Breaking News

20 ஆவது சட்டவரைபுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்காது – சுமந்திரன்!

அரசாங்கத்தினால் முன்வைக்கப்ப ட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட வரைபு திருத்தச்சட்ட வரைவின் தற்போதைய வடிவத்துக்கு எந்த வொரு சூழலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளிக்காது என்று தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மாகாண சபையைக் கலைக்கும் அதிகாரத்தை நாடா ளுமன்றத்துக்கு வழங்கும் இந்தச் சட்டம் தொடர்பாக அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தவில்லை. இந்தச் சட்டவரைபு தொடர்பாக ஏனைய கட்சிகளுடன் கதைப்பதால் தேவையற்ற பிரச்சனை களைத் தவிர்க்கலாம். 

ஆனால் ஏனைய கட்சிகளின் ஒப்புதலுடன் இந்த சட்டவரைவை அரசாங்கம் மீண்டும் அறிமுகப்படுத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கு ஆதரவாக நிச்சயம் வாக்களிக்கும். 

மாகாணசபைத் தேர்தலை பிற்போடுவதற்காக மாத்திரமே இந்த சட்டத் திருத்த வரைவைக் கொண்டு வருவதை ஏற்க முடியாது” என்றும் அவர் கூறினார். 20 ஆவது திருத்தச்சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்கு, 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு முக்கியமாகும்.