Breaking News

யாழ்.குருநகர் பகுதியில் மூன்று மாணவர்களை காணவில்லை



யாழ்.குருநகர் பகுதியில் விளையாடச் செல்வதாக கூறிச்சென்ற மூன்று மாணவர்களை காணவில்லையென யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்.சென் பற்றிக்ஸ் கல்லூரியில் தரம் 9இல் கல்விகற்கும் தர்மஜோதி ராஜ்குமார் (வயது-14), ஹென்றிமோன் அபிசேன் (வயது-14), விசுப்டியோன் (வயது-14) ஆகிய மாணவர்கள் நேற்று (திங்கட்கிழமை) மாலை விளையாடச் செல்வதாக கூறி வெளியில் சென்று இதுவரை வீடு திரும்பவில்லை.

இதனையடுத்து குறித்த மாணவர்களின் பெற்றோரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, குறித்த மாணவர்கள் பற்றி தகவல் அறிந்தவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.