Breaking News

ரவிகரனிடம் விளக்கம் கோரினார் முதலமைச்சர்!

வடக்கு மாகாண சபை­யின் முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர் ரவி­க­ர­னுக்கு எதி­ரா­கப் பொது அமைப்­புக்­கள் சுமத்­தி­யுள்ள நிதி மோச­டிக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விளக்­க­ம­ளிக்­கு­மாறு கேட்­டுள்­ளார். 

வட­மா­காண சபை முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். 
வடக்கு மாகாண அமைச்­ச­ரவை மாற்­றம் தொடர்­பில் பர­ப­ரப்­பா­கப் பேசப்­பட்டு வரும் நிலையில், முல்­லைத்­தீவு மாவட்­டத்­திற்கு அமைச்­சுப் பதவி கொடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வலி யுறுத்தப்பட்டு வரு­கின்ற நிலை­யி­லுமே, முத­ல­மைச்­சர் மேற்­கண்ட நட­வ­டிக்­கையை எடுத்துள்ளார். ரவி­க­ர­னுக்கு எதி­ராக அந்த மாவட்­டத்­தி­லுள்ள சில அமைப்­புக்­க­ளால் முத­ல­மைச்­ச­ரி­டம் மனுக் கொடுக்­கப்­பட்­டி­ருந்­தது. நிதி கையா­டல்­க­ளில் ஈடு­பட்­டார் என்று அவற்­றில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் பதி­ல­ளிக்­கு­மாறு – தன்­னிலை விளக்­கத்தை வழங்­கு­மாறு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் சில தினங்­க­ளுக்கு முன்­னர் ரவி­க­ர­னுக்­குக் கடி­தம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.