­கா­வுடன் கூட்டு வைத்­தி­ருக்கும் நாடு­க­ளுக்கு அவ்­வ­ளவு ஏற்­பு­டை­ய­தாக இருக்­க­வில்லை. அதனால் உலக நாடுகள் ஹிலா­ரியின் வெற்­றி­யையே பெரும்­பாலும் எதிர்­பார்த்­தி­ருந்­தன.

ஹிலா­ரியின் தோல்­வியும், ட்ரம்பின் வெற்­றியும், உலகம் முழு­வ­தையும் அதிர்ச்­சி­யோடு தான் பார்க்க வைத்­தி­ருக்­கி­றது. இலங்­கைக்கும் இது விதி­வி­லக்­கான விடயம் அல்ல.

அதிலும் தமிழர் தரப்­புக்கு அமெ­ரிக்­காவில் ஏற்­பட்­டி­ருக்கும் ஆட்சி மாற்றம் அதிர்ச்­சியைக் கொடுத்­தி­ருக்­கி­றது என்­பது உண்மை.

அமெ­ரிக்­காவில் ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்றம், 2009ஆம் ஆண்டு தொடக்கம் பத­வியில் இருக்கும் ஒபாமா அர­சாங்கம், கடந்த எட்டு ஆண்­டு­க­ளாக- கடைப்­பி­டித்து வரும் இலங்கை தொடர்­பான கொள்­கை­களில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்ற பர­வ­லான நம்­பிக்கை காணப்­ப­டு­கி­றது.

குறிப்­பாக, தமிழர் விவ­கா­ரங்­களில் இந்த ஆட்­சி­மாற்­றத்தின் தாக்­கத்தை வலு­வாக உண­ரக்­கூ­டிய நிலை இருக்கும் என்றே கரு­தப்­ப­டு­கி­றது.

கடந்த மூன்று தசாப்­தங்­களில் அமெ­ரிக்­காவில் குடி­ய­ரசுக் கட்சி ஆட்­சியில் இருந்த கால­கட்­டங்­களில் இலங்கை அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மான உற­வுகள் இருந்து வந்­தது வர­லாறு.

டொனால்ட் றீகன் ஆட்­சியில் இருந்த போது, ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன அர­சாங்­கத்­துடன் நெருக்­க­மான உற­வு­களை வைத்­தி­ருந்தார். இலங்­கையில் அமெ­ரிக்கா தளம் அமைக்கப் போகி­றது என்று கருதும் அள­வுக்கு அந்த உற­வுகள் வலு­வாகக் காணப்­பட்­டன.

அதற்குப் பின்னர், குடி­ய­ரசுக் கட்­சியின் சார்பில் ஜோர்ஸ் டபிள்யூ புஷ் பத­வியில் இருந்த காலத்­திலும், பின்னர் அவ­ரது மகன் ஜோர்ஜ் புஷ் ஜுனியர் பத­வியில் இருந்த காலத்­திலும் இலங்கை அர­சாங்­கங்­க­ளுடன் நெருக்­க­மான உற­வுகள் இருந்­தன.

ஜோர்ஜ் புஷ் ஜுனி­யரின் பத­விக்­கா­லத்தில் இலங்­கையில் ஆட்சி அமைத்­தி­ருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்­கத்­துடன் மிக நெருக்­க­மான செயற்­பட்­டி­ருந்­தது அமெ­ரிக்கா. அந்தக் கால­கட்­டத்தில் தான், விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச வலைப்­பின்னல் உரு­வாக்­கப்­பட்­டது.

மகிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டிப்­ப­தற்கு உத­விய பல்­வேறு கார­ணி­க­ளுக்குப் பிள்­ளையார் சுழி போடப்­பட்டு, அடித்­தளம் இடப்­பட்­டது ஜோர்ஜ் புஷ் ஜுனி­யரின் ஆட்­சிக்­கா­லத்தில் தான்.

