Breaking News

நாம் வீதியில் கிடக்க இராணுவம் சுகபோக வாழ்க்கை! – கேப்பாபிலவு மக்கள் வேதனை!

“எங்கள் பூர்வீக நிலத்தில் குடியமர்வதற்கு நாம் வீதியில் அமர்ந்து போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.”- என்று வேதனையுடன் தெரிவித்தனர் கேப்பாபிலவு மக்கள்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.

அவர்களின் போராட்டம் இன்றுடன் 137ஆவது நாளை எட்டியுள்ளது. அவர்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்படவில்லை.

தமது காணிகளுக்காக தொடர்ச்சியாக நடத்திவரும் போராட்டத்தால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த மக்கள் தமது காணிகளில் இராணுவத்தினர் வருமானம் பெற்று சுகபோகமாக வாழ்கின்றனர் என்றும் விரக்தியுடன் தெரிவித்தனர். வெறுமனே வாக்குறுதிகளை வழங்கிச் செல்லாது, காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.