பிரான்சில் மாவீரர் நினைவுத்தூபி திறந்துவைப்பு(காணொளி)
பிரான்சில் தமிழீழ மாவீரர் நினைவு தூபி திறந்து
வைக்கப்பட்டுள்ளது. "பிரான்சில் கார்ஜ்-சார்சல்" தமிழ் சங்கத்தின் வேண்டுதலில் சார்சல் மாநகர சபை உதவியுடன் நிறுவப்பட்ட மாவீரர் நினைவு தூபி திரை நீக்கும் நிகழ்வு இன்று 17-05-2017 இடம் பெற்றது.
இத் தூபி தமிழீழ விடுதலை போராட்டத்தில் முதல் வீரச்சாவை தழுவிய மாவீரர் லெப்டினன்ட் சங்கர் அவர்களுடைய திரு உருவம் பொருந்தியதாக அமைக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவை தழுவிய மாவீரர்கள் நினைவோடும்,தமிழ் இனப்படுகொலையில் படுகொலை செய்யப்பட்ட மக்களையும் , தமிழீழ விடுதலைப் போரில் மனித நேய செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்ட மனித நேய பணியாளர்கள் நினைவாகவும் இத் தூபி நிறுவப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் சார்சல் மாநகர நகர பிதா கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார் . மாவீரர் நாள் கார்த்திகை 27 ஐ தமிழர்களுடைய தேசிய நாளாக சார்சல் மாநகர சபை அறிவிப்பதாக நகர பிதா தெரிவித்தார்.
முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்