கொலை அச்சுறுத்தலென பாதுகாப்புக் கோரிய கருணா!
முன்னாள் புலி உறுப்பினர்கள் தம்மை கொலை செய்ய முயற்சிப்பதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்ட முன்னாள்புலி உறுப்பினர்கள் சிலர் என்னைக் கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
அண்மையில் இவ்வாறு முயற்சி மேற்கொண்ட புலி உறுப்பினர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். எனவே எனது பாதுகாப்பிற்கு மேலும் சில காவல்துறை அதிகாரிகளை வழங்குவது பொருத்தமானது.
எனது பாதுகாப்பிற்கு நான்கு காவல்துறை உத்தியோகத்தர்கள் வழங்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதல்ல. குறைந்தபட்சம் இன்னும் மூன்று நான்கு உத்தியோகத்தர்கள் வழங்கப்பட வேண்டும்.
எனக்குப் மேலும் பாதுகாப்பு வழங்குமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.