எனவே தான், டொனால்ட் ட்ரம்­புக்கு அனுப்­பி­யுள்ள வாழ்த்துச் செய்­தியில்- குடி­ய­ரசுக் கட்­சியின் ஆட்­சிக்­கா­லத்தில் அமெ­ரிக்கா வழங்­கிய இரா­ஜ­தந்­திர மற்றும் புல­னாய்வு உத­விகள், தனது அர­சாங்கம் புலி­களைத் தோற்­க­டிக்க உத­வி­யது என்­பதை நினை­வு­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் மகிந்த ராஜ­பக்ச.

இதனால், மீண்டும் குடி­ய­ரசுக் கட்சி ஆட்­சிக்கு வர­வுள்­ளதும், ஜே.ஆர்.ஜய­வர்த்­தன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க போன்ற ஐதேக ஆட்­சிக்­கா­லங்­களில் குடி­ய­ரசுக் கட்­சியின் ஜனா­தி­ப­திகள் இலங்­கை­யுடன் பேணி­வந்த நெருக்­க­மான உற­வு­க­ளையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, புதிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் இலங்­கை­யுடன் நெருக்­க­மான உற­வு­களை ஏற்­ப­டுத்தும் வாய்ப்­புகள் அதிகம் உள்­ளன.

கடந்த ஆண்டு நடந்த ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர் இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான உற­வு­களில் பாரிய முன்­னேற்­றங்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. ஜன­நா­யக கட்­சியின் ஆட்­சிக்­கா­லத்­தி­லேயே அமெ­ரிக்க – இலங்கை உற­வுகள் உச்­சக்­கட்­டத்தை எட்­டி­யி­ருக்­கின்ற சூழலில் தான் குடி­ய­ரசுக் கட்சி அதி­கா­ரத்தைப் பிடித்­தி­ருக்­கி­றது.

குடி­ய­ரசுக் கட்சி ஒரு­போதும் இந்­தியப் பெருங்­க­டலின் முக்­கி­யத்­து­வத்­தையோ, இலங்­கையின் கேந்­திர அமை­வி­டத்­தையோ குறைத்து மதிப்­பி­டு­வ­தில்லை. அதனால் தான், குடி­ய­ரசுக் கட்சி அதி­கா­ரத்தில் இருந்த போதெல்லாம் இலங்­கை­யுடன் நெருக்­க­மான உற­வுகள் கடைப்­பி­டிக்­கப்­பட்டு வந்­தன.

இலங்­கையில் போர் இறு­திக்­கட்­டத்தை எட்­டி­யி­ருந்த போது தான், ஜன­நா­யக கட்­சியைச் சேர்ந்த ஒபாமா ஆட்­சிக்கு வந்தார். அவ­ரது அர­சாங்கம் இலங்­கை­யுடன், குறிப்­பாக மகிந்த ராஜ­பக்ச ஆட்­சிக்­கா­லத்தில் கடைப்­பி­டித்த கொள்கை- சற்று இறுக்­க­மா­ன­தா­கவே இருந்­தது.

குறிப்­பாக போருக்குப் பின்னர், இலங்­கைக்கும் சீனா­வுக்கும் இடையில் ஏற்­பட்ட நெருக்­கத்தை இலக்கு வைத்து, ஒபாமா நிர்­வாகம், மனித உரி­மைகள் விவ­கா­ரத்­துக்கு முக்­கி­யத்­துவம் கொடுக்க ஆரம்­பித்­தது.

பொறுப்­புக்­கூறல், நல்­லி­ணக்கம், நிலை­யான அமைதி ஆகிய விட­யங்­களை முன்­னி­றுத்தி இலங்கை விவ­கா­ரத்தில் அமெ­ரிக்கா செய்த தலை­யீட்டை, மகிந்த ராஜ­பக்ச அர­சாங்கம் விரும்­ப­வில்லை. இதன்­கா­ர­ண­மாக அமெ­ரிக்க – இலங்கை உற­வுகள் சீர்­கு­லைந்து போயின.

