வாக்குறுதிகளில் நம்பிக்கையில்லை; போராட்டம் தொடர்கின்றது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்றும் தொடர்கின்றது.
குறித்த கடிதத்தில் புதுக்குடியிருப்பில் 682 ஆவது படைப்பிரிவினால் சுவீகரிக்கப்பட்ட பொதுமக்கள் 29 பேரினுடைய 7.75 ஏக்கர் காணி 2 வாரத்தில் விடுவிக்கப்படும் என்றும் மீதமுள்ள 29 பேரின் 10 ஏக்கர் காணி இராணுவ முகாமில் அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றிய பின்னர் மூன்று மாதத்திற்குள் விடுவிக்கப்படும் என்றும் பொன்னம்பலம் வைத்தியசாலைக் காணி விடுவிப்பதற்கு 6 மாத காலம் தேவைப்படுவதாகவும் இதன்படி போராட்டத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தப்பட்டது.
எனினும் புதுக்குடியிருப்பு மக்கள் உடன்படாத நிலையில், 7.75 ஏக்கர் காணிக்குள் தங்களை விடும்வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து இன்யை தினமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொதுமக்களால் ஆரம்பிக்கப்பட்ட நிலமீட்புப் போராட்டம் இன்று இருபத்தேழாவது நாளாக தொடர்கின்றது.