Breaking News

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று
எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று அதே இடத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வஞ்சலி நிகழ்வில், வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மும்மதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.





இவ்வஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை வடக்குமாகாண முதலமைச்சர் ஏற்றிவைத்து நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பொதுச்சுடரினை ஏற்றியதைத் தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்