மகிந்த ராஜ­பக்ச பத­வியில் இருந்து வெளி­யே­றிய போது இரண்டு நாடு­க­ளுக்கும் .இடை­யி­லான உற­வுகள் மிக மோச­மான நிலை­யி­லேயே இருந்­தன.

சீனா­வுடன் நெருங்­கி­யி­ருந்த மகிந்த அர­சாங்­கத்தை தனது வழிக்குத் திருப்­பு­வ­தற்­காக, ஜெனி­வாவில் மனித உரி­மைகள், பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரங்­களை முன்­னி­லைப்­ப­டுத்தி அமெ­ரிக்கா தீர்­மா­னங்­களைக் கொண்டு வந்து தலை­வலி கொடுத்­தது.

கடந்த ஆண்டு இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்­திலும் கூட அமெ­ரிக்­காவின் பங்­க­ளிப்­பு­களை குறைத்து மதிப்­பிட்டு விட முடி­யாது.

ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், தற்­போ­தைய அர­சாங்கம், ஒபாமா நிர்­வா­கத்­துடன் முழு­மை­யாக ஒத்­து­ழைக்க இணங்­கிய பின்னர், ஜெனிவா அழுத்­தங்கள் குறையத் தொடங்­கி­யுள்­ளன.

இப்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பகி­ரங்­க­மாக ஐ.நாவில் போய் எமக்கு எதி­ரி­களே இல்லை, யாரும் அழுத்­தங்கள் கொடுக்­க­வில்லை என்று கூறும் அள­வுக்கு நிலை­மைகள் தலை­கீ­ழாக மாறி­யுள்­ளன.

என்­றாலும், பொறுப்­புக்­கூறல், மனித உரி­மைகள் விட­யங்கள் சார்ந்து- அமெ­ரிக்கா முழு­மை­யான அள­வுக்கு இல்­லா­வி­டினும், பெய­ர­ள­வுக்­கேனும் இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களைக் கொடுத்து வந்­தி­ருக்­கி­றது.

ஹிலாரி கிளின்டன் ஆட்­சிக்கு வந்தால், போர்க்­குற்­றங்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூறல், மனித உரி­மைகள் விவ­கா­ரங்கள் போன்­ற­வற்றில் கூடுதல் ஈடு­பாடு காட்­டுவார் என்ற நம்­பிக்கை தமிழர் தரப்­பிடம் காணப்­பட்­டது.

ஏனென்றால், அவர் இரா­ஜாங்கச் செய­ல­ராகப் பத­வியில் இருந்த கால­கட்­டத்தில் தான், பொறுப்­புக்­கூ­றலை வலி­யு­றுத்தும் முத­லா­வது தீர்­மானம் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்­டது.

ஒபா­மாவின் முதல் ஆட்­சிக்­கா­லத்தில் அதி­கா­ரத்தில் இருந்த ஹிலாரி கிளின்டன், சமந்தா பவர், சூசன் ரைஸ் ஆகிய மூன்று பெண்கள், இலங்­கைக்கு எதி­ரான அமெ­ரிக்­காவின் தீர்­மா­னங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக இருந்­தனர்.

அந்த வகையில் ஹிலாரி அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வானால், பொறுப்­புக்­கூறல் விவ­கா­ரத்தில் இலங்­கைக்கு அழுத்­தங்­களைக் கொடுப்பார் என்ற நம்­பிக்கை தமி­ழர்­த­ரப்பில் சில­ரிடம் இருந்­தது.

நல்­லூரில் சில தமிழ் அர­சி­யல்­வா­திகள் தேங்காய் உடைத்­த­தற்கு அந்த நம்­பிக்­கையே காரணம்.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக ஹிலாரி பத­விக்கு வந்­தாலும் கூட, இலங்கை தொடர்­பான கடு­மை­யான போக்கை அமெ­ரிக்கா மீண்டும் கடைப்­பி­டிப்­ப­தற்­கான வாய்ப்­புகள் அரி­தா­கவே இருந்­தன.

ஆனால், அவர் தோல்­வி­ய­டைந்து, எப்­போதும் இலங்கை அர­சுடன் நெருக்­க­மான உறவைப் பேணி வந்­துள்ள குடி­ய­ரசுக் கட்­சியின் டொனால்ட் ட்ரம்ப் புதிய ஜனா­தி­ப­தி­யாகத் தெரி­வா­கி­யி­ருப்­பது, பொறுப்­புக்­கூறல் பற்­றிய அழுத்­தங்­களில் இருந்து இலங்கை முற்­றாக விடு­ப­டு­வ­தற்­கான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தலாம்.

கடந்த பல ஆண்­டு­க­ளா­கவே இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஜெனிவா ஒரு சோத­னைக்­க­ள­மா­கவே இருந்து வந்­தி­ருக்­கி­றது.

கடந்த ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தின் முன்­னேற்­றங்கள் தொடர்­பான அறிக்கை அடுத்த ஆண்டு ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆனாலும் ஜெனி­வாவில் கடந்த ஆண்டு கொடுத்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­றாத நிலையே தொடர்­கி­றது.

இத்­த­கைய நிலையில், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையில் இலங்­கைக்கு அடுத்த ஆண்டு முழு அளவில் இல்­லா­வி­டினும், கணி­ச­மான நெருக்­க­டிகள் இருக்கும் என்றே கரு­தப்­பட்­டது.

அதுவும் மீண்டும் மூன்று ஆண்­டு­க­ளுக்கு ஐ.நா மனித உரி­மைகள் பேர­வையின் உறுப்பு நாடாக அமெ­ரிக்கா தெரி­வா­கிய நிலையில், இலங்­கைக்கு மென் அழுத்­தங்­க­ளா­வது கொடுக்­கப்­படும் என்று கரு­தப்­பட்­டது.

ஏனென்றால் அமெ­ரிக்கா தான் இலங்­கையில் பொறுப்­புக்­கூ­றலை முன்­னி­றுத்தி ஜெனி­வாவில் தீர்­மா­னங்­களைக் கொண்டு வந்­தி­ருந்­தது.

ஆனால் அமெ­ரிக்­காவில் ஏற்­பட்­டி­ருக்­கின்ற ஆட்­சி­மாற்றம் ஜெனிவா கூட்­டத்­தொ­டரில் பெரி­ய­ளவில் எதி­ரொ­லிக்கும் என்று கரு­தப்­ப­டு­கி­றது. இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்கள் விட­யத்தில் இருந்து அமெ­ரிக்கா ஒதுங்கிக் கொள்ளக் கூடும் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இது, சர்­வ­தேச சமூ­கத்­துக்கு கொடுத்த வாக்­கு­று­தி­களை காப்­பாற்­றாமல் இழுத்­த­டித்து வரும் இலங்­கைக்கு இன்னும் அதி­க­மான பலத்தைக் கொடுக்கும்.

வாக்­கு­று­தி­களில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு இலங்கைக்குக் கிடைப்பதற்கு அமெரிக்க ஆட்சி மாற்றம் சாதகமாக அமையலாம்.

டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்திகளில் இலங்கையின் இந்த எதிர்பார்ப்பு பிரதிபலித்திருக்கிறது.

வெளிநாடுகளின் விவகாரங்களில் தலையிடாத கொள்கையை ட்ரம்ப் கடைப்பிடிப்பார் என்ற நம்பிக்கையை மகிந்த ராஜபக்சவும் வெளியிட்டிருக்கிறார். ராஜித சேனாரத்னவும் அதே கருத்தைத் தான் வெளியிட்டிருக்கிறார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ட்ரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான அழைப்பை விடுத்திருக்கிறார்.

ஆக மொத்தத்தில், சர்வதேச அரங்கில் இலங்கை அரசுக்கு சாதகமான ஒரு சூழலை மீண்டும் உருவாக்கியிருக்கிறது அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்.

இந்த மாற்றம், சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல், நீதி, அரசியல் தீர்வு போன்றவற்றை எட்ட முடியும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த தமிழர் தரப்புக்கு சாதகமானதாக இருக்காது என்பது உறுதி.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்